Thursday, 26 May 2022

நீதி நூல்கள் 1. நாலடியார் ,அருங்கலச்செப்பு, பழமொழி400



வழங்கப்பட்டிரு "ஆலுமவேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி 'என்னும் பழமழியில் நாலும் என்பது நாலடியாரைக்குறிக்கிறது

 திருக்குறளுக்கு அடுத்தபடியாகப்பேசப்படும் நீதி நூல்நாலடியார்."பழகு தமிழ்ச்சொல்லருமை நாலிரண்டில்' என்னும் சொற்றொடரால் நாலடியாரின் சிறப்பு பெரிதும் விளங்கும். நாலடி வெண்பாக்களால்இயற்றப்பட்டிருப்பதால்"நாலடி' என்று அழக்கப்பட்டு, பி றகு"ஆர்' விகுதியும் இணைந்து "நாலடியார்' என வழங்கப்பட்டது. நானூறு வெண்பாக்களைக்கொ ண்டமை ந்ததனா ல் "நாலடி நானூறு' என்றும்க்கிறது."வேளாண் வேதம்' எனவும் குறிக்கப்பட்டிருக்கிறது.கடவுள் வாழ்த்துத் தவிர்த்து, 400 பா டல்களும், 40 அதிகாரங்களும், 12இயல்களும் உள்ளன. ஓர் அதிகாரத்துக்குப் பத்துப் பத்துப்பா டல்களாகநாற்பது அதிகாரங்களிலும் நானூறுபாடல்கள் இடம்பெற்றுள்ளன.திருக்குறளைப் போலவே அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலைப் பற்றியப் பாடல்கள் உள்ளன.செலவம் நிலையாமை ,இளமை நிலை யாமையாக்கை நிலையாமை, அறன் வலியுறுத்தல்,துறவு, பிறர்மனை நயவாமை ,ஈகை ,கல்வி, குடிப்பிறப்பு, மேன்மக்கள், நல்லினம் சேர்தல், நட்பாராய்தல், கூடா நட்பு, அறிவுடை மை , நன்றியில் செல்வம், ஈயாமை , அவையறிதல், பேதைமை ,கயமை , கற்புடை மகளிர் முதலிய40 அதி காரங்களைக் கொண்டு விளங்குகறது.நாலடியாரின் அருமைபெருமைகளைக்கற்றுணர்த்த.

 ஜி.ய.போப,அதனைஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகிலம் உணரச் செய்துள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது 

நாலடியார் பற்றிய ஒரு கர்ண பரம்பரைக்கதையை வீரமாமுனிவர் 1730-ஆம்ஆண்டு, செப்டம்பர் 13-இல் தாம் எழுதி வெ ளியிட்ட"செந்தமிழ் என்று அழை க்கப்படுகின்ற தமிழ் மொழியி ன் இலக்கணச்சிறப்பு' என்னும் ஆங்கில நூலில் குறிப்பி ட்டிருக்கிறார்.எண்ணாயிரம் தமிழ்ப்புலவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசவை க்கு வருகிறார்கள். அந்த அரசன்,கல்வியிற் சிறந்த - புலமையில் தேர்ச்சி மிக்கோரை ஆதரிக்குநற்குணம் படை த்தவன். அவன் இந்தப் புலவர்களை வரவேற்று, உபசரித்துஉணவு, உறை விடம் அளித்து, வே ண்டிய வசதிகள் செய்து கொடுக்கிறான்.அரசனுடை ய வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு அங்கு ஏற்கெ னவே இருந்த புலவர்களுக்கு,இவர்கள் மீது பொறாமை ஏற்படுகி றது. அவர்கள் இப்புலவர்கள் மீ து அரசனுக்கு வெறுப்பு ஏற்படும்படி கதைகளைக் கட்டிவிடுகின்றனர் அரசனும் அதை நம்புகின்ற நிலை ஏற்பட்டபோது, அரசனது மனம் நோகாமல்இருப்பதற்காகவும்,தங்களுடைய பாதுகாப்பின் பொருட்டும் அரசனிடம் சொல்லிக் கொள்ளாமல் இரவோடு இரவாக ஊரை விட்டுப்போய்விடுகின்றனர் அந்தப் புலவர்கள். போகும்பொழுது ஒவ்வொரு புலவரும் ஓலைச்சுருளில் ஒவ்வொரு செய்யுள் எழுதி ,அதைத் தலை யணைக்குக் கீழே வைத்துவி ட்டுப்போகின்றனர்.காலையில் இச்செய்தி அரசனுக்குத் தெரிய வரும்போது அவன் கடுங்கோபம் அடை கிறான். இருந்புலவர்களும் அரசன் கோபத்தை மேலும் தூண்டிவிட்டு, உற்சாகம் அடைகின்றனர்.அரசன் அவர்கள்எழுதய ஓலைச்சுவடிகளை ஒன்றாகக்கட்டிஆற்றில் எறிந்துவிட ஆணையிடுகின்றான். அவ்வாறு ஆற்றில் எறிப்பட்ட ஓலச்சுவடிகளில் நானூறு மட்டும்  நான்கடி இடைவெளியில் ஆற்றுநீரை எதிர்த்து மேலேறி வந்தன.இதைக் கண்ட மன்னன் வியப்படைந்து,அந்தப்பாடல்களைப்பாதுகாக்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் அதனைத்தொகுக்கிறான்.அதுவே "நாலடியார்' ஆயிற்றுஎன்று வீரமாமுனிவர் குறிப்பிடுகின்றார்.நாலடியாருக்கு அதிகாரம் வகுத்தவர்கள் பதுமனார்ஆவார். 

அதிகாரங்களை முப்பாலாய் வகத்துஉரைசெய்தவர் தருமர் ஆவார். நாலடியார் வாயி லாக சங்கத் தமிழர்களின் வாழ்க்கைநெறி முறைகளையும் சமயப் பற்றுகளையும் நன்கு அறி ய முடிகிறது. அவற்றுள் மேன்மக்கள் பற்றி வரும் அதிகாரத்தின் 152-ஆவது பாடலைக்காண்போம்.இசையும் எனினும் இசையா தெனினும்வசைதீ ர எண்ணுவர் சான்றோர் - விசையி ன்நரிமா உளங்கிழி த்த அம்பினி ன் தீதோஅரி மாப்பிழைபெய்த கோல்?விரைவோடு நாயின் மார்பைப்பிளந்து சென்ற அம்பை விடசிங்கத்தை நோக்கி விடப்பட்ட குறிதவறிய அம்பு உயர்ந்ததா கும். அதனா ல் முடிந்தா லும் முடியாவி ட்டா லும் சா ன்றோர் பழியற்றசெயல்களையே எண்ணிச்செய்வர் என்பது பா டலின் பொருள். இதுபோன்ற பயனுள்ள அறநெறிகள் பல இந்நூலில் உள்ளன.திருக்குறளைப் போலவே நாலடியார் நல்ல அறநெறிகளை எடுத்தியம்புகிறது. அவற்றை சிறியோர்

 TRANSLATIONS IN ENGLISH BY  Rev. Dr G U POPE  AND  Mr F W ELLIS  FOREWORD BY  Dr M VARADARAJANAR, M A, M O L, ph D, Of the great ancient works of Tamilnad known for their moral profundity and weighty comments on life and thought, Tirukkural and Naladiyar stand foremost. The proverbial saying(the couplets of Tirukkural and the quatrains of 



Naladiyar are the best of ethical sayings) glorifies their value in a single sentence. Great ethical and philosophical utterances have been rendered in poetic form in Naladiyar. The poetic value of the stanzas cannot be underestimated although it is true that their moral value pre-eminently appeals to the readers. W. H. Hudson observes: " there is no reason why poetry should not be the outcome of philosophy and the vehicle of philosophic truth without sacrificing anything of its essential poetic qualities and graces." Naladiyat' belongs to that category of poetry which celebrates philosophic truth without sacrificing its essential poetic charm. The writers of these stanzas were poets who also wished to be great teachers and moralists.

The authorship of this work is ascribed to a group of Jain ascetics who lived in the third or fourth century A.D. Its compilation has a tale to tell. In a critical situation of famine in the Pandiya Country, a group of eight thousand Jain ascetics •left their place eoch leaving  stanza behind him. Of them four hundred ore said  vill  to have been selected and compiled. The stanzas themselves testify to the fact that this is not the work of a single author, but of many belonging to the same school and age. That is why we find repetition of ideas as in stanzas 207 and 210 and similarity of expresBion as in stanzas 230 and 238. That this work is later than Tirukkural is evident from the classification and arrangement of chapters on the model of the latter, the whole work consisting of three parts bnd each chapter containing ten stanzas. But this classification is not so apt and so complete as in Tirukkural, as may be seen from the loose connection of the following stanzas to the chapters in which they are plbced :-

                Stanza No.                             Chapter No.

