Tuesday, 1 November 2022

பதினெண்(18) நூல்=இனியவை நாற்பதுஇன்னா நாற்பது , ஏலாதி,சிறு பஞ்ச மூலம்,திரிகடுகம்

 கணிமேதையார் அருளிய "ஏலாதி"

சிறப்புப் பாயிரம்

இல்லறநூல்ஏற்ற துறவறநூல் ஏயுங்கால்

சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து - நல்ல

அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியும்

கணிமேதை செய்தான் கலந்து.

கடவுள் வணக்கம்

அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்

பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்

மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)

இறைபுரிந்து வாழ்தல் இயல்பு.

சென்ற புகழ்செல்வம் மீக்கூற்றம் சேவகம்

நின்ற நிலைகல்வி வள்ளன்மை - என்றும்

வழிவந்தார் பூங்கோதாய் ஆறும் மறையின்

வழிவந்தார் கண்ணே வனப்பு.       1

கொலையுரியான் கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த

அலைபுரியான் வஞ்சியான் யாதும் - நிலைதிரியான்

மண்ணவர்க்கும் அன்றி மதுமலிபூங் கோதாய்

விண்ணவர்க்கும் மேலாய் விடும்.       2

தவம் எளிது தானம் அரிதுக் கார்க்கேல்

அவம் அரி(து) ஆதல் எளிதால் - அவமிலா

இன்பம் பிறழின் இயைஎளிது மற்றதன்

துன்பம் துடைத்தல் அரிது.       3

இடர்த்தீர்த்தல் எள்ளாமை கீழினஞ்சே ராமை

படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்

கண்டவர் காமுறுஞ் சொல்காணின் கல்வியின்கண்

விண்டவர்நூல் வேண்டா விடும்.       4

தனக்கென்றும் ஓர்பாங்கன் பொய்யான்மெய் யாக்கும்

எனக்கென்(று) இயையான்யா தொன்றும் - புனர்க்கொன்றை

போலும் இழையார்சொல் தேறான் களியானேல்

சாலும் பிறநூலின் சார்பு.       5

நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே

பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை

வேயன்ன தோளாய் இவையுடையான் பல்லுயிர்க்கும்

தாயன்னன் என்னத் தகும்.       6

இன்சொல் அளாவல் இடம்இனிதூண் யாவர்க்கும்

வன்சொல் களைந்து வகுப்பானேல் - மென்சொல்

முருந்தேய்க்கும் முட்போல் எயிற்றினாய் நாளும்

விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து.       7

உடன்படான் கொல்லான் உடன்றார்நோய் தீர்ந்து

மடம்படான் மாண்டார்நூல் மாண்ட - இடம்பட

நோக்கும்வாய் நோக்கி நுழைவானேல் மற்றவனை

ஆக்குமவர் ஆக்கும் அணைந்து.       8

கற்றாரைக் கற்ற துணையார் எனமதியார்

உற்றாரை அன்னணம் ஓராமல் - அற்றார்கட்(கு)

