Saturday, 2 June 2018

ஜைன அறவோர்கள் இயற்றிய தமிழ் நூல்கள்: Jain-Tamil-books

 அன்புநெறியின் மறுபெயர்சமணசமயம்;  சமணம்,ஜைனம்என்றும்அழைக்கப் பெறுகிறது.கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியப் பெருநாட்டில் தோன்றிய சமயம்-தொன்மைமிகு சமயம்-சமணம் ஆகும்தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் தோன்றித் தழைத்திருந்தது சமணம்.சமண அறவோர்கள்-தமிழ் அன்னைக்கு அணிவித்த நூலணிகள் ஏராளம்-ஏராளம்

சுருங்கச் சொன்னால் சமணர் தமிழுக்குத் தந்திட்ட நூல்களை மட்டும் அப்புறப்படுத்திப் பார்த்தால்தமிழ் இலக்கிய உலகமே வெறிச்சோடிக் கிடக்கும். அந்த அளவுக்கு அரும்பெரும் நூல்களை-சமணத் தமிழ்ப் புலவர்கள் ஆக்கித் தந்துள்ளனர்.
அந்நாள் தமிழ் மன்னர்களும் அந்த அரும்பணிக்கு ஊக்கம் தந்துள்ளனர்.

தமிழகத்தில் சமண நெறியைத் தழுவிய புலவர்கள் ஏராளமாக வாழ்ந்திருக்கின்றனர். ஒரு காலத்தில் சமணம், தமிழகத்தில் மிகமிகப் பரவியிருந்திருக்கிறது. "உலகம் எவராலும் படைக்கப்பட்டதல்ல" என்ற உயர் கொள்கையைக் கொண்டிட்ட சமண சமயத்தைப் பலர் விரும்பி ஏற்றிருக்கின்றனர்.தமிழகத்திலே சமணம் தோன்றிட்ட வரலாறு, வளர்ந்திட்ட கதை, இலக்கியங்களில் இடம் பெற்றிட்ட நிலை இவற்றை எல்லாம் நன்கு ஆய்ந்து, "தமிழகத்தில் ஜைனம்" என்னும் அரியதொரு நூலை ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்கள் உருவாக்கித் தந்துள்ளார்கள். அவர்களின் ஆய்வு, மிகச் சிறந்த முறையில் அமைந்திருக்கிறது. நூலாசிரியர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜைனத்தைப் பாராட்டியுள்ளார் என்று யாரும் என்னிடத் தேவையில்லை. ஜைனம் போற்றுதலுக்குரியது என்பதை, மேனாட்டு அறிஞர்களும், நம்நாட்டு அறிஞர் பெருமக்களும் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார்கள்.நோபெல் பா¢சு பெற்ற, இந்திய விஞ்ஞானி டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ், ஜெர்மன் நாட்டுப் பேராசிரியர் ஜி.புஹ்லர், செக்கோஸ்லோவேகிய நாட்டு அறிஞர் டாக்டர் கமில் சுவலேபில் போன்றவர்களும், நமது தமிழகத்தைச் சார்ந்த சர்.ஆர்.கே. சண்முகம், தமிழ்த் தென்றல் திரு.வி.. திரு. எச்..கிருஷ்ணபிள்ளை ஆகிய பெருமக்களும் சமணத்தைப்போற்றிக்கூறியுள்ளவற்றை நூலாசிரியர் ஆங்காங்கே எடுத்துக்காட்டியிருப்பது சிறப்புடையதாகும். இருந்தாலும் ஓர் ஏக்கம் என் இதயத்தில் எழுகிறது - சமண சமயத்தையும் அதன் நெறிகளையும் பாராட்டிப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியுள்ள வாசகங்கள் இடம் பெறவில்லையே என்ற ஏக்கம்தான் அது; அடுத்த தொகுப்பில் ஆசிரியர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்கள் எனது ஏக்கத்தைப் போக்குவார்கள் என்று நம்புகின்றேன்.மொத்தத்தில்"தமிழகத்தில் ஜைனம்" என்னும் இந்த நூல் மிகச் சிறந்த ஆய்வு நூல் மட்டுமல்ல-தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் இடம்பெறுவதற்குரிய தகுதி படைத்துள்ள அரிய நூல் என்று குறிப்பிடலாம்.நூலாசிரியர் திறம் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

மு. கருணாநிதி
முதலமைச்சர்.

23-12-1974


                                                                திருடி.எஸ்ஸ்ரீபால்                              
                                                    அவர்கள்,தமிழ்நாடு ஜைன சங்கம்,


"தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஜைனர்களின் பெருமைக்குரிய வகையில் அரும்பெரும் தொண்டு செய்து இருக்கிறார்கள். சைவர்கள், வைஷ்ணவர்கள், பெளத்தவர்கள் ஆகியோர் ஆற்றி இருக்கும் தமிழ் நூல்களை எல்லாம் ஒருங்கு சேர்த்துப் பார்த்தாலும்கூட, ஜைனர்கள் செய்திருக்கும் அளவுக்குத் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப், சைவர்களும் வைஷ்ணவர்களும் தமிழில் தோத்திரபாக்கள் நிறையப்பாடி இருக்கிறார்கள். கலம்பகங்கள் தாதிகள், புராணங்கள் முதலியன பாடி இருக்கிறார்கள். இவையாவும் சமயச்சார்புடைய நூல்கள் ஆகும் என விளக்கியுள்ளார்கள்.இவ்வாறே அறிஞர்கள் சிலர் தமிழ் இலக்கியங்கள் வரலாறு என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூல்களில் ஜைன அறவோர்களின் தமிழ்த் தொண்டின் சிறப்பினைப் பாராட்டி எழுதியுள்ளார்கள் அப்பொ¢யோர்களில் சிலர் பெயர்களையும் நூல்களையும் பற்றி மட்டும் குறித்துச் சொல்லுகின்றேன்
1 History of Tamils      திரு P.T. ஸ்ரீனிவாச அய்யங்கரர் அவர்கள்
2. History of Tamil Language and Literature,     திரு. S. வையாபுரி பிள்ளை அவர்கள்
3. Tamil Varalaru, திரு. K. ஸ்ரீனிவாசப் பிள்ளை   4. History of Tamil Literature
திரு.T.K. சதாசிவபண்டாரத்தார் அவர்கள்    5. Tamil Varalaru. திரு. R. ராகவ அய்யங்கார் அவர்கள்    6. History of Tamil Literature.
திரு. M.S. பூர்ணரலிங்கம் பிள்ளை அவர்கள்     7. Tamils 1800 years ago.
திரு. கனகசபை பிள்ளை அவர்கள்      8. தமிழும் சமணமும்
திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்

ஜைன அறவோர்கள் இயற்றியருளிய           தமிழ் நூல்கள்:
*    இக்குறியிட்டுள்ள நூல்கள் வெளியாகிய நூல்கள்,
                                              மற்றவை மறைந்து போனவை 
               உரை ஆசிரியர்களின் 
                                              மேற்கோள்களினின்றும் திரட்டப்பட்டவைகளாகும்    
                            
1. இலக்கியம்
 1. பேரகத்தியம் (மறைந்து போனவை)

 2. தொல்காப்பியம் *       கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டினதாகத் கருதப்படும் தொல்காப்பியமே இதுவரை கிடைத்துள்ளது தமிழ் நூல்களில் தொன்மையும், முதன்மையும் உடையது. ஆசிரியர்     தொல்காப்பியர் ஜைன அறவோரே 
அக்காலத்தில் வைதிக சமயமும் ஜைன சமயமுமே இருந்தன. வேறு சமயங்கள் கிடையா. இவ்வுண்மையை தொல்காப்பியத்திலேயே காணலாம்.முதல் நூல், வழி நூல், சார்பு நூல் என நூல்கள் பிறந்த முறையினை முதன்முதல் உரைத்தவர்கள் ஜைனர்களே! இவ்வுண்மையை இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதிய முதல் உரையாசிரியர்.
"முதல் வழி சார்பென நூன்மூன்றாகும்" எனக் கூறி முதல் நூல் இன்னதென விளக்குகையில் தொல்காப்பியத்திலுள்ள கடவுள் இலக்கணத்தை,
"முதல் வழி சார்பென நூன்மூன்றாகும்" 
எனக் கூறி முதல் நூல் இன்னதென விளக்குகையில் தொல்காப்பியத்திலுள்ள கடவுள் இலக்கணத்தை,எனக் காட்டியுள்ளதால் முதல் நூல் உரைத்தவர் வினையினின்றும் நீங்கி விளங்கிய அறிவின் (கேவல் ஞானத்தையுடைய) அருகப் பெருமானே என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.இவ் வராலற்றுண்மையை நன்னூலாரும்,யாபெருங்கலக்காரிகை உரையாசிரியர் குணசாகரரும், அகப்பொருள் விளக்கம் ஆசிரியர் நாற்கவி ராஜநம்பியாரும் மேலே கூறிய வழி, முதல் சார்பு நூலின் விளக்கத்தைக் கூறியுள்ளார்கள்.
சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர்