         33, 34, 35, 39, 40                                     4

             58                                                        6

         78 to 80                                                   8

             102                                                     11

111 to 120           12 124 to 126, 12813

         181 to 183                                             19

The words and ideas expressed in stanza No.,305 are not different from those of the Tirukkural couplets Nos. 1061 and 1069. This is a Jain work laying great stress on renunciaEon. The ascetic note is • struck in almost all the chapters except those on High birth (15), The Support

Xlil'Once on a time, 8000 {Jain ascetics, driven by famine* came to a Pandiyan king and were supported by him. When the famine was over they prepared to return to their own country, though the king wished to retain the learned strangers who added lustre to his court. At last the poets were driven to depart secretly by night. In the morning it was found that each bard had left on his seat a quatrain. These were examined and found to differ widely from one another. The king then ordered them all to be thrown into the river Vaigai, when it was found that the palm-leaf scrolle containing these 400 quatrains ascended the river against the current, ane came to the bank. To these the king gave the name of Naladiyar (the quatrainists).' Some other verses reached the banks at various spots, and are found in two collections, called 'Old sayings' (ugGorrO) and 'The Essence of the way of virtue' (cpQbD*ærrrzb). These atter works have never obtained the popularity enjoyed by the Naladiya,r; and I should regard them as mainly imitations due to later period, though some of the verses are certainly more or less ancient.

These traditions point to a collection of popular verses made after the impalement of the Samanar (or Amanar Jains, lit, 'naked ones'), perhaps in the time of Sundan Pandiyan (or Run-Pandiyan), who probably lived in the twelfth century A.D.

These verses, mainly bit not, I think, exclusively of Jain origin, were doubtless expurgated by the &ivasr under whose chief guardianship Tamil literature has since remained.

They were re-edited, interpreted, arranged, and forced into a kind of parallelism to the li•urral by Pothumanær ('a lotus'), of whom nothing is really known. I have printed an elegant invocation ascribed to him. No other editor has done much for the quatrains.

The fact that to them exclusively the title of Nata,di (or quatrain) was given seems to render it probable that they constitute some of the earliest •specimens of this elegant metre, the Alcaic of Tamil.

As might be expected from their history, no consistent and developed system of philosophy, religion, or morals can be deduced from them; and it may be said with truth that these utterances have too little sequence and connexion to admit of any scientific criticism. Yet it is a kind of merit to put a happy point upon commonplace ; and these epigrams, drawn sometimes from Sanskrit sources and oftener forming the ground of ornate Sanskrit verses, written in imitation or rivalry, have become household words through all South India.

I am unwilling to enter here on any discussion bf the date of this and other Tamil classics, since there are scarcely any ascertained facts or ancient inscriptions from which to reason. The discussion of these matters •requires aptitude, leisure, cand opportunity for archaeologicil research (and these I do not possess), in addition to a critical acquaintance with Tamil literature. The want of this last eBBential hag rendered many otherwise profound researches almost valueless. A very careful consideration of many masterpieces of Tamil literature 'leads me to think that between A, D. 800 and 1200 the greatest of these works were composed. Internal evidence, as far as I see, is all we have to rely on.

Hiouen-Thsang, the Buddhist pilgrim who visited the continent of India in 640 A. D. , says that in Mala7cuta the people were not much addicted to the cultivation of literature, and only valued the pursuit of wealth; and mentions Joins as the most prominent sect. Now, this Malakuta, must be Ma,tokotta, Malainadu, Malaya, Malayalam, and seems to have included the whole Southern part of the Madras Presidency (Hultzgch, South-Indian Inscriptions, vol, ii part i, p. 2 note) : the Pandya and Cera Kingdoms.

The Jains were great students and copyists of books (Burnell, S. I. Palaeography, p. 88). We may feel quite sure that the seventh century A. n , at the latest, sow the beginning of Tamil literature under Jain auspices. Perhaps the Jains fostered the vernaculars partly out of opposition to the Brahmans. Reformers and missionaries, who generally address themselves to the intelligent middle classes, have often been the most assiduous students and promoters of the vulgar tongues. Quotrain 243 of the Naladi *shows the feeling of hostility that existed between North and South : between

xvi Hindus and Joins. The great antiquity of Tamil, which is the one worthy rival of Sonskrit, is abundantly plain. The ancient grammatical works existing in Tamil, and its wonderful metrical system, prove its assiduous cultivation for long ages An elaborate, scientific series of metres. such as Tamil glories in, adapted to every style and theme of composition, is the growth of centuries. Classical Tamil bears every mark of slow and natural evolution; but the subject is complicated by the number of works in circulation falsely attributed to old writers. The many really ridiculous forgeries of this kind bring digcredit on all Tamil literature. Tamil scholars should banish, among other things, such spurious works as many of those attributed to Agutya, Avvai, Pattanattu-pillai, and others.

There is no mention of God in the Naladi (save in the quite modern invocation) and no trace of religion. In this respect the quatrains differ from the Kurral. There are indeed a few poetical references to certain deities, and allusions to popular beliefs and rites, but the bards evidently were not orthodox Hindus.

The misery of embodiment (1.9") in successive and infinitely varied forms, and the bliss of release ((9SØ) from all of these, are often expressed and illustrated with every kind of figure. It is auumed that always, to all, conscious existence on earth, welt as in any heavens or hells, 1B an absolute evil. Here, of coumø, we find ourslves in antagonism.

Yet pervading these verses there seems to me to be a strong sense of moral obligation, an earnest aspiration after righteousness, a fervent and unselfish charity, and generally a loftiness of aim that are very impressive. I have felt sometimes as if there must be a blessing in store for a people that delight so utterly in compositions thus remarkably expressive of a hunger and thirst after righteousness. They are the foremost among the peoples of India, and the Kurral and Naladi have helped to make them 80.

It is in vain to discuss elaborately the origin and possible sources of the work. The majority of the verses were almost certainly sung by Jain ascetics, yet there are a few that seem to be from the Mahabharata, and undoubtedly many of the quartrains are fragments of the old ethical teaching which goes under the name of Niti-Castra. The history of south India permits us to expect to trace not only Buddhist, or Jain, but also Greek, Chiristian, and even Muhammadan influences in the early Tamil classics, as much almost  those inspired by Sanskrit writings. When we examine each quatrain as an artistic whole—-a kind of cameo-—we find that there are several distinct and clearly marked types. Some of these majy be conveniently arranged in classes.
























































































 
அருங்கலச்செப்பு    
 

அருகன் வாழ்த்து  

அணிமதிக் குடை அருகனைத் தொழ

அருவினைப் பயன் அகலுமே

அழகானவனும் முழு நிலவைப் போன்ற வடிவும் வண்ணமும் பெற்ற சந்திராதித்யம், சகல பாசனம், நித்ய வினோதம் என்ற முக்குடை உடையவனும் ஆகிய அருகப் பெருமானை வணங்க நீங்குவதற்க்கு அரிதான வினைகள் அகலும்.    

அருங்கல மும்மை

1 முற்ற உணர்ந்தானை ஏத்தி, மொழிகுவன்

குற்றம்ஒன்று இல்லா அறம்.       

அனைத்துப் பொருளையும் ஒருங்கே அறியும் அறிவனை வாழ்த்தி, அவர் அருளிய குற்ற மற்ற அறத்தைக் கூறுவன்.         

2 நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் இம்மூன்றும்

தொக்க அறச்சொல் பொருள்.

நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் மூன்றும் கூடியதே அறம் என்று சொல்லப்படும் பொருள்.

நற்காட்சி

3 மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்

எப்பொருளும் கண்டுணர்ந்தார்.

எல்லாப் பொருள்களின் இயல்புணர்ந்த அருகபெருமான் அருளிய உண்மைப் பொருள்களை தெளிதல் நற்காட்சி என்பர்.

நிலையான மெய்ப்பொருள்கள்

4 தலைமகனும், நூலும், முனியும்இம் மூன்றும்

நிலைமைய ஆகும் பொருள்

இறைவன், அவன் அருளிய ஆகமம், அதன்படி ஒழுகும் முனிவர் இம்மூன்றும் நிலைபெற்ற உறுதிப் பொருளாம்.

இறைவன்

இறைவன் இயல்பு

5 குற்றம் ஒன்றுஇன்றி, குறைஇன்று உணர்ந்துஅறம்

பற்ற உரைத்தான் இறை

குற்றம் குறை ஏதுமின்றி, அனைத்தின் இயல்பையும் உண்ர்ந்து, இல்லறத் துறவறங்களை எடுத்து விளக்கியவன் இறைவன்.

இறைவனிடம் இருக்கத் தகாதவை

6 பசிவேர்ப்பு நீர்வேட்கை பற்றுஆர்வம் செற்றம்

கசிவினோடு இல்லான் இறை

பசி, வியர்வை, தாகம், பற்று, கோபம், கலக்கம் முதலான பதினெட்டுக் குற்றங்கள் இல்லாது ஒழித்தவன் இறைவன்

இறைவனிடம் இருக்கத் தக்கவை

7 கடைஇல்அறிவு, இன்பம், வீரியம், காட்சி

உடையான் உலகுக்கு இறை

வரம்பு இல்லா அறிவு, இன்பம், வீரியம், காட்சி இந்நான்கும் உடையவன் உயிர்களுக்கு இறைவன்

 இறைவனிடம் அறத்தினை உரைத்தல்

8 தெறித்த பறையின் இராகாதி இன்றி

உரைத்தான் இறைவன் அறம்.

வேறுபாடு இன்றி முழங்கும் முரசு போல விருப்பு வெறுப்பு இன்றி அறங்களை உரைத்தவன் இறைவன்   

நூல்

9 என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு

நின்றது நூல்என்று உணர்.

 உலகில் எப்போதும் நிலைத்துள்ள அறமானது (கலத்தால் மறைக்கப்பட்டு) இறைவனால் ஒலி வடிவில் வெளிப்பட்டு, பிறகு எழுத்தில் நிலைபெற நின்றது நூல் என உணர்க.

 10 மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரண்ஆகித்

துக்கம் கெடுப்பது நூல்.