உண்டி உறையுள் உடுக்கை இவைஈந்தார்

பண்டிதராய் வாழ்வார் பயின்று.       9

செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமும் சீரிலா

வெங்கோலான் கீழ்க்குடிகள் வீந்துகவும் - வெங்கோல்

அமைச்சர் தொழிலும் அறியலம்ஒன்(று) ஆற்ற

எனைத்தும் அறியாமை யான்.       10

அவாஅறுக்கல் உற்றான் தளரான்அவ் ஐந்தின்

அவாஅறுப்பின் ஆற்ற அமையும் - அவாஅறான்

ஆகும் அவனாயின் ஐங்களிற்றின் ஆட்டுண்டு

போகும் புழையுள் புலந்து.       11

கொலைக்களம் வார்குத்துச் சூதாடும் எல்லை

அலைக்களம் போர்யானை ஆக்கும் - நிலைக்களம்

முச்சா ரிகைஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை

நச்சாமை நோக்காமை நன்று.       12

விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற

உளையாமை உட்குடைத்தா வென்று - களையாமை

நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கின் இவையாறும்

பாற்பட்டார் கொண்டொழும் பண்பு.       13

பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன

செய்யான் சிறியார் இனஞ்சேரான் - வையான்

கயலியல்உண் கண்ணாய்! கருதுங்கால் என்றும்

அயல அயலவாம் நூல்.       14

கண்போல்வார்க் காயாமை கற்றார் இனஞ்சேர்தல்

பண்போல் கிளவியார்ப் பற்றாமை - பண்போலும்

சொல்லார்க்(கு) அருமறைசோ ராமை சிறிதெனினும்

இல்லார்க்(கு) இடர்தீர்த்தல் நன்று.       15

துறந்தார்கண் துன்னித் துறவார்(கு) இடுதல்

இறந்தார்க்கு இனிய இசைத்தல் - இறந்தார்

மறுதலை சுற்றம் மதித்தோம்பு வானேல்

இறுதலில் வாழ்வே இனிது.       16


குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்

மடியோம்பும் ஆற்றல் உடைமை - முடியோம்பி

நாற்றம் சுவைகேள்வி நல்லார் இனஞ்சேர்தல்

தேற்றானேல் தேறும் அமைச்சு.       17

போகம் பொருள்கேடு மான்வேட்டம் பொல்லாக்கள்

சோகம் படுஞ்சூதே சொல்வன்மை - சோகக்

கடுங்கதத்துத் தண்டம் அடங்காமை காப்பின்

அடுங்கதமில் ஏனை அரசு.       18

கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்மனைமேல்

செல்லான் சிறியார் இனஞ்சேரான் - சொல்லும்

மறையின் செவியிலன் தீச்சொற்கண் மூங்கை

இறையில் பெரியாற்கு இவை.       19

மின்னேர் இடையார்சொல் தேறான் விழைவோரான்

கொன்னே வெகுளான் கொலைபுரியான் - பொன்னே

உறுப்பறுத் தன்ன கொடையுவப்பான் தன்னின்

வெறுப்பறுத்தான் விண்ணகத்தும் இல்.       20

இளமை கழியும் பிணிமூப்(பு) இயையும்

வளமை வலிஇவை வாடும் - உளநாளால்

பாடே புரியாது பால்போலும் சொல்லினாய்

வீடே புரிதல் வீதி!       21

வாள்அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பஞ்சான்

ஆள்அஞ்சான் ஆம்பொருள் தானஞ்சான் - நாள்எஞ்சாக்

காலன் வரஒழிதல் காணின்வீ டெய்திய

பாவின்நூல் எய்தப் படும்.       22

குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமும் நோக்கான்

மணநோக்கான் மங்கலமும் நோக்கான் - கணநோக்கான்

கால்காப்பு வேண்டான் பெரியார்நூல் காலற்கு

வாய்காப்புக் கோடல் வனப்பு.       23

பிணிபுறப்பு மூப்போடு சாக்காடு துன்பம்

தணிவில் நிரப்பிவை தாழா - அணியின்

அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம்

நிரம்புமேல் வீட்டு நெறி.       24

பாடகஞ் சாராமை பாத்திலார் தாம்விழையும்

நாடகஞ் சாராமை நாடுங்கால் - நாடகம்

சேர்ந்தால் பகைபழி தீச்சொல்லே சாக்காடே

தீர்ந்தால்போல் தீரா வரும்.       25

மாண்டமைந்(து)ஆ ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை

ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த

காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு

ஞாலம் அறிந்த புகழ்.       26

அஃகுநீ செய்யல் எனஅறிந்(து) ஆராய்ந்தும்

வெஃகல் வெகுடலே தீக்காட்சி - வெஃகுமான்

கள்ளத்த அல்ல கருதின் இவைமூன்றும்

உள்ளத்த ஆக உரை.       27

மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே

மெய்யே உணர்ந்தார் மிகஉரைப்பர் - பொய்யே

குறளை கடுஞ்சொல் பயனிலசொல் நான்கும்

மறலையின் வாயினவாம் மற்று.       28

நிலையளவின் நின்ற நெடியவர்தாம் நேரா

கொலைகளவு காமத்தீ வாழ்க்கை - அலையளவி

மையெனநீள் கண்ணாய்! மறுதலைய இம்மூன்றும்

மெய்யள வாக விதி.       29

மாண்டவர் மாண்ட அறிவினால் மக்களைப்

பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால் - பூண்ட

ஓளரதனே கேத்திரசன் காணீனன் கூடன்

கிரிதன்பென கற்பவன் பேர்.       30

மத்த மயிலன்ன சாயலாய் மன்னிய சீர்த்

தத்தன் சகோடன் கருத்திரமன் புத்திரி

புத்ரனப வித்தனோடு பொய்யில் உருகிருதன்

இத்திறத்த எஞ்சினோர் பேர்.       31

உரையான் குலன்குடிமை ஊனம் பிறரை

உரையான் பொருளொடுவாழ்(வு) ஆயு - உரையானாய்ப்

பூவாதி வண்டுதேர்ந்து உண்குழலாய் ஈத்துண்பான்

தேவாதி தேவனாய்த் தேறு.       32

பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும்

மெய்யுரையான் உள்ளனவும் விட்டுரையான் - எய்யுரையான்

கூந்தல் மயிலன்னாய் ! குழீஇயவான் விண்ணோர்க்கு

வேந்தனாம் இவ்வுலகம் விட்டு.       33

சிதையுரையான் செற்றம் உரைய சீறில்லான்

இயல்புரையான் ஈனம் உரையாள் - நசையவர்க்குக்

கூடுவ(து) ஈவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்

நாடுவர் விண்ணோர் நயந்து.       34

துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்றார்

இறந்தார்ஈ டற்றார் இளையர் - சிறந்தவர்க்கும்

பண்ணாரும் சொல்லாய் பழியில்ஊண் பாற்படுத்தான்

மண்ணாளும் மன்னாய் மற்று.       35

காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்

பாலில்லார் பற்றிய நூலில்லார் - சாலவும்

ஆழப் படும்ஊண் அமைத்தார் இமையவரால்

வீழப் படுவார் விரைந்து.       36

அழப்போகான் அஞ்சான் அலறினால் கேளான்

எழப்போகான் ஈடற்றார் என்றும் - தொழப்போகான்

என்னேஇக் காலன்ஈ(டு) ஓரான் தவமுயலான்

கொன்னே யிருத்தல் குறை.       37

எழுத்தினால் நீங்கா(து)எண் ணால்ஒழியா(து) ஏத்தி

வழுத்தினால் மாறாது மாண்ட - ஒழுக்கினால்

நேராமை சால உணர்வார் பெருந்தவம்

போகாமை சாலப் புலை.       38

சாவ(து) எளி(து)அரிது சான்றாண்மை நல்லது

மேவல் (எளிது)அரிது மெய்போற்றல் - ஆவதன்கண்

சேறல் எளிது நிலையரிது தெள்ளியராய்

வேறல் எளி(து)அரிது சொல்.       39

உலையாமை உற்றதற்(கு) ஓடி உயிரை

அலையாமை ஐயப் படாமை - நிலையாமை

தீர்க்கும்வாய் தேர்ந்து பசியுண்டு நீக்குவான்

நோக்கும்வாய் விண்ணின் உயர்வு.       40

குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய்

மறுகான் பிறர்பொருள் வெளவான் - இறுகானாய்

ஈ(டு)அற் றவர்(கு)ஈவா னாயின் நெறிநூல்கள்

பாடிறப்ப பன்னும் இடத்து.       41


கொல்லான் உடன்படான் கொல்வார் இனஞ்சேரான்

புல்லான் பிறர்பால் புலான்மயங்கல் - செல்லான்

குடிப்படுத்துக் கூழ்ஈந்தான் கொல்யானை ஏறி

அடிப்படுப்பான் மண்ஆண்(டு) அரசு.       42

சூ(து)உவவான் பேரான் கலா(வு)உரையான் யார்திறத்தும்

வா(து)உவவான் மாதரார் சொல்தேறான் - காதுதாழ்

வான்மகர வார்குழையாய் மாதவர்க்கு ஊண்ஈந்தான்

தான்மகர வாய்மாடத் தான்.       43

பொய்யான்பொய் மேவான் புலால்உண்ணான் யாவரையும்

வையான் வழிசீத்து வால்அடிசில் - நையாதே

ஈத்துண்பான் ஆகும் இருங்கடல்சூழ் மண்ணரசாய்ப்

பாத்துண்பான் ஏத்துண்பான் பாடு.       44

இழுக்கான் இயல்நெறி இன்னாத வெஃகான்

வழுக்கான் மனைபொருள் வெளவான் - ஒழுக்கத்தால்

செல்வான் செயிரில்ஊண் ஈவான் அரசாண்டு

வெல்வான் விடுப்பான் விரைந்து.       45

களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக் காணான்

ஒளியான் விருந்துக்(கு) உலையான் - எளியாரை

எள்ளான்நீத் துண்பானேல் ஏதமில் மண்ணாண்டு

கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து.       46

பெரியார்சொல் பேணிப் பிறழாது நின்று

பரியா அடியார்ப் பறியான் - கரியார்சொல்

தேறான் இயையான் தெளிந்தடிசில் ஈத்துண்பான்

மாறான்மண் ஆளுமாம் மற்று.       47

வேற்றரவம் சேரான் விருந்தொழியான் தன்இல்லுள்

சோற்றரவம் சொல்லியுண் பானாயின் - மாற்றரவம்

கேளான் கிளைஓம்பின் கேடில் அரசனாய்

வாளான்மண் ணாண்டு வரும்.       48

யானை குதிரைபொன் கன்னியே ஆணிரையோ(டு)

ஏனை ஒழிந்த இவையெல்லாம் - ஆன்நெய்யால்

எண்ணனாய் மாதவர்க்(கு) ஊண்ஈந்தான் வைசிர

வண்ணனாய் வாழ்வான் வகுத்து.       49

எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை

வள்ளே துணியே இவற்றோடு - கொள்ளென

அன்புற்(று) அசனம் கொடுத்தான் துணையினோ(டு)

இன்புற்(று) வாழ்வான் இயைந்து.       50

உண்ணீர் வளம்குளம் கூவல் வழிப்புரை

தண்ணீரை அம்பலந்தான் பாற்படுத்தான் -பண்ணீர

பாடலோ(டு) ஆடல் பயின்றுயிர் செல்வானாய்க்

கூடலொ(டு) ஊடலுளான் கூர்ந்து.       51

இல்லிழந்தார் கண்ணிழந்தார் ஈண்டியசெல் வம்இழந்தார்

நெல்லிழந்தார் ஆணிரை தான்இழந்தார்க்(கு) -எல்உழந்து

பண்ணியூண் ஈந்தவர் பல்யானை மன்னராய்

எண்ணிஊண் ஆர்வார் இயைந்து.       52

கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான்

முடம்பட்டார் மூத்தார்மூப் பில்லார்க்(கு) - உடம்பட்(டு)

உடையராய் இல்லுள்ஊண் ஈத்துண்பார் மண்மேல்

படையராய் வாழ்வார் பயின்று.       53

பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்

கார்ப்பார் தமையாதும் காப்பிலார் - தூப்பால

நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண்ணாண்டு

பண்டாரம் பற்றவாழ் வார்.       54

ஈன்றார்ஈன் கால்தளர்வார் சூலார் குழவிகள்

மான்றார் வளியான் மயங்கினார்க்கு - ஆனார்என்(று)

ஊண்ஈய்த்(து) உறுநோய் களைந்தார் பெருஞ்செல்வம்

காண்ஈய்த்து வாழ்வார் கலந்து.       55

தலையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டீர்

உயை஡ளர் ஊண்ஒன்றும் இல்லார் - கிளைஞராய்

மாவலந்த நோக்கினாய் ஊண்ஈய்ந்தபர் மாக்கடால்சூழ்

நாவலம்தீ(வு) ஆள்வாரே நன்கு.       56

கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி காயும்

பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க்(கு) - அருஞ்சிரமம்

ஆற்றிஊண் ஈத்(து)அவை தீர்த்தார் அரசராய்ப்

போற்றிஊண் உண்பார் புரந்து.       57

காமாடார் காமியார் கல்லார் இனஞ்சேரார்

ஆமாடார் ஆயந்தார் நெறிநின்று -தாமாடா(து)

ஏற்றாரை இன்புற ஈய்ந்தார்முன் இம்மையான்

மாற்றாரை மாற்றிவாழ் வார்.       58

வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு

நுணங்கியநூல் நோக்கி நுழையா - இணங்கிய

பால்நோக்கி வாழ்வான் பழிஇல்லா மன்னனாய்

நூல்நோக்கி வாழ்வான் நுனித்து.       59

பெருமை புகழ்அறம் பேணாமை சீற்றம்

அருமைநூல் சால்பில்லார் சாரின் இருமைக்கும்

பாவம் பழிபகை சாக்காடே கேடச்சம்

சாபம்போல் சாருஞ் சலித்து.       60

ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால்

ஒர்வமே செய்யும் உலோபமே - சீர்சாலா

மானமே மேய உயிர்க்(கு)ஊனம் என்னுமே

ஊனமே தீர்ந்தவர் ஒத்து.       61

கூத்தும் விழவும் மணமும் கொலைக்களமும்

ஆர்த்த முனையுள்ளம் வேறிடத்தும் - ஒத்தும்

ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின்

இழுக்கம் இழவும் தரும்.       62

ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்

பேணொடும் எண்ணும் எழுத்திலை மாணொடு

கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்(கு)ஈய்ந்தார் இம்மையான்

வேட்டெழுத வாழ்வார் விரிந்து.       63

உயர்ந்தான் தலைவனென்(று) ஒப்புடைத்தான் நோக்கி

உயர்ந்தான்நூல் ஓதி ஒடுங்கி - உயர்ந்தான்

அருந்தவம் ஆற்றச் செயின்வீடாம் என்றார்

பெருந்தவம் செய்தார் பெரிது.       64

காலனார் ஈடறுத்தால் காண்குறின் முற்றுணர்ந்த

பாலனார் நூலமர்ந்து பாராது - வாலிதா

ஊறுபா(டு) இல்லா உயர்தவம் தான்புரியின்

ஏறுமோ மேலுலகம் ஓர்ந்து.       65

பொய்தீர் புலவர் பொருள்புரிந்து ஆராய்ந்த

மைதீர் உயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர்

சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்(று)

இடரின்(று) இனிதுயிலும் இன்று.       66

கூரம்பு வெம்மணல் ஈர்மணி தூங்கலும்

ஈரும் புகையிரு ளோ(டு)இருள்நூல் - ஆராய்ந்(து)