"பூமலியசோகி னீழற் பொலிந்த எம்மடிகள் முன்னாள்

எம்மா முதல் நூல் சொல்லக் கணதரா¢யன்ற பாலால்

தாமொரு வழிநூல் சொல்லச் சார்புநூல் பிறருஞ்சொல்ல

தோமிலா மூன்று நூலும் முவமெனவுதித்த வன்றே"

என விரிவாகக் கூறியுள்ளார் தொல்காப்பியர் ஜைன அறவோர் என்பதை மெய்ப்பிக்க இ·தொன்றே சாலும் எனினும் மேலும் சிலவற்றையும் காண்போம்.துறவறம் துறவிகளைப்பற்றிய செய்தியில் தாபஸர் என்றும், தவத்தோர் என்றும் இருவகைத்துறவிகளைப்பற்றி விவா¢த்துள்ளார். தாபஸர் எனில் ஆஸ்ரமங்களுடனும், மனைவி மக்களுடனும். அக்னி மத்தியில் தவம் புரிதல்போன்ற கோலத்துடனும் விளங்குவோர். தவத்தோர் எனில் அருளுடைமை, கொல்லாமை, புணர்ச்சி விழையாமை, பொய்யாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை போன்றவையோடு விளங்குபவர். இவைகளின் விரிவை தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இளம் பூரணர் உரையைக் காண்க.
இல்லறம்காமம் சான்ற கடைக்கோட் காலை என்ற சூத்திரத்தாலும் கட்டமை ஒழுக்கத்து என்ற சூத்திரத்தாலும் இல்லற நெறிகளை விளக்கியுள்ளார்.
நிலையாமை'காஞ்சிதானே பெருந்திணைப் புறனே' என்ற சூத்திரத்தால் அறியவும்.

உயிர் வேறு, உடல் வேறு   "காலம், உலகம், உயிரே உடம்பே"

-தொ. பொ. கிளவி 58

"சென்ற உயிரின் நின்ற யாக்கை"

- தொ. பொ. பொருளியல் 8

உயிர் வகைகள்: அறுவகை உயிர்களையும், அவைகளின் இயல்புகளையும் ஜைன சமய அறவோர்கள் அறிவியல் முறையில் ஆராய்ந்து கூறியுள்ளனர். வேறு எச்சமயத்திலும், உயிர் வகைகளின் விளக்கம் கிடையா. அவ்விளக்கத்தின் விவரங்களை தொல்காப்பியத்தில் காணலாம்.

"ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

யிரண்டறி வதுவே யதனொடு நாவே

மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே 

நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே

வைந்தறி வதுவே யவற்றொடு னுவியே

யாறறி வதுவே யவற்றொடு மளனே

நோ¢தி னுணர்ந்தோர் நெறப் படுத்தினரே
-தொ.பொ. மரபியல் 
தொல்காப்பியம்    எழுத்துதிகாரம்  483   , சொல்திகாரம்  463 , பொருளதிகாரம்  656  = 1602


தொல்காப்பியம்
இளம் பூரணர் உரையைக் காண்க.
 ==============================

3. திருக்குறள்  எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி  உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது   திருக்குறள் இயற்றியவர் ஜைன அறவோரே.

"இகழ்ச்சியிற் கெடுவார்களை யெண்ணுகமகிழ்ச்சியின் மனமைந்துறும் போழ்தெனப்புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்டிகழ்ச்சி சென்ற செம்பொருள் மடிமன்னரே"என்ற பாவால் திருக்குறளைப் புகழ்ச்சி நூல் (Famous Book) எனப் போற்றிப் புகழ்ந்துள்ளார். தோலா மொழித்தேவர் தமது சூளாமணிக் காவியத்தில் கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில் உள்ளத்தெழுந்த உணர்ச்சி இன்று உலக அறிஞர்களில் உள்ளத்தே உதித்தது போன்று ஈடு இணையற்ற அரிய நூல் எனத் திருக்குறளை உலகெல்லாம் போற்றிப் தங்கள் தங்கள் மொழிகளில் பெயர்த்துப் படித்து இன்புறுகின்றனர்.இத்தகு தலைசிறந்த அறநெறி நூலை உலகுக்கு அளித்த அச்சான்றோரின் வரலாற்றை நானிதுவரை அறியவியலவில்லை. புகழ்ச்சி நூலின் ஆசிரியா¢ன் வரலாற்றையோ சமயத்தையோ எழுதிக்காட்டவில்லை.இவ்விருபதாம் நூற்றாண்டின் புலவர் பெருமக்கள் பலர் திருக்குறளாசிரியா¢ன் சமயத்தைப்போற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். அப்புலவர்களில் சிலர் திருக்குறளை ஆழ்ந்துப் படித்து அக்கொள்கைகளை கொண்டு ஜைன சமயத்தவரே என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள் வேறு சிலர் திருக்குறள் கொள்கைகளை ஆராய்ந்தறிந்து குறளாசிரியர் சமயம் உள்ளத்தே உருவாகியும், ஏதோ காரணத்தால் திருக்குறள் ஒரு பொதுமறை என்றும், அதன் ஆசிரியர் ஒரு சமரசவாதி என்றும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். மூன்றாவதாகக் குறிப்பிடும் புலவர்கள், ஆழ்ந்த சமயப்பற்றுடையவர்கள். திருக்குறளைத் தங்கள் சமய நூலாகக் கொள்ளவேண்டும் மென்பதையே குறிக்கோளாகக் கொண்டு அதன் ஆசிரியரைக் தங்கள் தங்கள் சமயத்தைச் சார்ந்தவர் என வலிந்து கூறிவருகின்றனர் 

திருக்குறளிலுள்ள கொள்கைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தங்கள் சமயக் கொள்கைகளுக்கு முரண்பாடானது என்பதை அறிந்தும் துணிந்தும் ஆசிரியரைத் தம்மதத்தைச் சார்ந்தவரே என சாதிப்பவர்கள் ஆவர்.இம்மூன்று துறையினரும், திருக்குறள் மறைக்குப்பின் தமிழகத்தில் பல மதங்கள் தோன்றி வளர்ந்த காலத்தில், திருக்குறளாசிரியா¢ன் மதத்தைப் பற்றி ஆராய்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திருக்குறள் அறநெறிநூல் என்பதை எவரும் ஒப்புக்கொண்ட உண்மை.

இந்நல்லறங்கள் யாவும் பகவான் விருஷபதேவர் காலம் முதல் வழிவழியாக வந்துள்ளவை. ஆரம்ப காலத்தில் அறம் என்றே அழைக்கப்பட்ட கொள்கைகள். பிற்காலத்தால் மக்கள் வாழ்க்கைப் பண்பிற்காக உரைத்தவையாகையால் மாணவ தருமம் அதாவது மக்கள் அறம் என அழைத்தனர். அதன் பின்னர் மாக்கா என பிராகிருத மொழியில் அழைத்தனர் மாக்கா எனில் மார்க்கம் அல்லது வழி என வழங்கப்பெற்றது. சிந்து நதிப் பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுச் செய்திகளில் ஜினதர்மம் என பொறிக்கப்பட்டுள்ளது. வேத கால மக்கள் தங்கள் வேதங்களில் விரத்ய-தருமம் அஹிம்சா தருமம் என்றும் அழைத்துள்ளனர் உபநிஷத்துகளில் அர்கத்தர்மாவென்றும் ஆத்ம தர்மம் என்றும் குறிக்கப்பட்டுள்ளன.
புத்த சமய நூல்களில் நிக்கந்த தருமம் எனப் போற்றப்பட்டுள்ளது. இந்தோ கி¡£க் வரலாற்றில் ஸ்ரமண தர்மா எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் சமயம் அல்லது மதம் என்ற பெயரால் பலகொள்கைகள் தோன்றியமையால் ஆதி ஜினரால் அருளப்பெற்ற அறநெறியை ஜினவறம் அல்லது ஜினசமயம் என மதவாதிகள் அழைத்து வருகின்றனர். இத்தகு சிறப்பமைந்த அறநெறிகளைத் தம் பெயரால் அமைக்காது அறநெறி எனப்பொது நெறியாகவே அமைத்ததால் அப்பெருமகன் வழிவந்த எல்லா அறவோர்களும் தங்கள் தங்கள் நூல்களில் அறம் அறம் என்றே அக்கொள்கைகளை அமைத்து இலக்கியங்களிலும் நீதி நூல்களிலும் இயற்றியுள்ளதை அறிஞர் பெருமக்கள் அந்நூல்களை ஆழ்ந்து படித்து அறிதல் வேண்டும்.  இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் 


சென்ற நூற்றாண்டிலே வெளியான அச்சுப் புத்தகங்களின் முகப்பிலே அச்சுக் கூடத்தின் பொறுப்பாளர், அல்லது உரிமையாளர் பெயர்களும் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டன. நூலாசிரியர் பெயரைவிட அச்சுக்கூடத் தலைவர் பெயர் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டது. சில அச்சுப் புத்தகங்களில் அச்சுக் கோத்தவரின் பெயரும் அச்சிடப்பட்டது.
click Tirukural to read fully with vedio.
 