பொருள்களின் உண்மை இயல்பை உணரச் செய்து, உயிர்களுக்குப் பாதுகாப்பாகி, பிறவித் துயரங்களை கெடுக்கவல்லது நூல்.

முனி

11 இந்தியத்தை வென்றான் தொடர்பட்டோ(டு) அரம்பம்

முந்து துரந்தான் முனி.

ஐம்புலன்களின் ஆற்றலை அடக்கி, அகப்புறப் பற்றுகளை நீக்கி, தொழில் அனைத்தும் முற்றுமாக தூறந்தவர் முனிவர் ஆவர்.

12 தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும்

உய்த்தல் இருடிகள் மாண்பு.       

எழுவகைத் தத்துவங்களை அறிந்து, தள்ளத்தக்கன் தள்ளி, கொள்ளத்தக்கன கொண்டு, தியானங்களில் பொருந்தல் முனிகளது பெருமையாம்.

13 எட்டுவகை உறுப்பிற்று ஆகி இயன்றது

சுட்டிய நற்காட்சி தான்.

ஆகமங்கள் போற்றிக்கூறும் நற்காட்சியானது எட்டுவகை உறுப்புகளோடு அமைந்தது ஆகும.

நற்காட்சி வேண்டுபவை

14 ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை

மெய்பெற இன்னவை நான்கு.

(இறைவனது மெய்ந்நெறியில்) ஐயமின்மை, (உடலாதி பொருள்களில்) ஆசையின்மை, (துறவோரிடம்)அறுவறுப்பு இன்மை, (பிற சமயநெறிளை நம்பும்) மயக்கமின்மை, இவை நான்கு உறுப்புகளாகும்.

15 அறப்பழி நீக்கல் அழிந்தாரைத் தாங்கல்

அறத்துக்கு அளவளா மூன்று.

 (அறவோரின்) குறைகளை நீக்கல் (விரதங்களில் வழுவினாரை) மீண்டும் அவ்வழி நிறுத்தல், (அறவோர்களிடம்)அன்பு செலுத்துதல் என இவை மூன்று.

16 அறத்தை விளக்கலோடு எட்டாகும் என்ப

திறம்பட உள்ள உறுப்பு.

அறத்தின் உண்மையை அனைவருக்கும் விளங்கக் கூறுதல் என்னும் உறுப்புடன் நற்காட்சியின் உறுதி காட்டும் உருப்புகள் எட்டாகும்.

ஐயம் இன்மை

17 மெய்ந்நெறிக்கண் உள்ளம் துளக்கின்மை காட்சிக்கண்

ஐயம் இலாத உறுப்பு.

இறைவன் அருளிய உண்மை நெறியில் உறுதியுடன் இருத்தல் நற்காட்சியின் ஐயம் இல்லாத உறுப்பாகும்.

 அவா இன்மை

18 தடுமாற்ற இன்பக்கு இவறாமை ஆகும்

வடுமாற்(று) அவாஇன்மை நற்கு.

நிலையற்ற புலன் இன்பங்களில் பற்று வைக்காமைதான் பிறவியை ஒழிக்கும் நல்ல அவாமின்மை உறுப்பாகும்

உவர்ப்பின்மை

19 பழிப்பில் அருங்கலம் பெய்துடம்பு என்று

இழிப்பின்மை மூன்றாம் உறுப்பு

 (குறையில்லாத மும்மணி பெய்த உடம்பு என்று துறவியரது மாசுண்ட உடலை இழிவாகக் கருதாமை உவர்ப்பு இன்மை உறுப்பகும்.

 மயக்கமின்மை

20 பாவ நெறியாரைச் சேர்ந்த மதிப்பின்மை

மோவம் இலாத உறுப்பு.

 தீவினைக்கு ஏதுவான மாறுபட்ட நெறியினைச் சேராமையும், அந்நெறியரைப் போற்றாமையும், 'மயக்கம் இன்மை' உறுப்பாகும்.




அறப்பழி நீக்கல்

21 அறத்துக்கு அலர்களைதல் எவ்வகை யானும்

திறத்தின் உவ கூவனம்.

 அறத்துள்ளாருக்கு நேரும் தவறுகளை எவ்வாறெனும் வெளிப்படுத்தாது காத்து அவருக்கு வரும் பழியை நீக்கல் அறப்பழி நீக்கல் உறுப்பாகும்.

அழிந்தாரைத் தாங்கல்

22 அறத்தின் தளர்ந்தாரை ஆற்றின் நிறுத்தல்

சிறப்புடை ஆறாம் உறுப்பு

அறவழியினின்றும் எப்படியோ தவறினவைக்ளை மீண்டும் நன்னெறிப்படுத்துதல் மேன்மைமிக்க அழிந்தாரைத்தாங்கல் உறுப்பு.

 அறத்திற்கு அளவளாவல்

23.ஏற்ற வகையில் அறத்துளார்க் கண்டுவத்தல்

சாற்றிய வச்சளத்தின் மாண்பு.

 அறவழியில் நிற்போருடன் தக்க முறையில் அன்புடன் உறவாடுதல் சொல்லிய அறத்துக்கு அளவளாவலின் பெருமையாம்.

அறத்தை விளக்கல்

24 அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்

அறத்தை விளக்கல் நன்கு.

 அனைவருக்கும் அறத்தின் பெருமை மிக்கச் சிற்ப்பினை நன்கு விளங்கவைத்தல் அறத்தை விளக்கல் உறுப்பாம்.

 எடுத்துக்காட்டு கதைகள்

25 அஞ்சன சோரன, அனந்தமதி, உலகில்

வஞ்சம் இல் ஒத்தா யணன்.

முதல் மூன்று உறுப்புகளுக்கு அஞ்சன சோரன், அனந்தமதி, ஒத்தாயணன் வரலாறுகள் விளக்கம் தரும்.      

26 இரேவதை யரும் சிநேந்திர பத்தரும்

தோவகையின் பாரிசரும் சொல்.

இரேவதை, சிநேந்திர பத்தர், பாரிசர் இவர்தம் வரலாறு மயக்கமின்மை. அறப்பழி நீக்கல் அழிந்தாரைத்தாங்கல் உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டாம்.

27 வச்சிர மாமுனியும் வளர்பெரு விண்ணுவும்

நிச்சயம் எட்டும் உரை.

வச்சிர முனிவர், விக்ஷ்ணுமுனிவர் வரலாறுகள் முறையே அறத்திற்கு அளாவளாவல், அறத்தை விளக்கல் இரண்டுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆகும்.

28 உறுப்பில் குறையின் பயனின்று காட்சி

மறுப்பாட்டின் மந்திரமே போன்று.

முற்கூறிய எண்வகை உறுப்புகளில் ஒன்று குறைந்தலும் மாறுபட்ட மந்திரம் போலப் பயனற்றதாகும்.

நற்காட்சிக்கு வேண்டாதவை

29 மூவகை மூடமும் எட்டு மயங்களும்

தோவகைஇல் காச்சியார்க்கு இல்.

குற்றமற்ற நற்காட்சியாளரிடம் மூவகை மூடங்கள் எண்வகை மதங்கள் இருப்பதில்லை.

மூடம் உலக மூடம்

30 வரைப்பாய்தல் தீப்புகுதல் ஆறுஆடல் இன்ன

உரைப்பின் உலக மயக்கு

மலையிலிருந்து வீழ்ந்தும், நெறுப்பில் பாய்ந்தும் நீர் நிலைகள்¢ள் மூழ்கியும் இறத்தல் புண்ணியம் என் நம்புதல் உலக மூடம் ஆகும்

தேவ மூடம்

31 வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்

பாழ்பட்ட தெய்வ மயக்கு.

 தெய்வங்கள் நன்கு வாழவைக்கும் என்று அறியாமை கொண்டு வணங்குதல் மிக மோசமான தெய்வ மூடம்.

32 மயக்கு ஆர்வம் செற்றம் உடையாரை எத்தல்

துயக்குடைத் தெய்வ மயக்கு.

 (பிறவிக்குக் காரணமான) மோகம், ஆசை, கோபம் முதலான பண்புகளை உடையாரைத் தெய்வங்களாகப் போற்றுதல் நம்பிக்கைத் தளர்ந்தாரது தெய்வ மூலமாகும்.

பாசண்டி மூடம்

33 மாசுண்ட மார்க்கத்து நன்றாரைப் பூசித்தல்

பாசண்டி மூடம் எனல்.

 பிறவியில் அழுத்தும் நெறியில் நின்ற மாற்றுக் காட்சியாரைப் போற்றி வணங்குதல் பாசண்டி (வேட)மூடம் எனப்படும்.

 மதம்   எண் வகை மதங்கள்

34 பிறப்பு குலம்வலி செல்வம் வனப்பு

சிறப்புதவம் உணர்வோடு எட்டு.

குடி, குலம், வலிமை, செல்வம், எழில், பெருமை, தவம், அறிவு இவை எட்டாகும் மதம்.

----செருக்கால் வீழ்ச்சியே

35 இவற்றால் பெரியெம்மாம் என்றே எழுந்தே

இகழ்க்கில் இறக்கும் அறம்.

இவ்வெட்டுச் செருக்குகளால்'எமக்கு ஒப்பு இல்லை நாமேமேலானவர்' என்று இறுமந்து பிறரை இகழின் நற்காட்சி நாசம் அடையும்.

நற்காட்சியின் சிறப்பு

36 அறமுண்டேல் யாவறும் எள்ளப் படாஅர்

பிறகுணத்தால் என்ன பயன்?