அழிகதி இம்முறையான் ஆன்றார் அறைந்தார்

இழிகதி இம்முறையான் ஏழு.       67

சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல் புணர்வுலத்தல்

நோதல் பிரிவில் கவறலே - ஓதலின்

அன்புடையார்க்(கு) உள்ளன ஆறு குணமாக

மென்புடையார் வைத்தார் விரித்து.       68

எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே

படுத்தலோ(டு) ஆடல் பகரின் - அடுத்துயிர்

ஆறு தொழிலென்(று) அறைந்தார் உயர்ந்தவர்

வேறு தொழிலாய் விரித்து.       69

ஐயமே பிச்சை அருந்தவர்க்(கு) ஊண்ஆடை

ஐயமே இன்றி அறிந்(து) ஈந்தான் - வையமும்

வானும் வரிசையால் தானாளும் நாளுமே

ஈனமே இன்றி இனிது.       70

நடப்பார்க்(கு) ஊண் நல்ல பொறைதாங்கி னார்க்(கு)ஊண்

கிடப்பார்க்(கு)ஊண் கேளிர்க்(கு)ஊண் கேடின்று உடல்சார்ந்த

வானகத்தார்க்(கு) ஊணே மறுதலையார்க்கு ஊண்அமைத்தான்

தானகத்தே வாழ்வான் தக.       71


உணராமை யால்குற்றம் ஒத்தான் வினையாம்

உணரான் வினைப்பிறப்புச் செய்யும் - உணராத

தொண்டுஇருந் துன்பம் தொடரும் பிறப்பினால்

மண்டிலமும் ஆகும் மதி.       72

மனைவாழ்க்கை மாதவம் என்றிரண்டும் மாண்ட

வினைவாழ்க்கை யாக விழைப - மனைவாழ்க்கை

பற்றுதல் இன்றி விடுதல்முன் சொல்லுமேல்

பற்றுதல் பாத்தில் தவம்.       73

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்

நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)

எழுத்தின் வனப்பே வனப்பு.       74

அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி

மறுவரவு மாறான நீக்கி - மறுவரவின்

மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே

ஆசா ரியன(து) அமைவு.       75


ஒல்லுவ நல்ல உருவவேற் கண்ணினாய்

வல்லுவ நாடி வகையினால் - சொல்லின்

கொடையினார் போகம் சுவர்க்கம் தவத்தால்

அடையாத் தவத்தினால் வீடு.       76

நாற்கதியும் துன்ப நவைதீர்த்தல் வேண்டுவான்

பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூற்கதியின்

எல்லை உயர்த்தார் தவமுயலின் மூன்(று) ஐந்(து) ஏழ்

வல்லைளீ(டு) ஆகும் வகு.       77

தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி

வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார்

கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க்(கு) ஈந்தார்

வைத்து வழங்கிவாழ் வார்.       78


சாக்காடு கேடு பகைதுன்பம் இன்பமே

நாக்காடு நாட்டறை போக்குமென - நாக்காட்ட

நட்டார்க்(கு) இயையின் தமக்கியைந்த கூ(று) உடம்

பட்டார்வாய்ப் பட்டது பண்பு.       79

புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார் போக்கில்

நிலையாளர் நீர்மை இழந்தார் - தலையாளர்க்கு

ஊண்கொடுத்(து) ஊற்றாய் உதவினார் மன்னராய்க்

காண்கொடுத்து வாழ்வார் கலந்து.       80

ஏலாதி முற்றிற்று

----3. காரியாசான் அருளிய "சிறு பஞ்ச மூலம்"

கடவுள் வாழ்த்து

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்

பழுதின்றி ஆற்றப் பணிந்து - முழுதேத்தி

நண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா

வெண்பா உரைப்பன் சில.       1

நூல்

ஒத்த ஒழுக்கம் கொலைபோய் புலால்களவோ(டு)

ஒத்த இவையல வோர்நாலிட்(டு) - ஒத்த

உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்

சிறுபஞ்ச மூலஞ் சிறந்து.       2

பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்

அருளுடையான் கண்ணதே ஆகும் - அருளுடையான்

செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும்

உய்யான் பிறர்செவிக்கு உய்த்து.       3


கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னான்அமிர்து

நற்புடைய நாடமிர்து நாட்டுக்கு - நற்புடைய

மேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்

ஆகவே செய்யின் அமிர்து.       4

கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்

இல்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும் - இல்லாதான்

ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈந்தளியான் என்றலும்

நல்லவர்கள் கேட்பின் நகை.       5

உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றீண்டு

இடம்பொழிய வேண்டுமேல் ஈகை - மடம்பொழிய

வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனை

யீண்டின் இயையும் திரு.      6

படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்

இடைதனக்கு நுண்மை வனப்பாம் - நடைதனக்குக்

கோடா மொழிவனப்புக் கோற்(கு)அதுவே சேவகர்க்கு

வாடாதா வன்கண் வனப்பு.       7

பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்

முற்றினான் ஆகும் முதல்வன்நூல் - பற்றினால்

பாத்துண்பான் பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன்

காத்துண்பான் காணான் பிணி.       8


கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை

எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்(று) என்றல் கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான் நஞ்றென்றல் வனப்பு.       9

கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரிபோ வான்நாச்சாம்

நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம் - ஒன்றானும்

கண்டுழி நாச்சாம் கடவான் குடிப்பிறந்தான்

உண்டுழி நாச்சாம் உணர்ந்து.       10

சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடு

விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா

மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு

நாவிற்கு நன்றல் வசை.       11

நாணிலான் சால்பும் நடையிலான் நன்னோன்பும்

ஊணிலான் செய்யும் உதாரதையும் - ஏணிலான்

சேவகமும் செந்தமிழ் தேற்றான் சுவிச்செயலும்

நாவகமே நாடின் நகை.       12

கோறலும் நஞ்சூனைத் துய்த்தல் கொடுநஞ்சு

வேறலும் நஞ்சுமா(று) அல்லானைத் - தேறினான்

நீடாங்கு செய்தலும் நஞ்சாம் இளங்கிளியை

நாடாதே தீதுரையும் நஞ்சு.       13

இடரின்னா நட்டார்கண் ஈயாமை இன்னா

தொடர்பின்னா நள்ளார்கண் தூயார்ப் - படர்பின்னா

கண்டல் அவர்பூங் கதுப்பினாய் இன்னாதே

கொண்ட விரதம் குறைவு.       14

கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்

தண்டான் வழியொழுகல் தன்கிளையஃது - அண்டாதே

வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு

கோல்வழி வாழ்தல் குணம்.       15

பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை

இழைத்ததீங்(கு) எண்ணி யிருத்தல் - இழைத்த

பகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார்

நகைகெட வாழ்வதும் நன்று.       16

கதநன்று சான்றாண்மை தீது கழிய

மதநன்று மாண்பில்லார் முன்னர் - விதநன்றால்

கோய்வாயிற் கீழுயிர்க்(கு)ஈ துற்றுக் குரைத்தெழுந்த

நாய்வாயுள் நல்ல தசை.       17

நட்டாரை யாக்கிப் பகைபணித்து வைஎயிற்றுப்

பட்டார் அகல்அல்கு லார்படிந்து - ஓட்டித்

தொடங்கினார் இல்லகத்து அன்பில் துறவா

உடம்பினான் ஆய பயன்.       18

பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார்

வையாமை வார்குழலார் நச்சினும் - நையாமை

ஓர்த்துடம்பு பேருமென்று ஊனவாய் உண்ணானேல்

பேர்த்துடம்பு கோடல் அரிது.       19

தேவறே கற்றவர் கல்லாதார் தேருங்கால்

பூதரே முன்பொருள் செய்யாதார் - ஆதரே

துன்பம் இலேம்பண்டு யாமே வனப்புடையேம்

என்பார் இருகால் எருது.       20

கள்ளான்கு தென்றும் கழுமான் கரியாரை

நள்ளான் உயிரிங்க நாவாடான் - நள்ளானாய்

ஊன்மறுத்துக் கொள்ளானேல் ஊனுடம்(பு) எஞ்ஞான்றும்

தான்மறுத்துக் கொள்ளான் தளர்ந்து.       21

பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்

மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா

விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு.       22

பூத்தாலும் காயா மரமுள நன்றறிவார்

மூவாது மூவர்நூல் தேற்றதார் - பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு

உரைத்தாலும் செல்லா(து) உணர்வு.       23

வடி(வு)இளமை வாய்த்த வனப்பு வணங்காக்

குடிகுலமென்(று) ஐந்தும் குறித்து - முடியாத்

துளங்கா நிலைகாணார் தொக்(கு)ஈர் பசுவால்

இளங்கால் துறவா தவர்.       24

கள்ளுண்டல் காணில் கணவன் பிரிந்துறைதல்

வெள்(கு)இல ளாய்ப்பிறர் இல்சேறல் - உள்ளிப்

பிறர்கருமம் ஆராய்தல் தீப்பெண் கிளைமைத்

துறமதுதீப் பெண்ணின் தொழில்.       25

பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள்வெள வன்மின்

கருங்குணத்தார் கேண்மை கழிமின் - ஒருங்குணர்ந்து

தீச்சொல்லே காமின் வருங்காலன் திண்ணிதே

வாய்ச்சொல்லே யன்று வழக்கு.       26

வான்குருவிக் கூ(டு)அரக்கு வால்உலண்டு கோல்தகுதல்

தேன்புரிந்து யார்க்கும் செயலாகா - தாம்புரீஇ

வல்லவர் வாய்ப்பன என்னார் ஒரோஒருவர்க்(கு)