Tirukkural

*   Thiruvalluva(nainar)   bce 31 add 2018 ie thiruvaluvar andu 2049 three


திருக்குறள்  தமிழ் ஓலைச் சுவடிகள்

==========================
பெருங்காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணங்களோடு கவிஞர்களால் இயற்றப்பெறுவது. ஐம்பெருங் காப்பியங்கள் எனப் போற்றப்பெறுவன  
சீவகசிந்தாமணிசிலப்பதிகாரம், வளையாபதி இதனைஇயற்றியவர் 
ஜைன அறவோரே      
மணிமேகல,குண்டலகேசி இதனை இயற்றியவர் பெளத்தவர்கள் 

4.சிலப்பதிகாரம் *   

                                                          இளங்கோவடிகள் 

இளங்கோவடிக காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு; அடிகள் = 5001 சிலப்பதிகாரத்தின் அடிப்படையாக மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன.1) அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும் 2) புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர் 3) ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்என்பன அவை. இவற்றோடு தமிழர்தம் நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகவும் திகழ்கிறதுசிலப்பதிகாரம்.இதில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் உண்டு. சமண, பௌத்த, வைதீக நெறிகளும் உண்டு. 

சிலப்பதிகாரத்தின்  தமிழ் ஓலைச் சுவடிகள்
pm0111_02.pdf                 

5. சீவகசிந்தாமணி
திருத்தக்க மகாமுனிகள் நமது செந்தமிழ்ப் புலவர்களிலே தேவர் என்னும் பெயர் மூன்று புலவர்களைக் குறிக்கும். அவர் திருவள்ளுவனார், திருத்தக்கதேவர், தோலாமொழி ஆகிய மூவருமாம்ஆயினும் தேவர் என்னும் இந்தப் பெயர் திருத்தக்க தேவர்க்கே 
சிறந்துரிமையுடையதாகும். திருத்தக்கதேவர் சோழர்குலத் தோன்றல் என்று கூறப்படுகின்றார். 3145 viruthapa 
இவர் காலம் கி. பி. இரண்டாம நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றாண்டிற்கும்
 இடைநிகழ்ந்த காலத்தில் ஒரு பகுதியாக விருக்கக்கூடும் என்று தெரிகிறது.  
இவர் அந்தக் காலத்திலே தமிழகத்திலே பெரிதும் செல்வாக்குற்றிருந்த ஆருகத சமயத்தைச் சார்ந்தவராவார். மேலும் இளமையிலேயே இவர் துறவியாகி யிருந்தவர். பல கலையும் கற்றுத் தேர்ந்து அறிவுக்கடலாகத் திகழ்ந்தவர். 
திருத்தக்கதேவர் சான்றோரிணக்கம் கருதி மதுரை மூதூரை யடைந்து
 ஆங்குச் சங்கப்புலவர்களோடு கூடி அளவளாவி யிருந்தனர் என்றும், 
அப்பொழுது ஆங்கிருந்த தமிழ்ப்புலவருட் சிலர் ஆருகத சமயத்தவர் 
துறவு முதலியவற்றைப் பாடுவரேயன்றிக் காமச்சுவை கெழுமிய
 காப்பியம் பாடவறியார் என்று கூறினர் என்றும், அது கேட்ட தேவர் தாம் அக் குறையை 
யகற்றக்கருதிக் காமச்சுவை மிக்கஇச் சீவக சிந்தாமணியை இயற்றிப் பெரும்புகழ் 
எய்தினர் என்றும்ஒரு வரலாறு கேட்கப்படுகின்றது.இன்னும் காப்பியம் செய்யக் கருதிய
 தேவர் தங் கருத்தினைத் தம் ஆசிரியர்க்குக் கூறியபொழுது அந்த ஆசிரியர் தேவருடைய
 புலமையாற்றலை அளத்தற் பொருட்டு அப்பொழுது ஆங்கே ஓடிய ஒரு நரியைச் சுட்டிக்காட்டி
 ‘நீர் காவியம் பாடு முன்னர் இந்த நரியைப் பொருளாகவைத்து ஒரு சிறு நூல்
 இயற்றிக் காட்டுக' என்று பணித்தனர் என்றும், தேவரும் அப்பொழுதே 
ஆசுகவியாக விரைந்தொரு சிறு நூல் பாடி அதற்கு 
நரி விருத்தம் என்று பெயரிட்டு ஆசிரியர்க்குக் காட்டினர் என்றும், அந்நூலின்
 அருமையுணர்ந்த ஆசிரியர் ‘இனி நீயிர் நினைந்தபடியே 
பெருங்காப்பியஞ் செய்க ! ’ என்று பணித்தனர் என்றும், அப்பணி 
தலைமேற்கொண்டுதேவர் அப் பெருங்காப்பியத்திற்குக் கடவுள் 
வாழ்த்துப் பாடி வழங்கும்படி ஆசிரியரை வேண்ட


                                                         திருத்தக்க தேவர்

சீவகசிந்தாமணி  தமிழ் ஓலைச் சுவடி

   sivaka sinthamani olai swadi

jeevaka sinthamani u v sa



6  .நரி விருத்தம்  *

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0342.pdf

சிறு காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் பெருங்காப்பிய இலக்கணத்தில் ஏதேனும் சில குறைந்து வருவதாகவோ அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஏதேனும் ஒன்று குறைந்து வருவதாகவோ கவிஞர்களால் இயற்றப்பெறுவது ஆகும்.
1.உதயணகுமார காவியம், 2. யசோதர காவியம், 3.சூளாமணி, r. நீலகேசி, 5.நாககுமார காவியம் ஆகியவை 5 சிறுகாப்பியங்களாகும்


=============================
7. சூளாமணி *

சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர்.
இவர் சமண சமயத்தவர். காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன்.
 இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்துவந்துள்லான். மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.செங்கண் நெடியான் சரிதம் என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார். இந்நூலில் இரத்தின பல்லவ நகரம் “சூளாமணியின் ஒளிர்வது”, “அருஞ்சயன் அவனை நங்கள் மலைக்கோர் சூளாமணி எனக் கருது”, திவிட்டன் (சூளாமணிக் காப்பியத் தலைவன்) குன்றேந்தி நின்ற கோலம் “முடிமேல் சூளாமணி முளைத்த சோதி” போன்றது; முத்தி நிலை அடைந்த திவிட்டன் தந்தை பயாபதி மன்னன் “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என நான்கு இடங்களில் சூளாமணி என்ற சொல் இடம் பெறுகின்றது. இவை கொண்டு இந்நூலுக்குச் சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று என்பர். மேலும் வடமொழி மூலமான மகாபுராணம் சைனருக்குச் சூளாமணி போன்றது. எனவே அந்நூலின் ஒரு பகுதியான இந்நூலுக்கும் சூளாமணி என்ற பெயர் வழங்கலாயிற்று என்றும் கூறுவர். இந்நூலாசிரியர் அவனி சூளாமணிஎன்ற பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர்.

சூளாமணி என்ற காப்பியத்தை ஐஞ்சிறு காப்பியம் என்றபாகுபாட்டில் அடக்கியதன் பொருந்தாமைஇந்தப்பகுதியிலுள்ள ஐந்துகாப்பியங்களுமேசமண சமயச் சார்புடையன .உயிர்க்கொலை கூடாது; தெய்வங்களுக்கு உயிர்ப்பலி 

கொடுத்தல்மிகப் பெரிய பாவம் என்ற கருத்து 

யசோதர காவியம்  . நீலகேசியில் சிறப்பிடம்பெறுகிறது என்பதை அறியலாம

 Choolaman

=======================

 8. பெருங்கதை *    என்னும் நூல் கொங்கு வேளிர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இதன் காலம் ஏழாம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறது.