நற்காட்சி இருக்குமானால் அனைவராலும் போற்றப் படுவர். இதை விடுத்து பிற குணங்களால் என்ன பயன்? ஏதுமில்லை.

37 பறையன் மகன்எனினும் காட்சி உடையான்

இறைவன் என உணரற் பாற்று.

இழி குலத்தில் தோன்றிய ஒருவனும் நற்காசியுடையனாயின் இறைவனாவான் என உணர்தல் வேண்டும்.

38 தேவனும் நாயாகும் தீக்காட்சி யால் நாயும்

தேவனாம் நற்காட்சி யால்

நற்காட்சி இல்லாதவன் தேவனாக இருப்பினும் நாயாகப் பிறப்பான்; நற்காட்சி உண்டானால் நாயும் தேவ கதியைச் சேரும்.

அவிநயம்

39 அவ்விநயம் ஆறும் அகன்றது நற்காட்சி

செவ்விதின் காப்பர் இடை.

நற்காட்சியை நன்கு போற்றுபவரிடம் அவ்விநயம் ஆறும் அகன்று விடும்.

40 நல்லறத்தின் தீர்ந்த வணக்கத்தை நல்லோர்கள்

சொல்வர் அவ்விநயம் என்று.

இறைவன் ஆகமம் எவரை வணங்குதல் கூடாது என ஒதுக்கியதோ அவரை வணங்குதல் அவ்விநயம் என்பர் நல்லோர்.



வணங்கத் தகாதார்

41 மிச்சை இலிங்கியர்நூல் தெய்வம் அவாவினோடு

அச்சம் உலகத்தோடு ஆறு.

பொய்க்காட்சியுடைய தவத்தர், தெய்வங்களை வணங்குதலும், அவாவினாலும், அச்சத்தலும், உலக வழக்காலும் வணங்குதலும் ஆறு அவ்விநயம் ஆகும்.

அவிநய நீக்கம்

42 இவ்வாறும் நீக்கி வணங்கார் அவிநயம்

எவ்வாறும் நீங்கல் அரிது.

இவ்வாறு குற்றம்பட்ட வணக்கத்தை மனத்தால் களைந்து நீக்காதாரிடம் அவிநயம் வேறு எவ்வாற்றானும் நீங்குதல் அருமையாகும்.

நற்காட்சியின் இல்லார் அழிவு

43 காட்சி விசேட உணர்வும் ஒழுக்கமும்

மாட்சி அதனில் பெறும்.

நற்காட்சியினால்தான் ஞானமும், ஒழுக்கமும் நல்ஞானமும், நல்லொழுக்கமுமாகப் பெருமை பெறும்.

44 நற்காட்சி இல்லார் உணர்வும் ஒழுக்கமும்

ஒற்கா ஒசிந்து கெடும்

நற்காட்சி இல்லாரது ஞான ஒழுக்க பெருமைகள் வறிதாகி முறிந்து கெடும

45 அச்சுஇலேல் பண்டியும் இல்லை சுவர்இலேல்

சித்திரம் இல்லதே போன்று.

அச்சு இல்லாமல் வண்டியும், சுவர் இல்லாமல் சித்திரமும் இல்லாமல் மற்றவை இல்லை.

46 காட்சியோடு ஒப்பதுயம் கானோம் வையத்து

மாட்சி உடையது உயிர்க்கு.

இவ்வுலக உயிர்களுக்கு நற்காட்சிக்கு ஒப்பாக பெருமை உடையது வேறு ஒன்றுமில்லை.

நற்காட்சி உடையோர் பெருமை

47 விரதம் இலர்எனினும் காட்சி உடையார்

நரகம் புகுதல் இலர்.

நற்காட்சியைப் பெற்று விரதம் கைக்கொள்ளாவிடினும் அவர் நரகம் புகார்.

48 கலங்கல்இல் காட்சி உடையார் உலகில்

விலங்காய்ப் பிறத்தல் இலர்.

கலங்கமற்ற நற்காட்சியாளர் விலங்காகவும் பிறவார்.

பெண்பிறப்பும் அலிப்பிறப்பும்

49 பெண்டிர் நபுஞ்சகர் ஆகார் பிழைப்பின்றிக்

கொண்ட நற்காட்சி யாவர்

குறை நீங்கிய நற்காட்சியுடையவர் பெண்ணாகவும் அலியாகவும் பிறவார்.

இழிகுலப் பிறப்பு

50 இழிகுலத்து என்றும் பிறவார் இறைவன்

பழியறு காட்சி யவர்

இறைவன் அருளிய பழிப்பில்லாத நற்காட்சியுடையவர் எக்காலத்தும் தாழ்ந்த குலத்தில் தோன்றுவதில்லை.

ஊனமுற்றுப் பிறத்தல்

51 உறுப்புஇல் பிறர்பழிப்ப என்றும் பிறவார்

மறுப்பாடுஇல் காட்சி யவர்

குற்றமில்லாத நற்காட்சியுடையவர் பிறர் எள்ளுமாறு ஊனமுள்ளவராக எப்போதும் பிறவார்.

வறுமை வாட்டுவதில்லை

52 குறுவாழ்க்கை நோயோடு நல்குரவு கூடப்

பெறுவாழ்க்கை யுள்பிறத்தல் இல்.

நற்காட்சியுடையார் அற்ப ஆயுள், நோய், வறுமை முதலியவற்றைப் பெறுதல் இலர்.

சிறப்புப் பிறப்புகள்

53 அரசர் இளவரசர் செட்டியரும் ஆவர்

புரைதீர்ந்த காட்சி யவர்.

குறையற்ற நற்காட்சியுடையார் அரசர், இளவரசர், பெருவணிகர் என இப்படித்தான் பிறப்பர்.

தேவர் பிறப்பு

54 மூவகைக் கீழ்த்தேவர் ஆகார் முகடுயர்வர்

தோவகைஇல் காட்சி யவர்.

குற்றமற்ற நற்காட்சியர் பவணர், வியந்தரர் சோதிடர் தேவராகப் பிறவாது மேலான கற்பத்துத் தேவர்களாவே பிறப்பர்.

உயர் தேவராகப் பிறத்தல்

55. விச்சா தரரும் படேவரும் ஆவர்

பொச்சாப்புஇல் காட்சி யவர்

வித்தியாதர ராகவும், பலதேவராகவும் பிறப்பர், மறதி அற்ற நற்காட்சியர்.

அருக பதவி

56 முச்சக் கரத்தோடு சித்தியும் எய்துவர்

நச்சறு காட்சி யவர்

ஆசையை அறுக்கும் காட்சியுடையவர் இந்நிரபதவி, மன்னர்பதவி, அருகபதவியோடு வீடுபேறும் பெறுவர்.

நல்ஞானம்

57 பொருள்நின்ற பெற்றியைப் பொய்யின்று உணர்தல்

மருள்அறு நல்ஞா மாண்பு.

 உயிர் முதலாகிய ஒன்பது பொருள்களின் உண்மை இயல்பை உள்ளவாறு உணர்தல் மயக்கம் அறுக்கும் நல் ஞானத்தின் பெருமையாம்.

ஆகமங்கள்

58 சரிதம் புராணம் அருத்தக் கியானம்

அரிதின் உரைப்பது நூல்

(சிறப்புடை ஒருவர் வரலாறு கூறும்) சரிதமும், (மகாபுருடர்களின் வரலாறு வரலாறு) புராணமும், (நான்கு புருஷார்த்தங்களைக் கூறும் ) அருத்தக் கியானமும் ' பிரதமாநுயோகம்' நூலாம்.

59 உலகின் கிடக்கையும் ஊழி நிலையும்

மலைவுஇன்று உரைப்பது நூல்

உலக அமைப்பையும், கால நிலைகளையும் முரண்பாடு இல்லாமல் உரைப்பது கரணானுயோக நூலாம்

60 மூவகைக் கீழ்த்தேவர் ஆகார் முகடுயர்வர்

தோவகைஇல் காட்சி யவர்.

குற்றமற்ற நற்காட்சியர் பவணர், வியந்தரர் சோதிடர் தேவராகப் பிறவாது மேலான கற்பத்துத் தேவர்களாவே பிறப்பர்.

61 கட்டோடு வீடும் உயிரும் பிறபொருளும்

முட்டின்றிச் சொல்லுவது நூல்.

வினைபந்திக்கும் நிலையும், வீடுபேறு நிலையும், ஸசீவ, அசீவ பொருள்கள் நிலையும் முழுதாக உரைப்பது திரவியானுயோக நூலாம்.

நல்லொழுக்கம்

62 காட்சி உடையார் வினைவரும் வாயிலின்

மீட்சியா நல்லொழுக்கம் நன்று

 நற்காட்சியாளரின் உயிரியல் வினைகள் வந்து சேராவண்ணம் அவ்வழியை அடைத்து அவரை நன்கு மீளச்செய்வது நல்லொழுக்கம் ஆகும்.

மகாவிரதம்

63 குறைந்தூஉம் முற்ற நிறைந்ததூஉம் ஆக

அறைந்தார் ஒழுக்கம் இரண்டு.

அந்த நல்லொழுக்கம் அணுவிரதம் மகாவிரதம் என இரண்டு என்று சொல்லுவர்

64 நிறைந்தது இருடிகட்கு ஆகும்; மனையார்க்கு

ஒழிந்தது; மூன்று வகைத்து.

மகாவிரதம் முற்றும் துறந்த முனிவர்களுக்கும், அணுவிரதம் இல்வாழ்வார்க்கும் உரியதாம்; அணுவிரதம் மூவகைப்படும்.