ஒல்காதோர் ஒன்று படும்.       27

அறன்நாட்டான் நன்னெறிக்கண் நிற்க அடங்காப்

புறன்நாட்டான் புன்னெறிப் போகாது - புறன்நட்டான்

கண்டெடுத்துக் கள்களவு சூது கருத்தினால்

பண்டெடுத்துக் காட்டும் பயின்று.       28

ஆண்ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்(கு)இயைந்த

மாணாக்கன் அன்பான் வழிபடுவான் - மாணாக்கன்

கற்பனைத்தும் மூன்றுங் கடிந்தான் கடியாதான்

நிற்பனைத்தும் நெஞ்சிற்கோர் நோய்.       29

நெய்தல் முகிழ்த்துணை யாம்குடுமி நேர்மயிரும்

உய்தல் ஒருதிங்கள் நாளாகும் - செய்தல்

துணங்குநூல் ஓதுதல் கேட்டல்மா ணாக்கர்

வணங்கி வலங்கொண்டு வந்து.       30

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்

ஒருவன் அறியா தவனும் ஒருவன்

குணன்அடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்

கணன்அடங்கக் கற்றானும் இல்.       31

உயிர்நோய்செய் யாமை உறுநோய் மறத்தல்

செயீர்நோய் பிறன்கண்செய் யாமை - செயிர்நோய்

விழைவு வெகுளி இவைவிடுவா னாயின்

இழிவன்(று) இனிது தவம்.       32

வேட்பவன் பார்ப்பான் விளங்கிழைக்குக் கற்புடைமை

கேட்பவன் கேடில் பெரும்புலவன் - பாட்டவன்

சிந்தையான் ஆகும் சிறந்தது உலகினுள்

தந்தையான் ஆகும் நலம்.       33

வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்

உய்ப்பானே ஆசான் உயர்கதிக்கு - உய்ப்பான்

உடம்பினார் வேலி ஒருப்படுத்(து)ஊன் ஆரத்

தொடங்கானேல் சேறல் துணிவு.       34

வைததனால் ஆகும் வசைவணக்கம் நன்றாகச்

செய்ததனால் ஆகும் செழுங்குலமுன் - செய்த

பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த

அருளினால் ஆகும் அறம்.       35

இல்இயலார் நல்லறமும் எனைத் துறவறமும்

நல்லியலின் நாடி உரைக்குங்கால் - நல்லியல்

தானத்தால் போதும் தவத்தால் சுவர்க்கமாம்

ஞானத்தால் வீடாக நாட்டு.       36

மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு.       37

தொழீஇ அடஉண்ணார் தோழரில் துஞ்சார்

வழீஇய பிறர்பொருளை வெளவார் - கெழீஇக்

கலந்தபின் கீழ்காணார் காணாய் மடவாய்

புலந்தபின் போற்றார் புலை.       38

பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்

கொல்லாமை நன்று கொழிக்குங்கால் - பல்லார்முன்

பேணாமை பேணும் தகைய சிறிதெனினும்

மாணாமை மாண்டார் மனம்.      39

பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார்

உண்டார் அடிசிலே தோழரில் - கொண்டாரா

யாக்கைக்குத் தக்க அறிவில்லார்க் காப்படுப்பின்

காக்கைக்குக் காப்படுத்த சோறு.       40

உடையிட்டார் புல்மேய்வார் ஓடுநீர் புக்கார்

படையிட்டார் பற்றேதும் இன்றி - நடையிட்டார்

இவ்வகை ஐவரையும் என்றும் அணுகாரே

செவ்வகைச் சேவகர் சென்று.       41

பூவாதான் பூப்புப் புறங்கொடுத் தாள்இலிங்கி

ஓவாதான் கோலம் ஒருபொழுதும் - காவாதாள்

யார்யார் பிறர்மனையாள் உள்ளிட்டில் ஐவரையும்

சாரார் பகைபோல் சலித்து.       42

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்

வெகுவாமை வீழ்ந்துவிருந் தோம்பித் - திருவாக்கும்

தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு

செய்வதே பெண்டிர் சிறப்பு.       43

நாள்கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றாம்அக்

கோள்கூட்டம் யோகம் குணன்உணர்ந்து - தோள்கூட்டல்

உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வானால்

பெற்றால்நாள் கொள்க பெரிது.       44


பேண்அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை

நாண்ஒடுக்கம் என்றைந்தும் நண்ணின்றாப் - பூண்ஒடுக்கம்

பொன்வரைக்கோங் கேர்முலைப் பூந்திருவே யாயினும்

தன்வரைத் தாழ்த்தல் அரிது.       45


வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்

நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்ற

தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும்

ஓவா(து) உரைக்கும் உலகு.       46


அழியாமை எத்துவமும் சார்ந்தாரை ஆக்கல்

பழியாமை பாத்தல்யார் மாட்டும் - ஒளியாமை

கன்றுசா வப்பால் கறவாமை செய்யாமை

மன்றுசார் வாசு மனை.       47


நசைகொல்லார் நச்சியார்க்(கு) என்றும் கிளைஞர்

மிசைகொல்லார் வேளாண்மை கொல்லார் - இசைகொல்லார்

பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார்

என்பெறினும் கொல்லார் இயைந்து.       48


நீண்டநீர் காடு களர்நிவந்து விண்தோயும்

மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு - மாண்டவர்

ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை

வேந்தனா நாட்டல் விதி.       49


பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு

முற்றாமை கேடு முரண்கேடு - தெற்றத்

தொழில்மகன் தன்னோடு மாறாயின் என்றும்

உழுமகற்குக் கேடென்(று) உரை.       50


கொல்லாமை நன்று கொலைதீ(து) எழுத்தினைக்

கல்லாமை தீது கதந்தீது - நல்லார்

மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்

பழியாமை பல்லார் பதி.       51


உண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா(று)

எண்ணாமை நன்றிகழல் தீதெளியார் - எண்ணின்

அரியரா வார்பிறரிற் செல்லாரே உண்ணார்

பெரியரா வார்பிறர் கைத்து.       52


மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை

ஒக்க உடனுறைதல் ஊண்அமைவு - தொக்க

அலவலை அல்லாமை பெண்மகளிர்க்(கு) ஐந்து

தலைமகனைத் தாழ்க்கு மருந்து.       53


கொண்டான் கொழுநன் உடன்பிறந்தான் தன்மாமன்

வண்டார்பூந் தொங்கல் மகன்தந்தை - வண்தாராய் !

யாப்பார்பூங் கோதை அணிஇழையை நன்கியையக்

காப்பார் கருது மிடத்து.      54


ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவம் என்றைந்தும்

தாம்பல்வா யோடி நிறைகாத்தல் - ஓம்பார்

நெடுங்கழைநீண் மூங்கில் எனஇகழ்ந்தார் ஆட்டும்

கொடுங்குழை போலக் கொளின்.       55


பொன்பெறுங் கற்றான் பொருள்பெறும் நற்கவி

என்பெறும் வாதி இசைபெறும் - முன்பெறக்

கல்லார்கற் றாரினத்தார் அல்லார் பெறுபவே

நல்லார் இனத்து நகை.       56


நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்து

ஒல்லை உயிர்க்(கு)ஊற்றம் கோலாகி - ஒல்லுமெனின்

மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தான்

ஆயின் அழிதல் அறிவு.       57


தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்

இல்நிலையும் ஈடில் இயல்நிலையும் - துன்னி

அளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்

பிளந்தறியும் பேராற்ற லான்.      58


பொருள்போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போந்த

அருள்போகா ஆரறம்என்(று) ஐந்தும் - இருள்தீரக்

கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்

தேறப் படுங்குணத்தி னான்.       59


நன்புலத்து வையடக்கி நாளும்மா டோ போற்றிப்

புன்கலத்தைச் செய்(து) எருப் போற்றியபின் - இன்புலத்தின்

பண்கலப்பை என்றிலை பாற்படுப் பான்உழவோன்

நுண்கலப்பை நூலோது வார்.       60


ஏலாமை நன்றீதல் தீதுபண்(பு) இல்லார்க்குச்

சாலாமை நன்றுநூல் சாயினும் - சாலாமை

நன்று தவநனி செய்தல்தீ(து) என்பாரை

இன்றுகா(று) யாம்கண் டிலம்.       61


அரம்போல் கிளையடங்காய் பெண்வியக்கத் தொண்டு

மரம்போல் மகன்மாறாய் நின்று - கரம்போலக்

கள்ளநோய் காணும் அயல்ஐந்தும் ஆகுமேல்

உள்ளநோய் வேண்டா உயிர்க்கு.       62


நீர்அறம் நன்று நிழல்நன்று தன்இல்லுள்

பார்அறம் நன்றுபாத்(து) உண்பானேல் - பேரறம்

நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்

ஒன்றுமாம் சால வுடன்.       63


பிடிப்பிச்சை பின்னிறை ஐயங்கூழ் கூற்றோ(டு)

எடுத்திரந்த உப்(பு)இத் துணையோ(டு) - அடுத்துச்

சிறுபயம் என்னார் சிதவலிப்(பு) ஈவார்

பெறுபயன்பின் சாலப் பெரிது.       64


வெந்தீங்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்உப்(பு)