தொன்றுதொட்டு நூல்கள் எல்லாம் பனை ஒலைகளில் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகளாக இருந்தன. ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழைய தமிழ் நூல்கள் முதல் முதலில் அச்சுப் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டன. சென்ற பத்தொன்பதாவது நூற்றாண்டிலே தான். 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே 16, 17, 18-ஆம் நூற்றாண்டு களிலே அச்சு இயந்திரங்கள் நமது நாட்டில் வந்திருந்தபோதிலும், அந் நூற்றாண்டு களில் பழைய தமிழ் இலக்கிய நூல்கள் அச்சிடப்படாமல், கிறிஸ்துவ சமய நூல்கள் மட்டும் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் அச்சியந்திரங்கள் கிறிஸ்துவப் பாதிரிமாரிடத்திலும் போர்ச்சுகீசு, பிரான்சு, ஆங்கில ஆட்சியாளரிடத்திலும் இருந்தன: நம் நாட்டவர் கையில் அச்சு இயந்திரங்கள் அக் காலத்தில் இல்லை. ஆகவே, அந்த நூற்றாண்டுகளில் பழைய தமிழ் நூல்கள் அச்சிற் பதிப்பிக்கப்பட வில்லை, 19-ஆம் நூற்றாண்டிலே, கி.பி. 1835-ஆம் ஆண்டில் சுதேசிகள் அச்சியந்திரம் வைக்கக் கூடாது என்னும் தடை நீக்கப்பட்டு, இந்நாட்டினரும் அச்சியந்திரம் வைக்கலாம் என்னும் உரிமை கிடைத்த பிறகு, நம்மவரும் அச்சியந்திரம் நிறுவி, ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழைய நூல்களையும் புதிய நூல்களையும் அச்சிற் பதிப்பிக்கத் தொடங்கினார்கள்
ஏட்டுச் சுவடிகளாயிருந்த தமிழ் நூல்களைச் சென்ற 19-ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர், முகவை இராமாநுச கவிராயர், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், களத்தூர் வேதகிரி முதலியார், ஆறுமுக நாவலர், மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை, தில்லை யம்பூர் சந்திரசேகரக் கவிராச பண்டிதர், வீராசாமி செட்டியார், ராவ் பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை, டாக்டர் உ.வே. சாமிநாதஐயர் முதலியவர்கள்.
ஏட்டுச் சுவடியாக இருந்த பழந்தமிழ் நூல்கள் சென்ற நூற்றாண்டில் முதன் முதலாக அச்சிற் பதிப்பிக்கப்பட்டன என்பது உண்மை. ஆனால், எந்தெந்த நூல்கள் யார் யாரால் முதன்முதல் அச்சிடப்பட்டன என்பதற்கு முறையாக எழுதப்பட்ட குறிப்புகளோ வரலாறுகளோ கிடையாது சென்ற நூற்றாண்டில் முதன் முதல் அச்சிடப்பட்ட பிரதிகள் பெரும்பாலும் இப்போது மறைந்து விட்டன. இதனை தெளிந்து கண்டுபிப்பதே ஓர் ஆராய்ச்சியாகும். முதன் முதல் அச்சியந்திரம் வந்த 16-ஆம் நூற்றாண்டிலேயே ஏட்டுச் சுவடிகள் அச்சிடப்பட்டிருக்குமானால், பல நூல்கள் மறைந்து இருக்கமாட்டா. 16-ஆம் நூற்றாண்டுக்கும் 19-ஆம் நூற்றாண்டுக்கும் இடையே பல ஏட்டுச் சுவடிகள் மறைந்து போயின. தகடூர் யாத்திரை, தத்தாத்திரேயப்பாட்டியல், ஊசிமுறி முதலில் நூல்கள் இக்காலத்தில் மறைந்துபோன நூல்களைச் சேர்ந்தவை.புலவர் பரம்பரையில் வந்தவர்கள் எல்லோரும் புலவர் அல்லர். அந்தப் பரம்பரையில் கல்வியருமையறியாத பதர்களும் இருந்தனர். இவர்கள் நூல்களின் பெருமையறியாமலும், பழுதான அருமை நூல்களைப் பிரதி எழுதி வைக்காமலும் இருந்தனர். அன்றியும் பதினெட்டாம் பெருக்கில் தம் வீட்டு ஏடுகளைக் கொண்டு போய் வெள்ளத்தில் போடுகிற வழக்கமும் இவர்களிடம் இருந்தது. சிதைந்துபோன ஏட்டுச் சுவடிகளை, அவற்றின் அருமை தெரியாமல், அடுப்பில் போட்டு நெருப்பில் இட்டுக் கொளுத்தியவர்களும் உண்டு. இவ்வாறு அழிந்து போன நூல்கள் பல. அக்காலத்தில் அச்சியந்திரம் இருந்து பழைய நூல்கள் அச்சிடப்பட்டிருந்தால் பல நூல்கள் அழிந்திராமல் உயிர் பெற்றிருக்கும்.அச்சுப் புத்தகம் உள்ள இந்தக் காலத்தில் புத்தகத்தின் அருமை பெருமை தெரிவதில்லை, காசு கொடுத்தால் புத்தகம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையினால். அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகள் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்பது நம்மவரில் பலருக்குத் தெரியாது. பெர்ஸிவல் ஐயர் என்னும் மேல் நாட்டவர் நமது நாட்டுக்கு வந்து 1835-ஆம் ஆண்டுக்கு முன்பு வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியின் ஓலைச் சுவடிப் பிரதியை விலைக்கு வாங்கியபோது பத்துப்பவுன் (ஏறக்குறைய நூற்றைம்பது ரூபாய்) கொடுத்து வாங்கியதாகவும், அதே சதுரகராதி அச்சுப்புத்தகமாக வெளிவந்தபோது அது ஷில்லிங்குக்கு (ஏறக்குறைய 1 ரூபா 14 அணா) விற்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து ஏட்டுச் சுவடிக்கும் அச்சுப்புத்தகத்துக்கும் விலையில் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.ஏட்டுச் சுவடிகளைப் பெறுவது கடினமானதும் அதிகப் பொருட் செலவுள்ளதுமாக இருந்தபடியினாலே,ஜைனர்கள் (சமண சமயத்தவர்) சாஸ்திரதானம்என்னும் ஒரு முறையைத் தமது சமயக் கொள்கையாகக் கொண்டிருந்தார்கள். சாஸ்திரதானம் என்பது, செல்வம் படைத்த ஜைன சமயப் பிரபுக்கள் தமது இல்லங்களில் நிகழ்கிற திருமணம் முதலிய நிகழ்ச்சிகளில், ஜைன சமய நூல்களில் சிலவற்றைப் பல படிகள் எழுதுவித்து, அவற்றைத் தகுந்தவர்களுக்குத்தானமாக வழங்குவது ஆகும். நூல்களை ஏட்டுச் சுவடிகளாகப் படி எழுதுவிப்பது அதிகப் பொருட்செலவுள்ள காரியம். ஏட்டுச் சுவடி எழுதி முடிப்பதற்கு பல நாட்கள் செல்லும். அவர்களுக்குத் தக்க ஊதியந்தரவேண்டும். இதிலிருந்து ஏட்டுச் சுவடிகள் எழுதிவைப்பதன் அருமை உணரலாம்.

இதனை முதன்முதலில் தமிழ் உலகுக்கு அளித்தவர் டாக்டர் உ. வே. சாமிநாதையர்.



  • இந்த மூலத்தில் அச்சேறியுள்ள நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் உ. வே. சாமிநாதையர். பதிப்பு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, முதல் பதிப்பு 1924, ஆறாம் பதிப்பு 2000.
  • குணாட்டியர் என்பவர் பைசாச மொழியில் பிரஹத்கதை என்னும் நூலை இயற்றினார். கங்க மன்னன் துர்விநீதன் இந்த நூலை வடமொழியில் மாற்றினார். இதனை முதல்நூலாகக் கொண்டு கொங்குவேளிர் தமிழில் ‘பெருங்கதை’ நூலை இயற்றினார்.
  • இந்த நூலின் முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11 ஆவது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், இவற்றின் கதையை, பதிப்பித்த ஐயர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதியுள்ளார்.பெருங்கதை  தமிழ் ஓலைச் சுவடி