இல்லறத்தார் விரதம்

65 அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்

உணர்நான்கு சிக்கா வதம்.

ஐந்து பகுதிபட்ட அணுவதமும், மூன்று பகுதிபட்ட குணவதமும், நான்கு பகுதிபட்ட சிக்கா வதமும் இல்லறத்தார் விரதம் என அறிக.

அணுவிரதம்

66 பெரிய கொலைபொய் களவொடு காமம்பொருளை வரைதலோடு ஐந்து.

இயங்குயிர்களைக் கொல்லாமை, பொய் கூறாமை, திருடாமை, பிறர்மனை விரும்பாமை, மிகுபொருள்விரும்பாமை என அணுவிரதம் ஐந்தாகும்.

கொல்லாமை

67 இயங்குயிர்கொல்லாமை, ஏவாமை ஆகும்

பெருங்கொலையின் மீட்சி எனல்

 இயங்குயிரைத் தான் கொல்லாமலும் கொல்லுவித்தல் செய்யாமலும் இருத்தல் இயங்குயிர் கொல்லாமை அணுவதம் ஆகும்.

அதிசாரம் ஐந்து

68 அறுத்தல் அலைத்தல் அடைத்தலோடு ஆர்த்தல்

இறப்பப் பொறைஇறப்புஒர் ஐந்து

உறுப்பைக் குறைத்தலும், அடித்து வருத்துதலும், நெருங்க அடைத்து வைத்தலும், கயிறு முதலானவற்றால் கட்டிப்போடுதலும், மிகுபளு எற்றலூமாகிய ஐந்தும் அதிசாரமாம்.

 பொய்யாமை

69. பாவம் பொருந்துவன சொல்லாமை ஏவாமை

ஆகும் இரண்டாம் வதம்.

பாவத்திற்குக் காரணமனவற்றைப் பேசாது இருத்தலும், பிறரைப் பேச ஏவாது இருத்தலும் பொய் கூறாமை எனும் இரண்டாவது வதமாகும்.

70 குறளை மறைவிரி, இல்லடை வௌவல்

புறவுரை பொய்ஓலை கேடு

கோள் சொல்லலும், இரகசியங்களைக் கூறலும், ஒப்படைத்த பொருளை இல்லை என்றலும், உண்மைக்கு மாறாக உரைத்தலும், பொய்க்கடிதம் எழுதுதலும் பொய்யாமைக்குக் கேடாம்.

அணுவிரதம் களவாடாமை

71 கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும்

கொடாதது கொள்ளா வதம்.

உரியார் தராமல் பிறர் பொருளை எடுத்தலும், பிறர் பொருளை எடுத்தலும், பிறர் எடுத்தலும், பிறர் எடுத்துவர ஏவாமல் இருத்துலும் திருடாமை வதம் ஆகும்.

72 குறைவு, நிறைகோடல், கொள்ளைக் கவர்தல்

மறைய விராதல் இறப்பு.

 குறைத்துக் கொடுத்தலும், கூடுதலாக எடுத்தலும், கொள்ளை அடித்தலும், கலப்படம் செய்தலும் கொடாது, கொள்ளாமை வத்திற்கு அதிசாரம் ஆகும்.

73. கள்ளரொடு கூடல் கள்ளர் கொணர்பொருளை

உள்ளினர் கோடலோடு ஐந்து

திருடர்களுடன் தொடர்பு கொள்ளுதலும், அவர் கொடுக்கும் பொருளை மலிவாகப் பெறுதலோடும் திருடாமையின் அதிசாரம் ஐந்தாம்.

காமமின்மை

74. விதித்த வழியின்றிக் காமம் நுகர்தல்

மதிப்பின்மை நான்காம் வதம்.

தனக்குரியாளைத் தவிர்த்து பிற பெண்டிரைக் கூடுதலை மனதாலும் எண்ணாமை'பிறன் மனைந்யவாமை' என்னும் நான்கும் வதமாம்.

75 அனங்க விளையாட்டு வேட்கை மிகுதி

மனங்கொள் விலார்இணை கேடு

முறையற்ற காம விளையாட்டும், மிக்க காம உணர்ச்சியும், விருப்பம் இல்லா வேசையர் உறயும் இதன் அதிசாரங்ளாம்

சோரம் போதல்

76 பிறர்மனை கோடல், பிறர்க்குச் செல்வாளைத்

திறவதில் கோடலோடு ஐந்து.

பிறர் மனைவியைச் சேரல், பிறர்க்கு உறுதி செய்தவளை வலிந்து கொள்ளலோடு இதன்

அதிசாரங்கள் ஐந்தாம்.

பொருள் வரைதல்

77. பொருள் வரைந்து ஆசைசுருக்கி ஏவாமை

இருள்தீர்ந்தர்க்கு ஐந்தாம் வதம்.

 தேவைப்பட்ட பொருளையே வைதிருத்தலும், பொருளாசையை அடக்குதலும், இறர்வழ்¢ பொருலைப் பெருக்காமையும் ஐந்தாவது அணுவதமாம்.

78.  இயக்கமோடு ஈட்டம் பெருக்கலும் லோபம்

வியப்புமிகைக் கோடலோடு ஐந்து

விலங்குகள் மீது நெடுந்தூரப் பயணமும் நெடுநாள் தானியங்களைச் சேமித்து வைத்தலும், லோபமும், பிறர் ஆக்கம் கண்டு பொறாமையும், ஆற்றல் மீறிய செயலில இரங்குதலும் இதன் ஐந்து அதிசரங்களாம்.

அணுவிரதச் சிறப்பு

79. ஐஐந்து இறப்புஇகந்த ஐந்து வதங்கலும்

செய்யும் சுவர்க்கச் சுகம்.

அதிசாரங்கள் இருபத்தைந்தும் இல்லாது கைக்கொண்ட அணுவதம் ஐந்தும் தேவ இன்பத்தைத் தரும்.

 அணுவிரத்தால் சிறப்படைந்தவர்கள்

80. சட்டி தனதேவன் பாரீசன் நீலியும்

பெற்றர் சயனும் சிறப்பு.

சட்டி புலையன், தனதேவன், பாரிசேனன், நீலி, ஜயகுமரன் ஆகிய ஐவரும் அணுவதத்தால் சிறப்படைந்தமைக்குச் சான்றாவர்

விரதமின்மையால் கேடடைந்தவர்கள்

81. தனசிரி சத்தியன் தாபதன் காப்பான்

நைதாடி வெண்ணெய் உரை

தனஸ்ரீ, சத்தியகோடன், உறித்தாபதன், தளவரன், தாடிவெண்ணெய்காரன் ஆகிய ஐவரும் அணுவிரதம் இல்லமையால் கேடு அடைந்தமைக்குச் சன்றாவர்.

எட்டு மூலகுணம்

82. கள்ளொட் தேன்புலைசு உண்ணாமை ஐவதமும்

தெள்ளுங்கால் மூல குணம்

 புலால் உண்ணாமை, கள்குடியாமை, தேன் அருந்தமையொடு மேற்கூறிய ஐந்து அணுவதமும் தெளியுங்கால் மூல குணம் எனப்படும்.

குணவிரதம் திசை விரதம்

83. வரைப திசைபத்தும் வாழும் அளவும்

புரைவுஇல் திசைவிரதம் என்.

வாழ்நாள் முழுவதும் திசை பத்திலும் குறித்த தொலைவுக்கு மேல் செல்லுதல் இல்லை என உறுதி எடுத்தல் குற்றமைல்லாத திசை விரதமாம்.

திசை விரத எல்லைகள்

84. ஆறும் மலையும் கடலும் அடவியும்

கூறுப எல்லை அதற்கு.

ஆறு, மலை, கடல், காடு, இவற்றை எல்லையகக் கொள்ள வேண்டும் என்று அறிஞர் கூறுவர்.

மகாவிரதம்

85. எல்லைப் புறத்தமைந்த பாவம் ஈண்டாமையின்

சொல்லுப மாவதம் என்று.

வரையறுத்த எல்லைக்கப்பால் நடைபெறும் பாபங்கள் அணு விரதியைச் சேராமையால் இவ்விரதத்தை மாவிரதத்தோடு ஒப்பாக சொல்லுவர்.

முற்றும் துறத்தல்

86. சிறியகொலை பொய் களவொடு காமம்

பொருளைத் துறத்தலோடு ஐந்து.

தாவரங்களையும் கொல்லமை, பொய், களவு, காமம், பொருட்பற்று இவை இல்லாமை யாகிய ஐந்தும் மாவதம் ஆகும்.

எட்டு மூலகுணம்

87. கொலைமுதலா ஐந்தினையும் முற்றத் துறத்தல்

தலையாய மாவத மாம்.

 கொலை முதலிய ஐந்தினையும் முழுமையக துறத்தல் தலையாய மகா விரதமாகும்.

 திசை விரதத்தின் இறப்பு

88. இடம்பெருக்கல், எல்லை மறத்தல் கீழ்மேலோடு

உடன்இருத்தல், பக்கம் இறப்பு

முன்பே முடிவு செய்த இடங்களின் எல்லைகளை விரிவாக்குதல், அல்லது மறந்துவிடுதல், அனைத்து திசைகளிலும் தன் அளவைமீறி செல்லுதல் திசை விரததின் அதிசாரங்களாம்.

பயனில செய்யாமை அனர்த்த தண்ட விரதம்

89. எல்லை அகத்தும், பயம் இல மீண்(டு) ஒழுகல்

நல்அனந்த்த தண்ட வதம்.