அந்த மகன்சார்ந்த தந்தையென்(று) - ஐந்தினுள்

ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிதெனினும்

குன்றுபோற் கூடும் பயன்.       65


குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து

உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்

பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்

ஏகும் சுவர்க்கத்(து) இனிது.       66


போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்

ஓர்த்(து) பால்மறைத்(து) உண்பான்மேய் - ஓர்த்த

அறமாம்மேல் சொல்பொறுக்க அன்றேல் கலிக்கண்

துறவறம்பொய் இல்லறமே வாய்.       67


தான்பிறந்த இல்நினைந்து தன்னைக் கடைப்பிடித்துத்

தான்பிற ரால்கருதற் பாடுணர்ந்து - தான்பிறரால்

சாவ எனவாழான் சான்றேரால் பல்யாண்டும்

வாழ்க எனவாழ்தல் நன்று.       68


நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல்

வடுத்தீர் பகல்வாய் உறையே - வடுத்தீரா

ஆகும்அந் நான்கொழிந்(து) ஐந்தடக்கு வானாநின்

வேகும்பம் வேண்டான் விடும்.       69


கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது

கொன்றதனைக் கொண்டான் கொழுக்குங்கால் - கொன்றதனை

அட்டான் இடவுண்டான் ஐவரினும் ஆகுமெனக்

கட்டெறிந்த பாவம் கருது.       70


சிறைக்கிடந்தார் செந்தார்க்கு நோற்பார் பலநாள்

உறைக்கிடந்தார் ஒன்றிடையிட்(டு) உண்பார் - பிறைக்கிடந்து

முற்றனைத்தும் உண்ணா தவர்க்கீந்தார் மன்னவராய்க்

கற்றனைத்தும் வாழ்வார் கலந்து.       71


ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை

ஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை - ஆன்ற

அழிந்தானை இல்வைத்தல் பேரறமா ஆற்ற

மொழிந்தார் முதுநூலார் முன்பு.       72


வலியிழந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்

நலி(பு)அழிந்தார் நாட்(டு)அறைபோய் நைந்தார் - மெலிவொழிய

இன்னவராம் என்னாராய் ஈந்த ஒருதுற்று

மன்னவராய்ச் செய்யும் மதித்து.       73


கலங்காமைக் காத்தல் கருப்பஞ் சிதைந்தால்

இலங்காமை பேரறத்தால் ஈற்றம் - விலங்காமைக்

கோடல் குழவி மருந்து வெருட்டாமை

நாடின் அறம்பெருமை நாட்டு.       74


சூலாமை சூலிற் படுந்துன்பம் ஈன்றபின்

ஏலாமை ஏற்றால் வளர்ப்பருமை - சால்பவை

வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை

கொல்லாமை நன்றால் கொழித்து.       75


சிக்கர் சிதடர் சிதலைபோல் வாயுடையார்

துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க

வருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்

ஒருநோயும் இன்றிவாழ் வார்.       76


பக்கம் படாமை ஒருவர்க்குப் பாடேற்றல்

தக்கம் படாமை தவமல்லாத் - தக்கார்

இழியினர்க்கே யானும் பசித்தார்க்(கு)ஊண் ஈதல்

கழிசினங் காத்தல் கடன்.       77


புண்பட்டார் போற்றுவார் இல்லாதவர் போகுயிரார்

கண்கெட்டார் காலிரண்டும் இல்லாதார் -கண்கண்பட்(டு)

ஆழ்ந்து நெகிழ்ந்தவர்க்கு ஈந்தார் கடைபோக

வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து.       78


பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்

அஞ்சா(து) உடைபடையுள் போந்தெறிவான் - எஞ்சாதே

உண்பதுமுன் ஈவான் குழவி பலிகொடுப்பான்

எண்பதின் மேலும்வாழ் வாண்.       79


வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற்(று) ஏறார்

புரையில்லார் நள்ளார்போர் வேந்தன் - வரைபோல்

கடுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்

கொடும்புலி கொட்கும் வழி.       80


தக்கார் வழிகெடாது ஆகுந் தகாதவர்

உக்க வழியராய் ஒல்குவர் - தக்க

இனத்தினான் ஆகும் பழியும் புகழும்

மனத்தினான் ஆகும் மதி.       81


கழிந்தவை தானிரங்கான் கைலாரா நச்சான்

இழிந்தவை இன்புறான் இல்லார் - மொழிந்தவை

மென்மொழியால் உள்நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால்

இன்மொழியால் ஏத்தப் படும்.       82


காடுபோல் கட்கினிய இல்லம் பிறர்பொருள்

ஓடுபோல் தாரம் பிறந்ததாய் - ஊடுபோய்க்

கோத்தின்னா சொல்லானாய்க் கொல்லானேல் பல்லவர்

ஒத்தினால் என்ன குறை.       83


தோல்கன்று காட்டிக் கறவார் கறந்தபால்

பாற்பட்டார் உண்ணார் பழிபாவம் - பாற்பட்டார்

ஏற்றவாது இன்புற்று வாழ்வன வீடழியக்

கூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து.       84


நகையொரு மந்திரம் நட்டார்க்கு வாரம்

பகையொரு பாட்டுரையென்(று) ஐந்தும் - தொகையொடு

மூத்தோர் இருந்துழி வேண்டார் முதுநூலுள்

யாத்தார் அறிந்தவர் ஆய்ந்து.       85


சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே

வித்தகர் கண்டவீ(டு) உள்ளிட்டாங்(கு) - அத்தகத்து

அந்தஇவ் ஐந்தும் அறிவான் தலையாய

சிந்திப்பிற் சிட்டன் சிறந்து.       86


கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு

எண்ணுங்கால் சாந்தே இலைநறுக்கிட்(டு) - எண்ணுதல்

இட்டஇவ் ஐந்தும் அறிவான் இடையாய

சிட்டனென்(று) எண்ணப் படும்.       87


நாணிலன் நாய்நன்கு நள்ளாதான் நாய்பெரியார்ப்

பேணிலன் நாய்பிறர் சேவகன்நாய் - ஏணில்

பொருந்திய பூண்முலையார் சேரிகைத்(து) இல்லான்

பருத்தி பகர்வழி நாய்.       88


நாண்எளிது பெண்மை நகையெளிது நட்டானேல்

ஏண்எளிது சேவக னேல்பெரியார் - பேண்எளிது

கொம்பு மறைக்கும் இடையாய் அளியன்மீ(து)

அம்பு பறத்தல் அரிது.       89


இன்சொலான் ஆகும் கிளமை இயல்பில்லா

வன்சொல்லின் ஆகும் பகைமைமன் - மென்சொல்லின்

ஓய்வில்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்

வீவில்லா விடாய் விடும்.       90


தக்க(து) இளையான் தவம்செல்வன் ஊண்மறுத்தல்

தக்கது கற்புடை யாள்வனப்புத் - தக்க(து)

தழல்தண்என் தோளான் அறிவிலன் ஆயின்

நிழற்கண் முயிறாய் விடும்.       91


பொய்யால் சுவர்க்கம்வா யால்நிர யம்பொருள்

மையார் மடந்தையால் வாழ்வினிது - மெய்யென்றால்

மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய் தீதன்றால்

எத்தவ மானும் படல்.       92


புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தே

நல்லறத்தா ரோடு நடக்கலாம் - நல்லறத்தார்க்(கு)

அட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே இம்மையில்

அட்டிட்டுண் டாற்றவாழ் வார்.       93


ஈவது நன்றுதீ(து) ஈயாமை நல்லவர்

மேவது நன்றுமே வாதாரோ(டு) - ஓவாது

கேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே

ஓட்டுத் தவநிற்கும் ஊர்ந்து.       94


உண்இடத்தும் ஒன்னார் மெலிவிடத்தும் மந்திரங்கொண்(டு)

எண்இடத்தும் செல்லாமை தான்தலையே - எண்ணி

உரைப்பூசல் கோறல் உயர்தவமேல் கங்கைக்

கரைப்பூசை போற்றக் கடை.       95


பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசி

பொத்தில் பொருள்திறத்துச் செவ்வியான் - பொத்தின்று

வைத்தார் அதுவழக்குஞ் சான்றவர் தம்செம்மை

செத்தால் அறிக சிறந்து.       96


வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை

குறிப்படரல் தீக்சொற்க ளோடு - மொழிப்பட்ட

காய்ந்து விடுதல் களைந்(து)உயக் கற்றவர்

ஆய்ந்து விடுதல் அறம்.       97


பாயிரம்

மல்லிவர் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்

பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால் - கல்லா

மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி யாசான்

சிறுபஞ்ச மூலம்செய் தான்.       98

சிறுபஞ்சமூலம் முற்றிற்று

நல்லாதனாரின் திரிகடுகம்

காப்பு

கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்

தண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணிய

மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்

பூவைப்பூ வண்ணன் அடி.

1. நூல்

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய

தொல்குடியின் மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்

அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்

திரிகடுகம் போலு மருந்து.

2. ஒழுக்கமுடையார் தொழில்கள்

தன்குணம் குன்றாத் தகைமையும் தாவில்சீர்

இன்குணத்தார் ஏவினசெய்தலும் - நன்குணர்வின்

நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்

மென்முறை யாளர் தொழில்.

3. அறியாமையால் வரும் கேடு

கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட

இல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம்

சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்

அறியாமை யால்வரும் கேடு.


4. சாவதற்குரியவன் தொழில்கள்

பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற

பெற்றத்துள் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக்

காய்வானைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்

சாவ வுறுவான் தொழில்.


5. அருந்துன்பம் காட்டும் நெறி

வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப

விழைவிலாப் பெண்டீர்த்தோள் சேர்வும் - உழந்து

விருந்தினனாய் வேற்றூர் புகலும் இம்மூன்றும்

அருந்துயரம் காட்டு நெறி.


6. ஆண்மைச் செல்வங்கள்

பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்

திறன்வேறு கூறில் பொறையும் - அறவினையைக்

காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்

ஊராண்மை யென்னும் செருக்கு.


7. ஊமை கண்ட கனா

வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்

செல்வக் குடியுட் பிறத்தலும் - பல்அவையுள்

அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்

துஞ்சூமன் கண்ட கனா.


8. பேசக்கூடாத இயல்பு உடையவை

தொல்லவையுள் தோன்றும் குடிமையும் தொக்கிருந்த

நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து

வேந்துவப்ப வட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்

தாந்தம்மைக் கூறாப் பொருள்.


9. மூடர் விரும்புபவை

பெருமை யுடையா ரினத்தின் அகறல்

உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்

விழுமிய வல்ல துணிதல் இம்மூன்றும்

முழுமக்கள் காத லவை.


10. நன்மை அளிக்காதவை

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்

தன்மையி லாளர் அயலிருப்பும் இம்முன்றும்

நன்மை பயத்தல் இல.


11. ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்

களியாதான் காவா துரையும் - தெளியாதான்

கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்

ஊரெல்லாம் நோவ துடைத்து.


12. நன்மை அளிப்பவை

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்

கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்

கேளாக வாழ்தல் இனிது.


13. பெறற்கு அரியார்

சீலம் அறிவான் இளங்கிளை சாலக்

குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி

மாண்ட குணத்தான் தவசியென்ற இம்மூவர்

யாண்டும் பெறற்கரி யார்.