   Perunkathai olai swadi

 Perunkathai pdf book   பெருங்கதை  தமிழ்

============================

 9. வளையாபதி   nallathnar   A. D 2nd cent  available only 100 venpa

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக எண்ணப்படுவது வளையாபதி.19ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த இவ்விலக்கியம் பின்னர் எப்படியோ அழிந்துவிட்டது. இதன் பிரதியைத் திருவாவடுதுறை ஆதினத்தில் பார்த்ததாக உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிடுகிறார். பின்னர் இதனைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு தேடியபோது, எங்கும் கிடைக்கப் பெறவில்லை என வருத்தத்துடன் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் குறிப்பிடுகிறார்.வளையாபதி காப்பிய ஆசிரியர் யார்? எப்போது இந்நூல் இயற்றப்பட்டது? காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதைதான் என்ன? இந்த வினாக்களுக்கு யாதொரு விடையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு நோக்குகிறபோது, இது ஒரு சமண சமய நூல் என்பது மட்டும் உறுதியாகிறது.சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலானோர் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டுகின்றனர். இந்நூற்பாடல்கள் அறுபத்து ஆறு புறத்திரட்டு நூலில் தொகுப்பட்டுள்ளன. எங்ஙனம், அங்ஙனம் என்ற சொற்கள் எங்ஙனே அங்ஙனே என்று வந்துள்ளன. “இவர் வளையாபதியை நினைத்தால்கவியழகு வேண்டி” எனத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் குறிப்பிடுகிறார். எனவே இந்நூல் கவியழகு மிக்கது என்பது தெரிய வருகிறது. இந்நூற் பாடல்கள் மொத்தம் எழுபத்தி இரண்டு கிடைத்துள்ளன நூலைப் போலவே நூலாசிரியர் யார்? அவர் எந்த ஊரைச் சார்ந்தவர்? எந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்பதெல்லாம் அறியப்படவில்லை. நூற்பாடலைக் கொண்டு இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என யூகிக்கலாம். நூலாசிரியர் இலக்கிய ரசனையுடன் பாடல் புனையும் ஆற்றல் மிக்கவர். அறத்தில் சமண சமயக் கொள்கையில் ஆழ்ந்த பற்றும் பிடிப்பும் கொண்டவர் என்பது கிடைத்துள்ள பாடல்கள் வழி அறிய முடிகிறது.வளையாபதி கதை இன்னதுதான் என்பது அறியப்படாத ஒன்று. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டும் கூட இதன் கதையை அறிய முடியவில்லை.
 வளையாபதி கதை என ஒரு கதை வழக்கில் உள்ளது. அதற்கும் வளையாபதி பாடல் கருத்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணரலாம். கதை வருமாறு:நவகோடி நாராயணன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும், வேறு குலத்துப் பெண்ணையும் திருமணம் செய்ததால், அவனைக் குலத்தை விட்டுத் தள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் துன்பமுற்ற நாராயணன், வேறு வழியின்றி வேறு குலத்துப் பெண்ணைத் தள்ளி வைத்து விடுகிறான். அவளோ, தனக்கு மறுவாழ்வு அளிக்கும்படி காளியை வேண்டுகிறாள். காளியின் அருளால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிப் புகார் நகர் வணிகர் அவையில் ‘தன் தந்தை நாராயணனே’ என்று நிறுவுகிறான். காளிதேவியும் சாட்சி கூறி அதனை மெய்ப்பிக்கிறது. இதனால் குடும்பம் ஒன்றுசேர, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்


Valayahttps://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0062.pdfpathy  

=============================

10. மேருமந்தரபுராணம் 



நீலகேசிக்கு உரை எழுதிய வாமனமுனிவரால் இயற்றப்பட்டது 
மேருமந்தர புராணம்.  இவர் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.


மேரு,மந்தரர் என்ற இருவரின் முற்பிறப்பு வரலாறும் அவர்கள் முக்தி அடைந்ததும் விளக்கப்படுகின்றன. இருவரும் விமல தீர்த்தங்கரரின் கணதரர்கள். (சித்த பதவி என்பது இறுதி நிலையாகிய நிர்வாண நிலை/ மோட்சம். சித்தபதவிக்கு முன் அரஹந்த பதவியை அடைந்த தீர்த்தங்கரர்கள் சமவ சரணத்தில் அமர்ந்து மக்களுக்கு அறவுரை ஆற்றுவர்.
அவர் கூற எண்ணுவன வெல்லாம் ஒலியாக வெளிப்படும். அதற்கு திவ்யதொனி என்று பெயர். அவ்வாறு ஒலிவடிவில் கூறப்படுகின்ற அறவுரைகளைக் கணதரர் இருவர் பின்வரும் சந்ததியினர் பயன்பெற வேண்டுமென்று எழுதி வைப்பர். அதுவே ஆகமம் என்று வழங்கப்படும். ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் இரண்டு கணதரர்கள். அவர் அறவுரை வழங்கும் போது இப்பணியைச் செய்வர் என்பது சமணசமய மரபு.)

 இதற்கு முதல்நூல் வடமொழியில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம். மேருமந்தர புராணம் 13 சருக்கங்களையும் 1405 பாடல்களையும் உடையது

http://www.tamilvu.org/library/l3D00/html/l3D00ind.htm

      11. நாரதர் சா¢தம்        12. சாந்திபுராணம்  (மறைந்து போனவை)

==============================

 13. உதயணகுமார விஜயம் *  

கொங்குவேளிரின்பெருங்கதைக் காப்பியத்திற்குச் சுருக்க நூலாகப் பாடப்பட்டதே உதயணகுமார காவியம்.இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான   கந்தியர் என்பவரால் பாடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுவர்.  369 பாடல்களைக் கொண்டது.   9th centuary

பெருங்கதை அமைப்பையே கொண்டு இந்நூலும் உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்களுடன் அமைகிறது. கூடுதலாகத் துறவுக் காண்டம் ஒன்றும் இதில் இடம் பெறுகின்றது. பெருங்கதையின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லை. பெருங்கதையில் கிடைக்கப் பெறாத கதைக் குறிப்புகளை ஓரளவு அறிந்து கொள்வதற்கு இந்நூல் துணை செய்கிறது. ஏனைய சிறுகாப்பியங்களுக்கு இருந்த நோக்கம்நெறி இந்நூலுக்கு இல்லை. பெருங்கதைக்குச் சுருக்க நூலாக அமைவதன்றி வேறு சிறப்புகள் இந்நூலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காப்பிய வருணனைக் கூறுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை

உதயணகுமார காவியம் தமிழ் ஓலைச் சுவடி

 

udyanakumara kaviyam

*Udayanakumarakaviyam

=======================

 14. நாககுமார காவியம் 

*http://www.tamilvu.org/library/l3B00/html/l3B00ind.htm

வரும்புதுநூல்-சைன காவியங்கள்-ஐம்பெருங் காவியம்-ஐஞ்சிறுகாவியம்-நூற்றொகைப் பெயரின் பயன்- மூலப்படி - மூலப்படியின் நிலை - நூலும் உரையும்-காவிய அமைப்பு-கவிக் கூற்றால் கதை நடத்தல்-காவியப் பெயர்- காவியப் போக்கு-அருக சமயக் கோட்பாடுகள்-அருக தேவர் புகழ்மாலை-பெருங் காவியப் பண்பு - நாககுமார காவியமும் யசோதர காவியமும் நாககுமார காவிய காலம்-பிறமொழிகளில் நாககுமார சரிதம்-காவிய ஆசிரியர்-நன்றியுரை.
அச்சில் வரும் புதுநூல்
தமிழ்க் காவிய வரிசையில்-சிறப்பாக சைன சமயஞ் சார்ந்த காவியங்களுள் இதுகாறும் அச்சிடப்படாது எஞ்சி நின்றவற்றுள் ஒன்றே நாககுமார காவியம். இக் காவியம் இப்பொழுதுதான் முதன் முதலாக அச்சில் வெளி வருகிறது.  சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை வெளியிடும் தமிழாய்வுஅரையாண்டு இதழிலே வெளிவரும்அச்சில் வாரா அருந்தமிழ்வரிசையில் இஃது இரண்டாவதாக இடம் பெறுகின்றது.
சைன காவியங்கள்
இப்பொழுது நமக்குக் கிடைக்கின்ற தமிழ் நூல்களுள் சிலப்பதிகாரம் சைனசமயச் சார்புடைய பழைய காவியம்.  சைன சமயக் கொள்கைகளை உலகிற்கு அறிவிக்க எழுந்த பிற காவியங்கள் பெருங்கதை, சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, மேருமந்தர புராணம், யசோதர காவியம், உதயண குமார காவியம், நாககுமார காவியம், சாந்தி புராணம் முதலியனவாம்.  இவற்றுள் பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி என்பவை பெருங்காவியம் என்னும் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க இயல்புடையவை.  ஏனையவை அத்துணை   நடைச்  சிறப்பும்,   பொருட்  பொலிவும்  விஞ்ச அமைந்தவைஅல்ல.சைனசமயச் சார்பானஉண்மைகள் சிலவற்றைச் சொல்லும்   நோக்குடன் இவை இயற்றப்பட்டிருப்பதாலேயே