வரையறைக்குட்பட்ட இடத்திலேயும் பயனற்ற செயல்களைப் புரியாமல் போற்றுதல் நல்லதோர் அனர்த்ததண்ட விரதமாகும்.

90. ஐந்து அனந்த தண்ட விரதம் முறை உள்ளிச்

சிந்திக்கச் செய்வன் தெரிந்து.

ஆகமத்தில் குறிய வண்ணம் ஐந்துவகையான அனர்த்ததண்ட விரதங்களையும் அனைவரும் அறியும்மாறு முறையகக் கூறுகின்றேன்.

தீய சிந்தை

91. ஆர்வமொடு செற்றத்தை ஆக்கும் நினைப்புகள்

தீயுறு தீச்சிந்தை யாம்.

விருப்பு வெறுப்புகளை வளர்க்கும் தீய எண்னங்கள் கொடிய பாபத்திற்குக் காரணமான தீச்சிந்தை எனப்படும்.

பாப உபதேசம்

92. சோஆள், விலைகொளல் கூறுதல் கூட்டதல்

பாபஉப தேசம் எனல்.

பறவை, விலங்கு, அடிமைகள் ஆகியவற்றைக் குறைந்த விலையில் கொள்ளவும் கவரவும் வழி கூவடைப் பாபோபதேசம் என்பர்.

பயனில் செயல்.

93.  பயம்இல் மரம்குறைத்த லோடுஅகழ்தல் என்ப

பயமஇல் பமாதம் எனல்.

காரமிண்றி தாவரங்களை அழிப்பதும், பூமியை அகழ்வதும் பயனற்றபிரமாதம் எனப்படும்.

 கொலை கொடுத்தல்

94. தீகருவி, நஞ்சு, கயிறு, தடி, நார்கள்

ஈத்தல் கொலைகொடுத்தல் ஆம்

கொடிய கொலைக்கருவிகளையும், தீ, நஞ்சு, கயிறு, தடி, நார் போன்றவற்றையும் தானமாக வழங்குதல்ஹிம்சாதானம் எனப்படும்.

தீயன கேட்டல்

95. மோகத்தை ஈன்று தவம் ழிக்கும் சொற்கேட்டல்

பாவச் சுருதி எனல்

ஆசையை வளர்த்துத் தவத்தை இழக்கச்செய்யும் நூல்களைப் படிப்பதும், கேட்பதும்பாவச்சுருதி எனப்படும்.

ஐந்து அனர்த்த தண்ட விரத இறப்பு

96. ஐந்து அனர்த்த தண்ட விரத இறப்புமுகையே நினைப்பு மொழியின்மை கூறல்

மிகைநினைவு நோக்கார் செயல்.

நகைச்சுவைப் பேச்சு, குரும்பு செயல், பயனற்ற சொற்கள் துய்ப்புணர்வு, சிந்தனையற்ற செயல் ஆகியவை அனர்த்தண்ட விரதத்தின் அதிசாரங்களாம்.

வரும் முன் காத்தல்

97. ஐந்துஅனத்த தண்ட விரதக்கு இறப்பிவை

முந்துஉணர்ந்து காக்க முறை

 மேற்கூறிய ஐந்து இறப்புகளும் நேராதபடி உணர்ந்து விழிப்புடன் முறையக அனர்த்ததண்ட விரதத்தை அணுசரித்தல் வேண்டும்.

ஐந்தன் சுவை அடக்கல்

பரிக்கிரக பரிமாண விரதம்

98. போக உபபோக பரிமாணம் என்றுரைப்பர்

வாயிற் புலன்கள் வரைந்து.

ஐம்பு நுகர்ச்சிக்குரிய பொருள்களை ஓர் அளவுடன் வரையறுத்து துய்ப்பதுபரிக்கிரக ப்ரிமாண் விரதம் எனப்படும்.

 போகப் பொருள்கள்- உபபோகப் பொருள்கள்

99. துய்த்துக் கழிப்பன போகம்; உபபோகம்

துய்ப்பாம் பெயர்த்தும் எனல்.

 ஒரேமுறை துய்த்தற்குரியவை போகப்பொருள், மீண்டும் மீண்டும் பயன் படுபவை உபபோகப் பொருள் எனப்படும்.

100. மயக்கம் கொலை அஞ்சிக் கள்ளும் மதுவும்

துயக்கில் துறக்கப் படும்.

அறிவை மயக்குவதாலும், கொலைப் பாபம் நேர்வதாலும், கள், தேன் இவற்ரை அரவே நீக்குவது அவ் விரதத்தின் பாற்படும்.

101. வேப்ப மலர் இஞ்சி வெண்ணெய் அதம்பழ

நீப்பர் வைபோல் வன.

விரதமுடையர்கள் வேப்பம்பூ இஞ்சி, வெண்ணெய், அத்திப்பழம் இவற்றையம்

உண்ணாது ஒழிப்பார்கள்

102 இயமங்கள் கால வரையறை இல்லை,

நியமங்கள் அல்லாவ தம்.

 இறக்கும் வரை ஏற்கும் விரதம் 'மயவிரதம்'; இவ்வளவு காலம் என வரையறுத்து மேற்கொள்வது நியமவிரதம் ஆகும்

103. உடுப்பன, பூண்பன, பூசாந்துமம், ஊர்தி

படுப்ப, பசிய நீராட்டு.

ஆடை, அணி, மலர், மணப் பொருள், ஊர்தி படுக்கை, குளிர்ந்த நீ¡¢ல் நீராடுதல்

104 கோலம் இலைகூட, நித்த நியமங்கள்

கால வரையறுத்தல் நற்கு.

வெற்றிலைச் சுவைத்தல் போன்றவற்றைத் தமது ஆற்றலுக்கேற்ப அன்றாடம் வரையறுத்து ஏற்றல் பயன் தருவதாகும்.

வரையறுத்துக் கொள்ளும் நியமமுறை.

105 இன்றுபகல், இரா இத்திங்கட்கு, இவ்ஆண்டைக்கு

என்று நியமம் செயல்

ஒரு பகல், ஓர் இரவு, இத்தனைத் திங்கள், இத்தனை ஆண்டுகள், என்று கால வரையறை செய்தல் நியமமாகும்.

பரிமாண விரதத்தின் இயல்பு

106 வேட்கை, வழிநினைப்பு, துய்ப்பு மிகநடுக்கு,

நோக்குன்மை ஐந்தாம் இறப்பு

நீக்கிய பொருள்களை விரும்புவதும் அவை பெறும் வழிச் சிந்திப்பதும் அவற்றை துய்த்தலும் தளர்வதும் விரதம் நினையாமையும் அதிகாரங்களாகும்

சிக்கா விரதம்  சாமாயிகம்

107 கட்டு விடுகாறும் எஞ்சாமை ஐம்பாவம்

விட்டுஒழுகல் சாமா யிகம்

 ஏற்றுக் கொண்ட உறுதி குலையாமல் கொலை முதலிய ஐம்பாவங்களையும் நினையாது ஆன்மத் தியானத்தில் நிலைத்தல் சாமாயிகம் எனப்படும்.

கட்டுகளாவன

108 கூறை மயிர்முடி முட்டி நிலையிருக்கை

கூறிய கட்டுஎன்று உணர்.

ஆடைகள் அவிழாமை தலைமயிர் கலையாமை விரல் பி¡¢யாமை நிலை குலையாது நிற்றல் அமர்தல் கட்டு எனப்படும்.

சாமாயிக விரத்திற்கு உரிய இடங்கள்

109 ஒருசிறை இல்லம் பிறவுழி யானும்

மருவுக சாமா யிகம்.

இல்லத்தின் ஒரு பக்கத்திலோ அல்லது வேறு அமைதியான இடங்களிலோ சாமாயிகத்தை மேற்கொளள்ள வேண்டும்.

சாமாயிக விரத்திற்கு உரிய காலம்

110 சேதியம் வந்தனை பட்டினி ஆதியாய்

ஓதிய காலம் அதற்கு         

இறைவன் திருஉருவங்களை வணங்குங்கும் போதும் உபவாசம் மேற்கொள்ளும் காலத்தும் சாமாயிகம் கொள்ளுதல் வேண்டும

சாமாயிகம் முழுமையாக நிறைவு பெறுதல்.

111 பெற்ற வகையினால் சாமாயிகம் உவப்பின்

முற்ற நிறையும் வதம்.

நல்லதோர் சூழலைப் பெற்று ஆற்றலுக்கேற்ற வகையில் மகிழ்ச்சியுடன்

எண்ணிய காலம் வரை சாமாயிகத்தை மேற்கொண்டால் அது நிறைவைத் தரும்.

உடல் வேறு உயிர் வேறு

112 தனியன் உடம்புஇது; வேற்றுமை சுற்றம்

இனைய நினைக்கப் படும்.

 சாமாயிகத்தின்போது இவ்வுடம்பு சுற்றம் முதலியன வேறானவை உயிருக்கும் இவற்றிற்கும் உறவில்லை என்பதை சிந்தித்தல் வேண்டும்.

வருந்துதலும் திருந்துதலும்

113 இறந்தன் தீமைக்கு இழித்தும் பழித்தும்

மறந்தொழியா மீட்டல் தலை.

தான் செய்த தீமைகளுக்குத் தன்னை இழிதத்து நிந்தித்து மீண்டும் தவறியும் அவ்வாறு நேராது அடங்கிப் போற்றுதல் சாமாயிகத்தின் சிறப்பாகும்.