14. அறிவுடையார் அடையாதவை

இழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவை

சொல்லுதல் வற்றாகும் பேதைமை - யாண்டும்

செறுவொடு நிற்கும் சிறுமைஇம் மூன்றும்

குறுகார் அறிவுடை யார்.


15. நட்புக் கொள்ளத் தகாதவர்.

பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து

தாழ்விடத்து நேர்கருதும் தட்டையும் - ஊழினால்

ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவர்

நட்கப் படாஅ தவர்.


16. இறவாத உடம்பை அடைந்தவர்

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்

பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்

கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்

சாவா உடம்பெய்தி னார்.


17. கல்வித் தோணியைக் கைவிட்டவர்

மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள்

பூப்பின்கண் சாராத தலைமகனும் - வாய்ப்பகையுள்

சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர்

கல்விப் புணைகைவிட் டார்.


18. கள்வர் போல் அஞ்ச வேண்டியவர்

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு

இருதலையு மின்னாப் பிரிவும் - உருவினை

உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்

கள்வரி னஞ்சப் படும்.


19. பழி முதலியவற்றினின்று நீங்காதவர்

கொல்யானைக் கோடும் குணமிலியும் எல்லிற்

பிறன்கடை நின்றொழுகு வானும் - மறந்தெரியாது

ஆடும்பாம் பாட்டும் அறிவிலியும் இம்மூவர்

நாடுங்கால் தூங்கு பவர்.


20. எல்லார்க்கும் இன்னாதன

ஆசை பிறன்கண் படுதலும் பாசம்

பசிப்ப மடியைக் கொளலும் - கதித்தொருவன்

கல்லானென்று எள்ளப் படுதலும் இம்மூன்றும்

எல்லார்க்கு மின்னா தன.


21. நல்லவரின் கொள்கைகள்

வருவாயுள் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப்

பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்

நலமாட்சி நல்லவர் கோள்.


22. வீடு அடையலாம்

பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்


பற்றறா தோடும் அவாத்தேரும் - தெற்றெனப்

பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும்

வித்தற வீடும் பிறப்பு.


23. அறப்பயனைக் கட்டும் கயிறு

தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தார்

குற்றம் கடிந்த ஒழுக்கமும் - தெற்றெனப்

பல்பொருள் நீங்கிய சிந்தையும் இம்மூன்றும்

நல்வினை யார்க்கும் கயிறு.


24. நரகத்தைப் போன்றவை

காண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்

தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க்

காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்

ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.


25. அறிஞர் கொள்ளாத உணவுகள்

செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்ற

அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு

வைத்த அறப்புறம் கொன்றானும் இம்மூவர்

கைத்துண்ணார் கற்றறிந் தார்.


26. உயர்ந்தவர் எனப்படுபவர்


ஒல்வ தறியும் விருந்தினனும் ஆருயிரைக்

கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதின்

சீலமினி துடைய ஆசானும் இம்மூவர்

ஞாலம் எனப்படு வார்.


27. தூயவரின் செயல்கள்

உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்

பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்

சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்

தூஉய மென்பார் தொழில்.


28. உமி குத்திக் கை வருந்துவார்

வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்

இல்லது காமுற்று இருப்பானும் - கல்வி

செவிக்குற்றம் பார்த்திருப்பானும் இம்மூன்றும்

உமிக்குத்திக் கைவருந்துவார்.


29. கற்றவர் கருத்து.

பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை

கண்விழைந்து கையுறினும் காதல் பொருட்கின்மை

மண்விழுந்து வாழ்நாள் மதியாமை இம்மூன்றும்

நுண்விழைந்த நூலவர் நோக்கு.


30. நிலைத்த புகழை உடையவர்

தன்நச்சிச் சென்றாரை எள்ளா வொருவனும்

மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்

என்றும் அழுக்காறி கந்தானும் இம்மூவர்

நின்ற புகழுடை யார்.


31. தலை சிறந்தவை

பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்

இல்லற முட்டாது இயற்றலும் - வல்லிதின்

தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றும்

கேள்வியுள் எல்லாம் தலை.


32. கற்றவர் கடமை

நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்குஏலா

வெண்மொழி வேண்டினும் சொல்லாமை - நன்மொழியைச்

சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்

கற்றறிந்தார் பூண்ட கடன்.


33. மன்னன் கைவிடலாகாதவை

கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ

ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்

கடைமணிபோல் திண்ணியான் காப்பும் இம்மூன்றும்

படைவேந்தன் மற்று விடல்.


34. உலகம் எனப்படுவார்

மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து

முறைநிலை கோடா அரசும் - சிறைநின்று

அலவலை இல்லாக் குடியும் இம்மூவர்

உலகம் எனப்படு வார்.


35. முக்தியுலகை அடைபவர்

முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்

நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்

மைந்நீர்மை இன்றி மயலுறுப்பான் இம்மூவர்

மெய்ந்நீர்மை மேல் நிற்பவர்.


36. நூல்களின் உண்மை உணராதவர்

ஊனுண் டுயிர்கட் கருளுடையேம் என்பானும்

தானுடன்பா டின்றி வினையாக்கும் மென்பானும்

காமுறு வேள்வியில் கொல்வானும் இம்மூவர்

தாமறிவர் தாங்கண்ட வாறு.


37. வாய்மையாளர் வழக்கம்

குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய

சால்பினில் தோன்றும் குடிமையும் - பால்போலும்

தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இம்மூன்றும்

வாய்மை யடையார் வழக்கு.


38. செல்வம் உடைக்கும் படை

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்

கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய

பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்

செல்வம் உடைக்கும் படை.


39. அறம் அற்றவரின் செயல்கள்

புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்

கலமயக்கம் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து

பொய்ம்மயக்கம் சூதின் கண்தாங்கால் இம்மூன்றும்

நன்மையி லாளர் தொழில்.


40. தொல்லறிவாளர் தொழில்கள்

வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட்கு

ஒத்த லொழுக்கம் உடைமையும் - பாத்துண்ணும்

நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றும்

தொல்லறி வாளர் தொழில்.


41. அறங்களுள் சிறந்தவை

அலந்தார்க்கொன்று ஈந்த புகழும் துளங்கினும்

தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி

நாள்நாளும் நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்

கேள்வியுள் எல்லாந் தலை.


42. வேளாண்குடிக்கு அழகாவன

கழகத்தால் வந்த பொருள்கா முறாமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல்

உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்

அழகென்ப வேளாண் குடிக்கு.


43.

வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற

செய்கை அடங்குதல் திப்பியமாம் - பொய்யின்றி

நெஞ்சம் அடங்குதல் வீடாகும் இம்மூன்றும்

வஞ்சத்தின் தீர்ந்த பொருள்.


44. அறிவுடையார்க்கு நோய் ஆவன

விருந்தின்றி உண்ட பகலும் திருந்திழையார்

புல்லப்புடை பெயராக் கங்குலும் - இல்லார்க்கொன்று

ஈயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்

நோயே உரனுடை யார்க்கு.


45. நரகத்தில் விழுபவர்

ஆற்றானை ஆற்றென் றலைப்பானும் அன்பின்றி

ஏற்றார்க்கு இயைவ கரப்பானும் - கூற்றம்

வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்

நிரயத்துச் சென்றுவீழ் வார்.


46. அறிவுடையார் குறுகாதவை.


கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்து

மேல்தூய்மை யில்லாத வெங்களிறும் - சீறிக்

கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்

குறுகார் அறிவுடை யார்.


47. காக்கப்பட வேண்டியவை

சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்

தாளினால் தந்த விழுநிதியும் - நாடோ றும்

நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்

காப்பிகழ் ஆகாப் பொருள்.


48. மெய்ப்பொருள் உணர்ந்தவர்

வைதலை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த

சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய

கைப்பதனைக் கட்டியேன்று உண்பானும் இம்மூவர்

மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.


49. எவருக்கும் பயனற்றவர்

ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது

வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி

அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்

இம்மைக்கு உறுதியில் லார்.


50. மழையைக் குறைப்பவர்

கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்

உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்

இல்லிருந்து எல்லை கடப்பாளும் இம்மூவர்

வல்லே மழையறுக்கும் கோள்.


51. ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை

தூர்ந்துஒழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே

சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் - சலவரே

ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்

தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்.


52. ஆராயுமிடத்தவர் உள்ளவை

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற

பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும்

மறுமைக் கணிகலம் கல்வி இம்மூன்றும்

குறியுடையார் கண்ணே யுள.


53. தெரியாத பொருள்கள்

குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்

கற்றறிவு இல்லான் கதழ்ந்துரையும் - பற்றிய

பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும்

எண்ணின் தெரியாப் பொருள்.


54. அறிவற்ற செயல்கள்

தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா

நல்பயம் காய்வின்கண் கூறலும் - பின்பயவாக்

குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும்

தெற்றெனவு இல்லார் தொழில்.


55. ஒற்றரைப் போன்றவர் எனக் கூறப்படுவர்

அருமறை காவாத நட்பும் பெருமையை

வேண்டாது விட்டுஒழிந்த பெண்பாலும் யாண்டானும்

செற்றம்கொண் டாடும் சிறுதொழும்பும் இம்மூவர்

ஒற்றாள் எனப்படு வார்.


56. உயர்ந்த நெறியைத் தூர்க்காதவை

முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு

தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த

ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்

விழுப்ப நெறிதூரா வாறு.


57.

கொட்டி அளந்தமையாப் பாடலும் தட்டித்துப்

பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான்

ஆளும் கலங்கா முறுதலும் இம்மூன்றும்

கேள்வியுள் இன்னா தன.


58. இளவரசனின் செயல்கள்

பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்

கேளிர் உவப்பத் தழுவுதல் - கேளிராய்த்

துன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும்

மன்னற்கு இளையான் தொழில்.