  mallisenachariya 170 pakkal

http://www.tamilvu.org/library/l3B00/html/l3B00ind.htm

=================================

15. கலிங்கத்துப் பரணி *  ஆசிரியர்   சயங்கொண்டாரும்        

பேரனாகிய குலோத்துங்கனைக் கங்கைகொண்ட சோழன் தேவி, தன்
மலர்க்கையால் எடுத்து கூறினாளாக ஆசி்ரியர் கூறுகின்றார்.
இவன்  பூணூல் அணிந்தானாகவும், வடமொழி மறை பயின்றானாகவும்,
ஆசிரியர்  கூறுகின்றார்.  இதனால்  அக்காலத்திய  தஞ்சைச்சோழர் தம்மை
வடநாட்டுச்  சத்தி்யரின்  கால்வழியில்  வந்தாராகவே கொண்டு, வடநாட்டுச்
சத்திரியருக்குரிய  ஒழுக்கத்தைக்  கைக்கொண்டும் வந்தாராதல் தெரிகின்றது சோழர்   மரபு   வரலாறு  கூறுமிடத்துச்   சோழர்களின்  முன்னோராக  வடநாட்டுச்  சத்திரியர்  பலரைக்  கூறுவதும்
ஈண்டு   நோக்கத்தக்கது.    இவரை   அடுத்துச்   சோழர்   அவைக்களப்
புலவராகத்  திகழ்ந்த  ஒட்டக்கூத்தரும்  தாம்  பாடிய  மூவர்   உலாவிலும்,
சோழ  மரபு  கூறுமிடத்தும் இங்ஙனமே சோழரின் முன்னோராக வடநாட்டுச்
சத்திரியர்  பலரைக்  கூறுவதும்   கருததக்கது. '.........................................முந்நூல்
பெருமார்பின்   வந்தொளிரப்   பிறப்பிரண்டா  வதுபிறந்து சிறந்த பின்னர்'
எனவும், 'வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே'
எனவும  ஆசிரியர் கூறுமாறு காண்க.
இங்ஙனம்  பூணூலணிந்தும்வடமொழி  மறை  பயின்றும்   ஒழுகிய
தோடன்றிக் குலோத்துங்கன், வடநாட்டரசன் போன்று, மழைவளம் மிகுமாறு
பல  வேள்விகள்  நடைபெறுமாறும்  செய்தான்.

jeyamkondar 499 pakkal  

16. யசோதர காவியம்

யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. யசோதரன் சரிதம் தமிழில் வேறு எந்த நூலிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடமொழியில் யசோதரன் கதை பல படைப்புகளில் இடம் பெறுகின்றது. சைன புராணங்களில்மகாபுராணம் சிறப்புடைய ஒன்று. அதில் தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், அரசர்கள் பன்னிருவர், பலதேவர் ஒன்பது பேர், வாசுதேவர் ஒன்பது பேர், பிரதி வாசுதேவர் ஒன்பது பேர் என அறுபத்து மூவர் வரலாறு இடம்பெறும். இம்மகாபுராணத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஜினதேவரும், கி.பி. 10ஆம் நூற்றாண்டில் மல்லிசேனரும் எழுதினர். மற்றொரு புராணமான உத்தர புராணத்தை ஜினசேனரின் மாணாக்கர் குணபத்திர முனிவர் எழுதினார் என்பர். இந்த உத்தர புராணத்தில்தான் முதல் முதலாக யசோதரன் சரிதம் கூறப்படுகிறது.
யசோதரன் சரிதத்தை வடமொழியில் எழுதியவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஒருவர் சோமதேவ சூரி என்பார். இவர் யகஸ்திலகம் என்ற பெயரில் சம்பு காவியம் படைத்துள்ளார். யசோதர சரிதம்என்ற பெயரில் வாதிராஜ சூரியும், அரிபத்திரர் புட்பதந்தரும் காவியம் படைத்துள்ளனர். பூர்ண தேவர் என்பாரும் யசோதர காவியத்தை வடமொழியில் படைத்துள்ளதாக அறியப்படுகிறது. வடமொழியில் வாதிராஜ சூரியின் காவியத்தைத் தழுவியே தமிழில் யசோதர காவியம்படைக்கப் பட்டுள்ளதாகக் கூறுவர்.
தமிழில் யசோதர காவியம்படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. வடமொழியில் நாக குமார காவியம் படைத்த மல்லிசேனரே தமிழிலும் அக்காவியத்தைப் படைத்தது போல
வடமொழியில் யசோதர சரிதம்படைத்த வாதிராஜ சூரியே தமிழிலும் இக்காவியம் படைத்திருக்க வேண்டும் என்று வேங்கட ராமையங்கார் கருதுகிறார்.
புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத்
திட்பமாய்ச் செந்தமிழில் செப்பினான் - நட்புடையார்
நண்ணார் இவர்என்ன நாடாக் கொடைக்கையர்
வெண்ணாவல் ஊருடைய வேள்
(நட்புடையார் நண்ணார்.....கொடைக்கையர் = வேண்டியவர்வேண்டாதவர் என்று பார்க்காத வள்ளல்) 320 viruthapa 
 17. இராமகாதை   18. கிளிவிருத்தம்   19. எலிவிருத்தம்  20. இளந்திரையம் 21. புராணசாகரம்   22. அமிர்பதி   23. மல்லிநாதர் புராணம்  24. பிங்கல சா¢தை  25. வாமனசா¢தை      26 வர்த்தமானம்( மறைந்து போனவை)

                        2. இலக்கணம் 

1. நன்னூல் *


தொல்காப்பியம் தோன்றிப் பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டதால் அதில் உள்ள மரபுகள் மாறிவிட்டன. மேலும் தொல்காப்பியம் கடல் போலப் பரந்துவிரிந்த நூல் ஆகும். எனவே நன்னூல் தோன்றிய பின்பு பரவலாக அனைவரும் நன்னூலையே கற்கத் தொடங்கினர். எனவே நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றின. மயிலைநாதர்சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப்பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் முதலிய பலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர். நன்னூல் தோன்றியபிறகு எழுத்து, சொல் இலக்கணங்களைக் கற்போர் நன்னூலையே விரும்பிப் படித்துவருகின்றனர். பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பட்டதுநன்னூல் என்ற இலக்கண நூல். இது, எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டு இலக்கணங்களையும் கூறுகிறது. 

நன்னூல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது. நன்னூல், இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறும் நூல் ஆகும். நன்னூலில் முதலில் பாயிரம் என்று ஒரு பகுதி உள்ளது. இதில் ஐம்பத்தைந்து சூத்திரங்கள் உள்ளன.     பாயிரப் பகுதியில் நூலின் இலக்கணம், நூலைக் கற்றுத்தரும் ஆசிரியர் இலக்கணம், கற்றுத்தரும் முறை, மாணவர்களின் குணங்கள், மாணவர்கள் கற்கும் முறை ஆகியவை இடம் பெற்றிருக்கும். 

எழுத்து அதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 202 சூத்திரங்கள் உள்ளன. சொல்லதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 205 சூத்திரங்கள் உள்ளன.

அருங்கலை விநோதன் என்ற பட்டப் பெயர் பெற்ற சீயகங்கன் என்ற அரசனின்

Bhavanandhi munivar   12th century   462  suthiram

pm0147.pdfpmuni0147.html


 2. நம்பியகப்பொருள் 

நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்து பிரிவுகளாக இந் நூலை ஒழுங்கு படுத்தியுள்ளார் இதன் ஆசிரியர்



சூத்திர வடிவில் அமைந்துள்ள இந்நூல்   என ஐந்து பிரிவுகளாக இந் நூலை ஒழுங்கு படுத்தியுள்ளார் இதன் ஆசிரியர்.