114 தீயவைஎல்லாம் இனிச்செய்யேன் என்று அடங்கித்

து¡யவழி நிற்றலும் அற்று.

தீவினைக்குக் காரணமானவற்றைச் செய்யாது அடங்கி உயர் நெறியில் நிற்றலும் சாமாயிகம் ஆகும்

வருந்துக

115 ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையே

நின்று நினைந்துஇரங்கறற் பாற்று

சாமாயிகம் செய்வோர் தாம் அறிந்தோ அறியாமலோ செய்த தீமைகளைப பற்றிச் சிந்தித்து இரங்குதல் வேண்டும்.

நல்லனவே நினைத்தல்-சொல்லல்-செய்தல்

116 தனக்கும் பிறர்க்கும் உறுதிச் சொற்செய்கை

மனத்தினில் சிந்திக்கற் பாற்று.

தனது உயிருக்கும் மற்ற உயிர்களுக்கும் மனம் மொழி செயல்களால் நன்மையே பு¡¢ய சிந்தித்தல் வேண்டும்.

மறந்தும் தீயன நினையாமை

117 பிறர்கண் வருத்தமும் சாகாடும் கேடும்

மறந்தும் நினையாமை நன்று

            பிறரை வருதத்தவோ கெடுக்கவோ கொல்லவோ மனதாலும் நினையாதிருத்தல் நன்மை பயப்பதாகும்.

வேண்டா உறவு

118 திருந்தார் பொருள்வரவும் தீயார் தொடர்பும்

பொருந்தாமை சிந்திக்கற் பாற்று.

கட்டவர்கள் முலம் பொருள் திரட்டலும் தீயோர்களுடன் நட்பு கொள்வதும் பொருந்தா என்பதை உணர்தல் வேண்டும்.

 ஆத்மா ஒன்றே நிலையானது

119 கூடியவை எல்லாம் பி¡¢வனவாம்; கூடின்மை

கேடுன்மை சிந்திக்கறற் பாற்று

சேர்ந்த அனைத்தும் நிலையற்றன விலகுவன என்ப¨தையும் உயிர் நிலையானது பிறவற்றோடு கூடாதது என்பதையும் உணர்தல் வேண்டும்

120. நல்லறச் சார்வும் நவைஅற நீக்கலும்

பல்வகையால் பார்க்கப்படும்

உயர் அறத்தின்பால் பற்றுக் கொண்டு துன்பதத்திற்குக் காரணமான வினைகளை நீக்கும் உறுதியினைப் பலவகையாலும் உணர்தல் வேண்டும்.

121. உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பின்மை

உள்ளார் மறத்தல் இறப்பு

மனம் மொழி செயல்களால் மாறுபடுதலும் சாமாயிகத்தில் விருப்பக் குறைவும் காலத்தில் செய்யாமையும் சாமாயிகத்தின் அதிசாரங்களாம்.

உண்ணா விரதம்

122 உவா அட்டமியின்கண் நால்வகை ஊணும்

அவாஅறுத்தல் போசதம் என்

 சதுர்தசி அட்டமி ஆகிய திதிகளில் நால் வகை உணவிலும் விருப்பமின்றி இருத்தல் போசாத உபவாசம் எனப்படும்.

 உண்ணாநோன்பின் போது வேண்டாதவை

123. ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டுப் பூச்சாந்து

நம்பற்க பட்டினியின் ஞான்று.

மகளிர் ஐம்பாவச் செயல்களையும் ஆடவர் அறுவகைத் தொழில்களையும் நீக்கி நீராட்டு மலர்ச்சூட்டு சந்தனம் முதலியவற்றை ஒதுக்குதல் வேண்டும்

 நோன்பின் போது வேண்டத்தகுவன

124. அறவுரை கேட்டல் நினைத்தல் உரைத்தல்

திறவதின் செய்யப் படும்.

உபவாச காலத்தில் அறம் கேட்டல் சிந்தித்தல் பிறருக்குரைத்தல் இவற்றைத் தவறாது மேற்கொள்ளல் வேண்டும்.

ஒரு வேளை உண்ணுதல்

125. உண்டி மறுத்தல் உபவாசம் போசதம்

உண்டல ஒருபோது எனல்.

நால்வகை உணவினை அறவே நீக்குதல் உபவாசம் என்றும் ஒரு வேளை ஏற்றல் போசதம் என்றும் கூறப்படும்

தொடர் உண்ணாவிரதம்

126. பாச துபவாசம் என்றுரைப்பர் பட்டினிவிட்டு

ஆரம்பம் செய்யான் எனின்

பட்டினி இடைவிட்டு முன்னாலும் பின்னாளும் ஒரு வேளை உண்டு தொழில் பு¡¢யாது ஆன்ம உணர்வில் இருத்தல் போசாத உபவாசம் ஆகும்

உண்ணாநோன்பிற்கு இறப்புகள்

127. நோக்கித் துடையாது கோடல் மலம்துறத்தல்

சேர்கைப் படுத்தல் இறப்பு.

 கவனிக்காமல் பொருள்களைக் கையாளலும், மலஜலம் கழித்தலும், படுக்கையில் படுத்தலும் உண்ணாநோன்பிற்கு இறப்புகளாகும்

 உண்ணா நோன்பை நசிப்பன

128. கி¡¢யை விருப்பு கடைப்பிடி இன்மை

¡¢தின் இறப்பு இவைஐந்து.

சாமாயிகம், ஜபம் இவற்றை விரும்பாமையும் மனதைப் பலவாறு அலையச் செய்வதும் ஐந்து அதிசாரங்களாம்.

இடம் வரைதல்  தேசம் கடக்காமை

129. தேசம் வரைந்தொழுகல் கால வரைறையில்

தேசாவ காசிகம் என்.

குறிப்பிட்ட நாட்டிற் கப்பால் செல்வதலல்லை என உறுதி செய்து ஒழுகல் தேசாவ காசிகம் ஆகும்.

தேச வரையறை

130. மனைச்சோ¢ ஊர்பபுலம் ஆறுஅடவி காதம்

இனையடம் வரைதல் எனன்

இல்லம் சோ¢ ஊர் வயல் ஆறு காதம் இனையன எல்லைகளாக வரையப்படும்

கால வரையறை

131. ஆண்டொடுநாள் திங்கள் இத்துணை என்றுஉய்த்தல்

காண்தகு காலம் அதற்கு

ஆண்டு திங்கள் நாள் இத்துணை என வரையறுத்தல் கால வரையறையாம்

எல்லைக்கு புறம்பான பாவம்

132.  எல்லைப் புறத்து அமைந்த பாவம்ஈண்டாமையின்

புல்லுக நாளும் பு¡¢ந்து.

இதனால் அந்த எல்லைகக்கப்பாலிருந்து பாபங்கள் வருவது தடைபடுவதால் இந்த விரதங்கள் விரும்பி ஏற்கக் கடவதாகுகம்.

தேச வரையறைக்கு இறப்பு

133. கூறல் கொணருதல் ஏவல் உருக்காட்டல்

யாதுஒன்றும் விட்டு எறிதல் கேடு

எல்லைக்கப்பால் உள்ளவர்களுடன் பேசுதல் அங்கிருந்து பொருள் பெறுதல் பிறரை அங்கு அனுப்புதல் தன் உருக்காட்டுதல் பொருள் அவ் எல்லையில் எறிதல் ஆகியவை அதிசாரங்களாகும்.

ஈகை  விருந்தோம்பல்

134. உண்டி மருந்தோடு உறையுள் உபகரணம்

கொண்டுஉய்த்தல் நான்காம் வதம்

உணவு மருந்து இடம் நூல் இவற்றைக் தானமாக தன் சக்திக்கேற்ப நல்லவர்கட்கு அளித்தல்அதிதிசம்விபாகம் என்னும் நான்காவது விரதமாகும்.

துறவிகட்கு அறம் செய்தல்

135. தானம் செயல் வையாவச்சம் அறம் நோக்கி

மானம்இல் மாதவர்க்கு நற்கு.

அறம் உணர்ந்து செருக்கின்றி மா தவதத்தினைப் பு¡¢யும் முனிவர்களுக்கு நான்கு வகைத் தானங்களைச் செய்தல் வையா விருதத்யம் எனப்படும்.

136. இடர்களைதல் உற்றது செய்தலும் ஆங்கே

படும்என்ப பண்பபுடை யார்க்கு.

துறவியர் மேலான இல்லறத்தோர் இவர் தம் துன்பங்களைப் போக்குதல் தன் ஆற்றலுக்கேற்ப உதவுதல் ஆகியவையும் வையா விருத்யம் எனப்படும்.

உத்தம தானம்

137. உத்தமரக்கு ஒன்பது புண்ணியத்தால் ஈவது

உத்தம தானம் எனல்

மேலான துறவியர்க்கு ஒன்பது வகையான உயர் முறைபடி உணவளித்தல் மேன்மையான ஆகார தானம் எனப்படும்.

இரட்டைக் கொடைகள்

138. உத்தம தானம் தயாதானம் தம்மளவில்

வைத்துஒழியான் செய்க உவந்து.

தமது சக்திக்கேறற்ப மாமுனிவர்களுக்கு அபயமளிதல் உயிர்களுக்கு அபயமளித்தல் ஆகிய இவற்றை மகிழ்வுடன் இடையறாது செய்வார்களாக.

துறவியர்க்கு வழங்கலின் பயன்

139. மனைவாழ்க்கை யாலவந்த பாவம் துடைத்தல்

மனை நீத்தார்க்கு ஈயும் கொடை.