59. உள்ளவை போல் கெடுபவை

கிளைஞர்க்கு உதவாதவன் செல்வமும் பைங்கூழ்

விளைவின்கண் போற்றான் உழவும் - இளையனாய்க்

கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்

உள்ளன போலக் கெடும்.


60. துன்பப் பிறப்புகள்

பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்

விலங்கின் பிறப்பின் வெருவும் - புலம்தெரியா

மக்கள் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்

துக்கப் பிறப்பாய் விடும்.


61. அமைச்சர்களின் கோள்

ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்

எய்துவது எய்தாமை முற்காத்தல் - வைகலும்

மாறேற்கும் மன்னர் நிலைஅறிதல் இம்மூவர்

சீரேற்ற பேரமைச்சர் கோள்.


62. மக்களை இழப்பவர்

நன்றிப் பயன்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்

மன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி

வைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்

எச்சம் இழந்துவாழ் வார்.


63. நன்மையைத் தாராதவை

நோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும்

ஈர்வளையை இல்லத் திருத்தலும் - சீர்பயவாத்

தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல.


64. கற்புடையாளின் கடமைகள்

நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்

இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்

மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்

கற்புடையாள் பூண்ட கடன்.


65. மிக்க வருத்தத்தைத் தருவன

அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற

விட்டகல கில்லாத வேட்கையும் - கட்டிய

மெய்ந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும்

தம்நெய்யில் தாம்பொரியு மாறு.


66. சிறப்பில்லாதவை

கொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்

சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய

கோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும்

சால்போடு பட்டது இல.


67. செய்யக்கூடிய திண்மை

எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்

செயிர்நிற்கும் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப

முந்தை பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்

நொந்தார் செயக்கிடந்தது இல்.


68. அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை

இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்

நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்

துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்

நன்றறியும் மாந்தர்க்கு உள.


69. கிடைத்தற்கு அரியவை

அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய

மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து

நெறிமாறி வந்த விருந்தும் இம்மூன்றும்

பெறுமா றரிய பொருள்.


70. செல்வம் உடையார் எனப்படுவர்

காவோ டறக்குளம் தொட்டானும் நாவினால்

வேதம் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்து

ஒல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்

செல்வர் எனப்படு வார்.


71. காணக் கூடாதவை

உடுத்தாடை இல்லாதார் நீராட்டும் பெண்டிர்

தொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும்

ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்

காண அரியவென் கண்.


72. அஞ்சுபவை

நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்

அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்

மறவனை எவ்வுயிரும் அஞ்சும் இம்மூன்றும்

திறவதில் தீர்ந்த பொருள்.


73. வாழ்வார் போல் தாழ்பவர்

இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்

பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்

விரிகட லூடுசெல் வானும் இம்மூவர்

அரிய துணிந்துவாழ் வார்.


74. அறத்தைக் கடைப்பிடிக்காதவர் இயல்புகள்

கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்

புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன்று

ஈகென் பவனை நகுவானும் இம்மூவர்

யாதும் கடைப்பிடியா தார்.


75. மரம்போல் அசைவற்றவர்

வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து

உணர்வுடையான் ஓதிய நூலும் - புணர்வின்கண்

தக்க தறியும் தலைமகனும் இம்மூவர்

பொத்தின்றிக் காழ்த்த மரம்.


76. பாதுகாத்தற்கு அரியவர்

மாரிநாள் வந்த வருந்தும் மனம்பிறிதாய்க்

காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து

மாற்றம் மறுத்துரைக்கும் சேவகனும் இம்மூவர்

போற்றற்கு அரியார் புரிந்து.


77. குடிப்பிறப்பில் குற்றம் அற்றவர் செயல்

கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை

நள்ளிருளும் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி

வடுவான வாராமல் காத்தல் இம்மூன்றும்

குடிமா சிலார்க்கே உள.


78. நற்றவமுடையார் செயல்கள்

தூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்

வாய்மை உடைமை வனப்பாகும் - தீமை

மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்

தவத்தில் தருக்கினார் கோள்.


79. நெஞ்சுக்கு ஒரு நோய்

பழிஅஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்

கொண்ட அருந்தவம் விட்டானும் - கொண்டிருந்து

இல்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்

நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.


80. புதரில் விதைத்த விதை

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்

நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்

தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும்

தூற்றின்கண் தூவிய வித்து.


81. ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்

தோள்வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்

நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்

வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்

ஆசைக் கடலுள் ஆழ்வார்.


82. நல்லவர் வழிகள்

சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்

தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் - பாய்ந்தெழுந்து

கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்

நல்லாள் வழங்கும் நெறி.


83. நல்வழியைக் கெடுக்காதவை

உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்ஆகும்

நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்ஆகும்

செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்

செப்பநெறி தூரா வாறு.


84. வறுமையால் பற்றப்பட்டார்

வாய்நன்கு அமையாக் குளனும் வயிறாரத்

தாய்முலை உண்ணாக் குழவியும் சேய்மரபில்

கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்

நல்குரவு சேரப்பட் டார்.


85. ஒற்றரின் இயல்புகள்

எள்ளப் படுமரபிற்று ஆகலும் உள்பொருளைக்

கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி

உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்

உள்ளிய ஒற்றாள் குணம்.


86. குற்றங்களை உண்டாக்கும் பகைகள்

அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்

கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்

நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்

குற்றம் தரூஉம் பகை.


87. மூடரின் செயல்கள்

கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்கு

அகன்ற இனம்புகு வானும் இருந்து

விழுநிதி குன்றுவிப் பானும் இம்மூவர்

முழுமக்க ளாகற்பா லார்.


88. மனவுறுதியை நிலைகுலையச் செய்வன

பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்

தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்

பிணைசெல்வ மாண்பின்று இயங்கலிவை மூன்றும்

புணையின் நிலைகலக்கும் ஆறு.


89. பிறந்தும் பிறவாதவர்

அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்

பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்

இறந்து இன்னா சொல்லகிற் பானுமிம் மூவர்

பிறந்தும் பிறந்திலா தார்.


90. நரக உலகைச் சேராமைக்குரிய வழிகள்

ஈதற்குச் செய்க பொருளை அறநெறி

சேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும்

அருள்புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்

இருள்உலகம் சேராத ஆறு.


91. உடல் பற்றுடைய மூடர் செய்கை

பெறுதிகண் பொச்சாந்து உரைத்தல் உயிரை

இறுதிக்கண் யாமிழந்தேம் என்றல் - மறுவந்து

தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்

மன்னா உடம்பின் குறி.


92. பிறப்பின் பயனை அடையாதவர்

விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை

ஒன்றும் உணராத ஏழையும் - என்றும்

இறந்துரை காமுறு வானும் இம்மூவர்

பிறந்தும் பிறவா தவர்.


93. உயிர்க்கு அறியாமையை அளிப்பவை

இருளாய்க் கழியும் உலகமும் யாதும்

தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருள்அல்ல

காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும்

பேதைமை வாழும் உயிர்க்கு.


94. நல்லொழுக்கம் இல்லாதவர்

நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்

பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில்

இழுக்கான சொல்லாடு வானும் இம்மூவர்

ஒழுக்கம் கடைப்பிடியா தார்.


95. நல்வினையை நீக்கும் ஆயுதங்கள்


அறிவுஅழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்

செறிவழங்கத் தோன்றும் விழைவும் - செறுநரின்

வெவ்வுரை நோனா வெகுள்வும் இவைமூன்றும்

நல்வினை நீக்கும் படை.


96. பெய்யெனப் பெய்யும் மழை

கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன

செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ

நல்லவை சொய்வான் அரசன் இவர்மூவர்

பெய்எனப் பெய்யும் மழை.


97. பாவச் செயல்கள்

ஐங்குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வுற்ற

எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த

கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்

நற்புடையி லாளர் தொழில்.


98. மும்மாரிக்கு வித்து

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்

வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்

பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்

திங்கள்மும் மாரிக்கு வித்து.


99. நல்லுலகம் சேராதவர்

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற

பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி

அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்

நல்லுலகம் சேரா தவர்.

100. மன்னர்க்கு உறுப்புகள்

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்

எத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்துஅமைந்த

எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்

மண்ணாகும் மேந்தர்க்கு உறுப்பு.

திரிகடுகம் முற்றிற்று.

இன்னா நாற்பது   

கடவுள் வாழ்த்து

முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா

பொற்பனை வெள்ளையை@ யுள்ளா தொழுகின்னா

சக்கரத் தானை மறப்பின்னா% வாங்கின்னா

சத்தியான் றாடொழா தார்க்கு.