*http://www.tamilvu.org/library/l0A00/html/l0A00ind.htm

 3. யாப்பெருங்கலம்

 *Amirthasakar munivar  96 akaval 10th century

http://www.tamilvu.org/library/libindex.htm

https://archive.org/stream/Religion-U.Ve.Sa.LibraryBooks/637-yaapparun-kalam_muulamum2#page/n5
 

4. யாப்பெருங்கலத் காரிகை *

யாப்பு பற்றித் தமிழில் தோன்றிய யாப்பருங்கலக்காரிகை
நூலின் ஆசிரியர் அமிதசாகரர் என்பவராவார். இவர் பெயர் அமுதசாகரர், அமிர்த சாகரர் என்பனவாகவும் வழங்கப் பெற்றுள்ளது. இப்பெயர் கீழ்வரும் சொற்களால் உருவானது.
அமித = அளவு கடந்த 
சாகரர் = கடல் என்னும் பெயரர் இதனை, ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோனே’ என்னும் காரிகை நூலின் பாயிர அடியும் உறுதிப்படுத்தும். இவர் வரலாறு பற்றி ஏதும் சான்று கிடைக்கவில்லை. அருகக்கடவுளை இவர் வழிபட்டுள்ளார் என்பதை, பாயிர முதல் செய்யுளால் அறியலாம். இதனால் இவர் சமணர் என்று அறிகிறோம்.
அமிதசாகரர் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எனும் நூலை இயற்றிய புத்தமித்திரனார் என்பவருக்குக் காலத்தால் முற்பட்டவர், இவர். யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்


 pm0055.pdf pmuni0055.html


5. நேமிநாதம் 

 இந்நூலின் எழுத்ததிகாரத்தின் வெண்பாக்கள் இருபத்து நான்கு;  சொல்லதிகாரத்தின் முன்னே தற்சிறப்புப்பாயிர வெண்பா ஒன்று இருக்கின்றது. அது நீங்கலாகச் சொல்லதிகாரத்தின் வெண்பாக்கள் எழுபது ஆகும். ஆகமொத்தம் இந்நூலின் வெண்பாக்கள்
தொண்ணூற்றொன்பது ஆகும்.  நன்னூல் தோன்றுதற்குமுன் தொல்காப்பியம் கற்பவர் முதலில்  இந் நூலைக் கற்றுப் பின்னரே தொல்காப்பியம் கற்று வந்தனர் என்ப. இந்நூலின் ஆசிரியர் களந்தைப்பதிக் குணவீர பண்டிதர் என்பவர்என்க. வச்சணந்திமாலை என்னும் வெண்பாப் பாட்டியலை இயற்றியவரும் இவரே. இவ்விரு நூற்களையும் இயற்றியவர் இவரே என்பதனை,
இந்நூல் செய்தார் யாரோ? எனின்,
உளமலி பேரருள் உயிர்மிசை வைத்த
வளமலி களந்தை வச்சணந்தி முனிவரன்
கொள்கையின் வழாஅக் குணவீர பண்டிதன்

http://www.tamilvu.org/library/l0500/html/l0500m02.htm  

*pm0101.pdf pmuni0101.html

  6. அவிநயம்(மறைந்து போனவை)

 7. வெண்பா பாட்டியல் *
8. சந்தநூல்   9. இந்திர காணியம்   10. அணியியல்   11. வாய்ப்பியம்
   12. மொழிவரி   13. கடிய நன்னியம்  14. காக்கைப்பாடினியம்
   15. சங்கயாப்பு   16. செய்யுளியல்   17. நக்கீரர் அடிநூல்  18. கைக்கிளைச் சூத்திரம் 19. நத்தத்தம்  20. தக்காணியம் (மறைந்து போனவை)

             3.  நீதி நூல்கள்

1. நாலடியார் *

  கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூறு வெண்பாக்களைக் கொண்ட நூல்.
 நாலடி நானூறு என்றும் வழங்கப் பெறும் நூல். இந்நூல் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது. திருக்குறளைப் போல் மூன்று பால் பகுப்புகளை உடையது. பதினொரு இயல்களும், நாற்பது அதிகாரங்களும் கொண்டது. அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் நானூறு பாக்களைக் கொண்டது. துறவுக்குச் சிறப்பிடம் அறத்துப்பாலில் துறவு நெறி அறங்களும், இல்லறநெறி அறங்களும் கூறப்படுகின்றன. சமண முனிவர்கள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் கூறப்படுகிறது. நிலையாமை பற்றிய கருத்துகளும் அழுத்தமாகக் கூறப்படுகின்றன.இல்லறமும் பிறவும் இனிய இல்லறத்தைப் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கின்றது. இல்லறத்திற்குப் பொருந்தாதவை எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. மக்கள் வாழ வேண்டிய பாங்கினைச் சொல்கிறது. கல்விச் சிறப்பையும், கற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. சான்றோர் இயல்பையும் பெருமையையும் எடுத்துரைக்கிறது. பண்பிலார் இயல்பையும் பட்டியலிடுகிறது. குறளின் அதிகாரப் பொருளோடு தொடர்புடைய கருத்தை ஒவ்வொரு குறளும் கூறுகிறது. ஆனால் நாலடியாரில் ஒரே கருத்தைப் பல அதிகாரங்களுள் வெவ்வேறு உவமைகளோடு கூறும் பாடல்கள் உள்ளன. சிறந்த உவமைகளை நாம் நாலடியாரில் காணலாம். பழமொழிகளாலும், பழைய கதைகளாலும், உறுதிப் பொருள்களை வலியுறுத்துதலில் இந்நூல் ஈடிணையற்றது. அறத்தை உரைக்கும் போதும் அழகும் சுவையும் தோன்றக் கூறுகிறது. இயற்றியவர் முனிவராயினும் இலக்கியத்திற்குச் சுவையூட்டும் கற்பனை உணர்வையும் இவர்கள் கைவிடவில்லை.


Naladiyar olai swadi

pm0016.pdf pmuni0016.html

=======

2. பழமொழி நானூறு *   முன்றுறையரையனார்

நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்கும் கீழ்க்கணக்கு நூல்பழமொழி. நாலடிப் பாடல்களின் சொற்பொருள்களைப்பல இடங்களில் தழுவிச் செல்வதனால், இது நாலடியாரோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம். இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் இதற்கு அமைவதாயிற்று. பாடல் தொகையைக் கொண்டு, 'பழமொழி நானூறு' என்றும் இது குறிக்கப் பெறும். இந்நூலகத்துப் பண்டைப் பழமொழிகளைத் தேர்ந்து எடுத்து ஆசிரியர் அமைத்துள்ளார் .

Pazhamozhi 400 olai swadi

pm0036.pdf pmuni0036.html

3. ஏலாதி *

நூலின் ஆசிரியர் கணி மேதாவியார். இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர். கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு சோதிடத்தில் வல்லவர் என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலை நூற்றைம்பதினை இயற்றியவரும் இவரே என்பர். 
இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். 
இந்நூல் 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் ஆகிய இரு பாடல்களும் இதில் அடங்கும். இந்நூலும் ‘மகடூஉ முன்னிலை’ அமைப்பைக் கொண்டது. அதாவது, ஒரு பெண்ணை விளித்து, அவளுக்கு ஒரு கருத்தைக் கூறுகிற வகையில் பாடலை அமைப்பது. 1, 2, 6, 7, 13, 21, 28, 29, 31, 32, 33, 56, 76 ஆகிய எண்களைக் கொண்ட செய்யுள்களில் இந்த விளியைக் காணலாம்.சமண சமயத்திற்குரிய சிறந்த அறநெறிகளாகிய கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றையும் காமம், கள் ஆகியவற்றையும் நீக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுகிறது. இல்லறம், துறவறம் ஆகிய நெறிகளையும் விளக்குகிறது. சமண சமய நூலாக இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள அறநெறிகள் அனைவர்க்கும் பொதுவான பொதுமை நெறிகளாக அமைந்துள்ளமை இதன் சிறப்பு எனலாம்.

இந்நூலாசிரியர் காலம் நான்காம் நூற்றாண்டு. 

pm0029.pdf   pmuni0029.html

 4. சிறுபஞ்சமூலம் *

மருத்துவ நூலில் கூறப்படும் ஐந்து வேர்கள் கண்டங்கத்தரி வேர் ,சிறு வழுதுணை வேர், சிறுமல்லி வேர் ,நெருஞ்சி வேர் பெருமல்லி வேர் 
இந்த ஐந்து வேர்களும் மக்களின் உடல் நோயைத் தீர்க்க வல்லன. 
இது போல் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து பொருள்களும் மக்களின் பிறவி நோயைத் தீர்க்க வல்லன. அவை சிறந்த அற நெறிகள். நூலின் பெயர்க் காரணத்தை ஆசிரியர், கொலை, பொய், புலால், களவு ஆகியவற்றுக்கு மாறான கொலை செய்யாமை, பொய் கூறாமை, புலால் உண்ணாமை, களவு செய்யாமை ஆகிய நான்குடன் ஒழுக்கம் என்பதையும் இணைத்து, ஐந்தின் கூட்டாகச் சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூல் அமைந்துள்ளது. பஞ்சத்தைப் போக்கும் மழைபோல. இந்நூல் மக்களின் அறியாமையைப் போக்கும். மக்கள் மனத்தில் பதியுமாறு இதனை எடுத்துச் சொல்லுங்கள்.

சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான். காரி என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர்.

 pm0020.pdf pmuni0020.html

5. திணைமாலை நூற்றைம்பது

திணை என்பது நிலம், ஒழுக்கம் முதலிய பலபொருள் படுவதோர் சொல். இங்கே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலம் பற்றி, அவ்வந்நிலத்திற்குரிய புணர்தல், பிரிதல், முதலிய ஒழுக்கங்கள் சிறப்பித்துப் பாடப் பெறுகின்றன. எனவே, இவற்றைத் 'திணை' என்றும், 'ஐந்திணை' என்றும் குறித்துள்ளனர்.ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையின் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந் நூல்பெயர் பெற்றுள்ளது. கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம், என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. நூற்றைம்பது என்னும் எண்வரையறைக்கு ஏற்ப, திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டிருத்தலே முறை. அங்ஙனமாகவும், குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. இதனால், இந் நூலுள் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மிகுதியான மூன்று பாடல்களுக்கும் பழைய உரை உள்ளது. எனவே, உரைகாரர் காலத்திற்கு முன்பே இப் பாடல்கள் நூலகத்து உள்ளமை தெளிவு. ஏனைய திணைமொழி ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது என்னும் நூல்கள் எல்லாம் குறித்தபாடல் அளவுக்கு விஞ்சாமல் அமைவுற்றிருக்க, இந் நூலில் மட்டும் மூன்று பாடல்கள் மிகுதியாகக் காணப்பெறுதல் ஐயுறத் தக்கது ஒன்றே.இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியாரே. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பதும், பிறவும் ஏலாதி முகவுரையில் காணலாகும். 'கோடாப் புகழ் மாறன் கூடல் அனையாள்' (4)என்று கூறுதலின், இவர் பாண்டியனிடத்தும், அவன் கோநகரமாகிய கூடலிடத்தும் ஈடுபாடுள்ளவர் என்று கருதலாம். கணிமேதாவியார் என்ற பெயருக்கு ஏற்ப, நல்ல நாள் நோக்கி வினைபுரிதலை இந் நூலுள் பல இடங்களில் (46, 52, 54) கூறியுள்ளமை நோக்கத்தக்கது

 


6. ஆசாரக்கோவை *

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார் 100
 venpakkal  or kalthur peruvoil mulliyanar

pm0024.pdf pmuni0024.html


 7. அறநெறிச்சாரம் *அறநெறிச்சாரம் ஒரு தமிழ் நீதி நூல். 

அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 226 வெண்பாக்கள் உள்ளன

 pm0297.pdf pmuni0297.html
8. அருங்கலச்செப்பு *

aRUNGALASEPPU

அருங்கலச்செப்பு ஒரு தமிழ் நீதி நூல். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பெயர் தெரியாத சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 180 குறள் வெண்பாக்கள் உள்ளன. ‘ரத்ன கரண்ட சிராவகாசாரம்’ என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு இது என்று கருதப்படுகிறது. இந்நூல் சமண இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளைக் கூறுகிறத

9. ஜிவசம் போதனை *

Devenddra munivar 550 padal

 10. ஒளவை (அகத்தில்சூடி) *   

https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0002.pdf            

 pm0002.pdf pmuni0002.html


 11. நான்மணிக்கடிகை *

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. 100 or 108 padal

 pm0047.pdf pmuni0047.html

 12. இன்னா நாற்பது *

கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். 40 padal


 pm0025.pdf pmuni0025.html
 13. இனியவை நாற்பது *

இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது. வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறுகிறது. ஆதலால் இந்த நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது. இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பதுஎன்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு. 
இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். ஆசிரியர் பெயர் சேந்தன். பூதன் என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர். இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.பூதஞ்சேந்தனார் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும், அடுத்துத் திருமாலையும், பின்னர் பிரம்மனையும் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர் வைதிக சமயத்தினராதல் வேண்டும்.இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. 

 pm0025.pdf zhzh pmuni0025.html
 14. திரிகடுகம்.*


திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். நல்என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. 
முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்துஎன்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும். 
ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன

 pm0048.pdf pmuni0048.html

                                4. தர்க்க நூல்கள்

 1. நீலகேசி *


lai swadineelakesi thirattu oi

 http://www.jainworld.com/JWTamil/jainworld/neelakesi/neelakesi.asp?page=1&title=11

  2. பிங்கலகேசி    3. அஞ்சனகேசி  4. தத்துவதா¢சனம்  5. தத்துவார்த்த சூத்கை (தமிழ்)(மறைந்து போனவை)

5. இசை

  1. பெருங்குருகு  2. பெருநாரை   3. சேயிற்றியம்  4.பரதசேனாபதியம்5. சயந்தம் 6. இசைத்தமிழ் செய்யுட் கோவை7. இசை நுணுக்கம்8. சிற்றிசை9. போ¢சை(மறைந்து போனவை)

6. நாடக நூல்கள்

     1.குணநூல்  2. அகத்தியம்   3. கூத்தநூல் சந்தம்(மறைந்து போனவை)

 7. ஓவிய நூல்கள்

     1. ஓவியநூல்   2. கலைகோட்டுதண்டம் (நிகண்டனார் இயற்றியது)
8. நிகண்டுகள
1. சூடாமணி நிகண்டு *

soodamani nigandu


 pm0118.pdf pmuni0118.html

 2. திவாகரம் *


நிகண்டு' எனும் பிரிவில் திவாகரம் முதலில் தோன்றிய நூல் ஆகும். இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு ஆகும். பண்டைக்காலத்தில் வாழ்க்கையின் எத்துறையிலும் முக்கியமான பொருளை நினைவில் இருத்த வேண்டும் என்றால் அதைப் பாட்டாகவே எழுதி வைத்தார்கள். அதே நிலை இடைக்காலத்திலும் தொடர்ந்தது. இலக்கணமும் பாட்டாகவே எழுதி வைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். நிகண்டுகள் முதலியன இன்றுவரை பாட்டாகவே இருப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லாம்.
தமிழின் ஆதி நிகண்டு திவாகரம் ஆகும். திவாகரத்தைச் செய்தவர் திவாகரர் ஆவார். திவாகரர்', ‘திவாகரன்' என்ற சொற்களுக்கு, ‘பகலைச் செய்பவன், சூரியன்' என்று பொருள். படைக்கலங்கள் பற்றி இவர் விரிவாகவும், விளக்கமாகவும் கூறி உள்ளார். எனவே இவர் ஒரு போர் வீரராக இருத்தல் வேண்டும் என்று பேராசிரியர் அருணாசலம் கூறுவார்
 

3. பிங்கலந்தை *

 (பிங்கலந்தை)    பிங்கலமுனிவர்

pm0521_01.pdf pm0521_02.pdf pmuni0521_01.html pmuni0521_02.html pmkindle0521.pdf

        9. கணித நூல்கள்


 1. கெட்டி எண்சுவடி * 3. நல்லிலக்க வாய்ப்பாடு * 4. சிறுகுழி வாயப்பாடு


ENSWADI


  2. கணக்கதிகாரம்  5. கீழ்வாய் இலக்கம்  6. பெருக்கல் வாய்ப்பாடு 7. அவினந்த மாலை(மறைந்து போனவை)

      10. சோதிட நூல்கள்

 1. ஜினேந்திரமாலை *

 2. உள்ளமுடையான் *

 11. பிரபந்தங்கள்

1. தோத்திரத்திட்டு *



thothira thirattu

2. திருக்கலம்பகம் *

http://tamildigitalZQdjZU7kJty&tag=%E0%AE%A0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF8D%E0%AE%AA%E0%AE%95%E0 thirukalpakam %AE%AE%E0%AF%8D%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D





3. திருநூற்றந்தாதி *



 4. திருவெம்பாவை*


thiruppavai

5. திருப்பாமாலை *







THIRUPPA MALAI


6. திருப்புகழ் *



7. ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் *


8. அப்பாண்டைநாதர் உலா *


 9. திருமேற்றிசையந்தாதி *





  10. தர்ம தேவியந்தாதி

11. திருநாதர் குன்றத்துப் பத்தும் பதிகம் *

                                                      12. சதகங்கள்

 1. கொங்கு மண்டல சதகம் 

Kongumandala sadakam http://www.tamilvu.org/library/l5730/html/l5730016.htm

  2. நேமிநாத சதகம்


.

[19:39, 10/31/2020] Veludharan Ahimsa Salem: <!- start disable copy paste --> </!->

8 comments:

  1. Very nice compilation sir,Now I regret why I did not study Tamil literature. Because the language is the base and basement of a race, society ethnic group etc.

    In a the age of studies we believe only science is the great. But without the base no building. Added to that samanar literature is so great and shared many many fllold in the Tamil literature. Hats off to your great job.Hope I too join under your guidence to explore this Tamil Marvels.Thank you sir.l

    ReplyDelete
  2. Great and important historical compilation. Pls translate this site in English as well, so it is not restricted to Tamils alone, but it spreads to the world.

    ReplyDelete
  3. Thanks a lot. You are doing yeoman Service

    ReplyDelete
  4. Salutations to Mr. Selvamani for the compilation with the weblink to the literature, great documentation for the generations..

    ReplyDelete
  5. Excellent ! Wishes to sri. Selvamani jain

    ReplyDelete