@பொற்பன வெள்ளியை %மன்றப்பின்னாது

நூல்

பந்தமில் லாத மனையின் வனப்பின்னா

தந்தையில் லாத புதல்வ னழகின்னா

அந்தண ரில்லிருந் தூணின்னா@ வாங்கின்னா

மந்திரம் வாயா விடின்.       1

@ ஊணின்னாது

பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா

ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா

பாத்தில் புநடைவை யுடையின்னா@ வாங்கின்னா

காப்பாற்றா வேந்த னுலகு.       2

@உடையின்னாது

கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா

நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா

கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா

தடுமாறி வாழ்த லுயிர்க்கு.       3

எருதி லுழவர்க்குப் போகீர மின்னா

கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா

திருவுடை யாரைச் செறலின்னா வின்னா

பெருவலியார்க் கின்னா செயல்.       4

சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா

உறைசேர்@ பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா

முறையின்றி யாளு மரசின்னா வின்னா

மறையின்றிச் செய்யும் வினை.       5

@புரைசேர்

அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா@

மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா

இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா

கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.       6

@ கடு மொழியின்னா

ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா

நாற்ற மிலாத மலரி னழகின்னா

தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா

மாற்ற மறியா னுரை.       7

பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா

நகையாய நண்பினார் நாரின்மை யின்னா

இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா

நயமின் மனத்தவர் நட்பு.       8

கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா

வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா

வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா

பண்ணில் புரவி பரிப்பு.       9

பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா

இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா

அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா

பொருளில்லார் வண்மை புரிவு.       10

உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா@

இடனில் சிறியரோ டியர்த்தநண் பின்னா

இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா

கடனுடையார் காணப் புகல்.       11

@மனைவி தொழி லின்னா

தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா

வலைசுமந் துண்பான் பெருமித மின்னா

புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா

முலையிள்ளாள் பெண்மை விழைவு.       12

மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா

துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா

பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா

பிணியன்னார் வாழு மனை.       13

வணரொலி@ யைம்பாலார் வஞ்சித்த லின்னா

துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா

புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா

உணர்வா ருணராக் கடை.       14

@வணரொளி

புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா

கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா

இல்லாதார் நல்ல விருப்பின்னா@ வாங்கின்னா

பல்லாரு ணாணப் படல்.       15

@விழைவின்னா

உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா

நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா

கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா

எண்ணிலான் செய்யுங் கணக்கு.       16

ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா

மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா

நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா

ஈன்றாளை யோம்பா விடல்.       17

உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா

மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா

சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா

மனவறி யாளர்@ தொடர்பு.       18

@அகம்வறியாளர்

குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா

நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா

நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா

கலத்தல் குலமில் வழி.       19

மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா

வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா

மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா

மூரி யெருத்தா லுழவு.       20

ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா

பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா

மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா

ஒத்திலாப் பார்ப்பா னுரை.       21

யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா

ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா

தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா

கான்யா@ றிடையிட்ட வூர்.       22

@ கானாறு

சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா

துறையிருந் தாடை கழுவுத லின்னா

அறைபறை யன்னவர்@ சொல்லின்னா வின்னா

நிறையில்லான் கொண்ட தவம்.       23

@அறைபறை யாயவர்

ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா

தீமை யுடையா ரயிலிருந்த னன்கின்னா

காமமுதிரி னுயிர்க்கின்னா@ வாங்கின்னா

யாமென் பவரொடு நட்பு.       24

@உயிர்க்கின்னாது

நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா@

ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா%

கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா

நட்ட கவற்றினாற் சூது.       25

@ இடுக்க ணனிகண்டா னன்கின்னா

% கண்டாற் பெரிதின்னா

பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா

அரியவை செய்து மெனவுரைத்த லின்னா

பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா

பெரியோர்க்குத் தீய செயல்.       26

பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா

கிழமை யுடையார்க்@ களைந்திடுத லின்னா

வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா

இளமையுண் மூப்புப் புகல்.       27

@கிழமை யுடையாரை

கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா

வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா

இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா

கல்லாதான் கோட்டி கொளல்.       28

குறியறியான் மாநாக@ மாட்டுவித்த லின்னா

தறியறியா% னீரின் பாய்ந்தாட& லின்னா

அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா

செறிவிலான் கேட்ட மறை.       29

@மானாகம் %இன்னா தறிவறியான்

& கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல்

நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா@

கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா

ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா

கடும்புலி வாழு மதர்.       30

@ நெடுமார்நீள் கோட்டுயர் பாஅய்த லின்னா

பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா

எண்ணறியா மாந்தர்@ ஒழுக்குநாட் கூற்றின்னா

மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா

தண்மை யிலாளர்% பகை.       31

@ எண்ணறிய மாந்தர் %தன்மையிலாளர்

தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா

முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா

நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா

தொன்மை யுடையார் கெடல்.       32

கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா

முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா@

வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா

கள்ள மனத்தார் தொடர்பு.       33

@ நடக்கி னனியின்னா

ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த@ லின்னா

விழுத்தகு நூலும்% விழையாதார்க் கின்னா

இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா

கழிப்புவாய் மண்டிலங் கொட்பு.       34

@ ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல்

%விழித்தகுநூலும்

எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா

குழலி னினிய@ மரத் தோசைநன் கின்னா

குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா

அழகுடையான் பேதை யெனல்.       35

@குழலினிய

பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா

நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா

வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா

கெடுமிடங் கைவிடுவார் நட்பு.       36

நறிய மலர்பெரிது நாறாமை யின்னா

துறையறியா னீரிழிந்து@ போகுத லின்னா

அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா

சிறியார்மேற் செற்றங் கொளல்.       37

@துறையறியா நீரிழிந்து

பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா

மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா

வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா

திறனிலான் செய்யும் வினை.       38

கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா

கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா

கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா

மடுத்துழிப் பாடா விடல்.       39

அடக்க முடையவன் மீளிமை யின்னா

துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா

அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா

அடக்க வடங்காதார் சொல்.       40 

இன்னா நாற்பது முற்றிற்று

கபிலர் இயற்றியது (கி பி 50-125) 

இன்னா நாற்பது முற்றிற்று

 இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று)

( இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களானும் இந்நூல் வழங்குதலுண்டு)


கடவுள் வாழ்த்து

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே

தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே

முந்துறப் பேணி முகநான் குடையானைச்

சென்றமர்ந் தேத்தல் இனிது.


நூல்

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே

நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே

முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1


உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்

மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்

நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்

தலையாகத் தான்இனிது நன்கு. 2


ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே

நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே

ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே

தேரிற்கோள் நட்புத் திசைக்கு. 3


யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே

ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே

கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே

மான முடையார் மதிப்பு. 4


கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்

செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்

எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்

பொல்லாங் குரையாமை நன்கு. 5


ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே

பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே

வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்

காப்படையக் கோடல் இனிது. 6


அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே

பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே

தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்

கொண்டடையா னாகல் இனிது. 7


ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே

தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்

கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே

ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை

பேதுறார் கேட்டல் இனிது 8


தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே

அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே

பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்

அன்புடைய ராதல் இனிது. 9


கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே

நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே

மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்

எனைமாண்புந் தான்இனிது நன்கு. 10


அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே

குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே

உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்

பெருமைபோற் பீடுடையது இல். 11


குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே

சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே

மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்

திருவுந்தீர் வின்றேல் இனிது. 12


மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே

தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே

ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை

மானிடவர்க் கெல்லாம் இனிது. 13


குழவி தளர்நடை காண்டல் இனிதே

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து

மனனஞ்சான் ஆகல் இனிது. 14


பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற

வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே

மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை

மதமுழக்கங் கேட்டல் இனிது. 15


சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே

மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே

எள்துணை யானும் இரவாது தான்ஈதல்

எத்துணையும் ஆற்ற இனிது. 16


நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்

ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே

பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்

மெய்த்துணையுஞ் சேரல் இனிது. 17


மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே

தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே

எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்

கண்டெழுதல் காலை இனிது. 18


நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே

பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே

முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது

தக்குழி ஈதல் இனிது. 19


சலவாரைச் சாரா விடுதல் இனிதே

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே

மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் இனிது. 20


பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே

அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே

மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்

திறந்தெரிந்து வாழ்தல் இனிது. 21


வருவா யறிந்து வழங்கல் இனிதே

ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே

பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்

திரிபின்றி வாழ்தல் இனிது. 22


காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே

ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே

பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்

சூதரைச் சோர்தல் இனிது. 23


வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே

ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே

இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்

செய்வது செய்தல் இனிது. 24


ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே

கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே

நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்

புல்லா விடுதல் இனிது. 25


நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே

உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே

எத்திறத் தானும் இயைவ கரவாத

பற்றினின் பாங்கினியது இல். 26


தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே

மானம் படவரின் வாழாமை முன்இனிதே

ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை

கோள்முறையாற் கோடல் இனிது. 27


ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே

ஆக்க மழியினும் அல்லவை கூறாத

தேர்ச்சியின் தேர்வினியது இல். 28


கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே

உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே

எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி

ஒளிபட வாழ்தல் இனிது. 29


நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே

மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே

அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத

நன்றியின் நன்கினியது இல். 30


அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே

கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே

சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து

அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. 31


சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே

பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே

தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்

பத்திமையிற் பாங்கினியது இல். 32


ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே

தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே

வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்

தானை தடுத்தல் இனிது. 33


எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே

சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே

புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை

கொள்ளர் விடுதல் இனிது. 34


ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே

முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே

பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்

வெற்வேறில்@ வேந்தர்க்கு இனிது. 35

@ வெற்றல் வேல்


அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே

செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே

கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று

வவ்வார் விடுதல் இனிது. 36


இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே

கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே

தடமென் பணைத்தோள் தளிரிய லாரை

விடமென் றுணர்தல் இனிது. 37


சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே

நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே

எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்

சுற்றா உடையான் விருந்து. 38


பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே

துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே

உற்றபே ராசை கருதி அறனொரூஉம்

ஒற்கம் இலாமை இனிது. 39


பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே

வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே

பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய

கற்றலிற் காழினியது இல். 40

இனியவை நாற்பது முற்றிற்று



lt;!- start disable copy paste --> </!->

No comments:

Post a Comment