அனைத்தையும் துறந்த முனிவர்களுக்கு அளிக்கும் ஆகாரதானத்தின் பயனால் இல்வாழ்வில் நம்மையுமறியாமல் சேர்ந்த பாபங்கள் நீங்கும் என்பதாகும்.

140.  தான விடயதத்தில் தடுமாற்றம் போம்துணையும்

ஈனம்இல் இன்பக் கடல்

 இதுவரை கூறிய தானங்களினால் பிறவிப்பிணி நீங்கி வீடுபெறுகின்ற வரையில் குறைவற்ற கடல் போன்ற இன்பத்தை எய்தலாம்.

எடுத்துக் காட்டுகள்

141. சிரிசேன், இடபமா சேனையே, பன்றி

உரைகோடல் கொண்டை, உரை.

 ஸ்ரீசேணன், விருக்ஷப சேனை, பன்றி, கௌண்டேசர் இவர் நம் வரலாறுகள் தானங்கள் பயனுக்கு எடுத்துகாட்டுகளாம்.

விருந்தோம்பலை வீணாக்குவன

142. பசியதன் மேல்வைத்தல், மூடல், மறைத்தல்

புரிவுன்மை, எஞ்சாமை கேடு

 ஆகாரத்தைப் பச்சையிலையில் வைப்பதும், அதனால் மூடுவதும், பச்சைப் பொருள்களைக் கலந்து மறைவாகத் தருவதும், பற்றின்றி அளிப்பதும், காலந்தவறி கொடுப்பதும் அதிசாரங்களாகும்.

துறவறத்தாற்கு   பூசை

143. தேவாதி தேவன் திருவடிக்குப் பூசனை

ஓவாது செய்க உவந்து.

தேவாதி தேவனாகிய அருக பெருமானின் அழகிய திருவடிகளுக்கு மகிழ்ச்சியுடன் இடையறாது பூஜை முதலியவற்றைப் புரிதல் வேண்டும்.

வழிபாட்டின் வெற்றிக்கு சான்று

144 தெய்வச் சிறப்பின் பெருமையைச் சாற்றுமேல்

மையுறு தேரை உரை

அருக பெருமானின் அடிகலைப் பூஜிப்போர் அடையும் சிறப்பினை அறிய கரிய தவளையின் வரலாறு எடுத்துக்கட்டாகும்.

வடக்கிருத்தல்   சல்லேகனை

145. இடையூறு, ஒழிவுஇல்நோய், மூப்பு, இவைவந்தால்

கடைதுறத்தல் சல்லே கனை

 பலவழிகளில் வரும் துன்பங்கள், தீராத னோய், மிக்க மூப்பு வை காரணமாக தொழில் புரிவதையும், உணவுகொள்வதையும் ஒழித்து நிற்றல் சல்லேகனை எனப்படும்.

எடுத்துக் காட்டுகள்

146.  இறுவைக்கண் நான்கும் பெறுவாம் என்றுஎண்ணி

மறுஆய நீக்கப் படும்.

 இருதிகாலத்தில் அறிவு, காட்சி, பலம், சுகம் ஆகிய உயிர்த்தன்மைகளை அடைவோம் என்ற உறுதியுடன் தீய எண்ணங்களை நீக்குதல் வேண்டும்.

147. பற்றொடு செற்றமே அற்றம் தொடர்ப்பாடு

முற்றும் துறக்கப் படும்

 ஆசை, செற்றம், சுற்றம், பற்று இவற்றை அறவே நீக்குதல் வேண்டும்

148. ஆலோ சனையின் அழிவுஅகற்றி, மாதவன்கண்

மீள்வுஇன்றி ஏற்றுக் கொளல்.

உயிர் நெறியினின்றும் மனம் மாறுபட்டுச் சென்று தான் ஏற்ற விரதத்திற்குக் குறை நேர்ந்திருந்தால் அதை ஒளிக்காமல் குருவினிடம் வெளிப்படுத்தி மீண்டும் விரதத்தில் நிலைத்ருத்தல் வேண்டும்.

149. கசிவு கலக்கம் அகற்றி மனத்தை

ஒசியாமல் வைக்க உவந்து

இளக்கமும் கலக்கமுமின்றி மனத்தை நிலையாக மகிழ்ச்சியுடன் ஆன்மத் தியானத்தில் இருத்த வேண்டும்.

உண்ணாமை- பருகாமை

150. ஊனொடு பானம் முறைசுருக்கி, ஓர்ந்தூணர்ந்து

மானுடம்பு வைக்கப் படும்

 முறையாக உண்பதையும் பருகுவதையும் குறைத்து, மருமைக்கு உறுதியானவற்றை ஆய்ந்தறிந்துப் பெறுதற்கரிய உடலினின்று நீங்குதல் வேண்டும்.

எடுத்துக் காட்டுகள்

151. மந்திரங்கள் ஐந்தும் மனத்துவரச் சென்றார்கள்

இந்திரற்கும் இந்திரரே என்.

 சல்லேகனை காலத்து ஐந்து மந்திரங்கலையும் மனத்தே இருத்திச் சிந்தித்தவர்கள் ஜினேந்திர பதவியை எய்துவர்.

சல்லேகனையின் இறப்பு

152. சாவொடு வாழ்க்கையை அஞ்சித்தான் மெச்சுதல்

வாழ்வொடு நட்டார் நினைப்பு

 இறப்பதற்கும், இருப்பதற்கும் அஞ்சுதலும், செருக்குறுதலும்,துய்த்த இன்பத்தை எண்ணுதலும், தொடர்புபட்டாரை நினைதலும்,

153.  நிதானத் தோடு ஐந்து இறப்புமின்றி முடித்தார்

பதானம் அறுத்தார் எனல்.

தான் இந்நிலை எய்தல் வேண்டும் என எண்ணுதலும் ஆகிய ஐந்தும் அதிசாரமின்றி சல்லேகனையை முடித்தவர் பரிவைத்தனை ஐந்தினைக் கெடுத்தவராவர்.

அறத்தின் பயன்

154. அறத்துப் பயனைப் புராண வகையில்

திறத்துஉள்ளிக் கேட்கப் படும்

அறத்தினால் விளையும் ஆக்கங்களைப் புராணங்கள் முதலியவற்றில் நன்கு கற்று கேட்டு ஆராய்ந்து அறிதல் வேண்டும்.

155. பிறப்புபிணி, மூப்பு சாக்காடு நான்கும்

அறுத்தல் அறத்தின் பயன்.

 பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு இந்நான்கினையும் ஒழிப்பதுதான் அறத்தின் பயனாகும்.

எடுத்துக் காட்டுகள்

156. பரிவு நலிவினொடு அச்சமும் இல்லை

உருவின் பிறப்புல் லவர்க்கு.

 உடலுடன் சேர்ந்த பிறவியை ஒழித்த வீட்டுயிர்களுக்கு விருப்பு, வெறுப்பு, அச்சம் ஆகிய எதுவும் எப்போதும் இல்லை.

157. கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன்போல

விட்டு விளங்கும் உயிர்.

 வீட்டுயிர்கள் அப்பழுக்கில்லாத தூய்மையான பொன்னைப் போன்று விளங்கும் தன்மை உடையவை

158. எல்லைஇல் இன்பம் உணர்வு வலிகாட்சி

புல்லும் வினைவென் றவர்க்கு.

வினைகளை வென்றவர்களிடம் எல்லையற்ற இன்பம், ஞானம், வலிமை, காட்சி விளங்கித் தோன்றும்.

159.   உலக மறியினும் ஒன்று மறியார்

நிலைய நிலைபெற் றவர்

 ருக்கால் இவ்வுலகமே நிலைமாறினாலும் வீட்டுநிலை எய்தியவைகள் மீண்டும் பிறவியை எய்தமாட்டார்கள்.

160 மூவுலகத்து உச்சிச் சூளாமணி விளக்குத்

தோவகையில் சித்தி யவர்.

குற்றமற்ற வீட்டுலகெய்திய சித்த பரமேட்டிகள், மிக உயர்ந்த இடத்தில் உள்ள மணிவிளக்கு ஒளிருமாறு விளங்குகின்றார்கள்.        

இல்லறத்தார்

161. பதினோர் நிலைமையர் சாவகர் என்று

விதியின் உணரப் படும்

நமது ஆகம நெறிப்படி இல்லறத்திலிருப்போர் பதினோரு நிலையினர் என்பதை உணரல் வேண்டும்.

தரிசனிகன்

162. காட்சியில் திண்ணனாய், சீல விரதம் இலான்

மாட்சிஉறு தரிசன் ஆம்.

நற்காட்சியில் உறுதியுடையவன், ஆனால் விரதங்களை ஏற்காதவன் தரிசனிகன்.

விரதிகன்

163. வதம் ஆஐந்தும் சீலம்ஓர் ஏழும்தரித்தான்

விதியால் விரதி எனல்.

ஐந்து அணு விரதங்களையும், எழு சீலங்களையும் ஏற்று ஒழுகுபவன் ஆகமப்படி விரதிகன் எனப்படுவான்.

சாமாயிகன்

164. எல்லியும், காலையும் ஏத்தி நியமங்கள்

வல்லியான் சாமா யிகன்.

இரவும் பகலும் ஏற்ற நேரத்தில் நாள் தவறாது ஆன்ம சிந்தனைச் செய்யும் ஆற்றலுடையோன் 'சாமாயிகன்'.

போசதுபவாசன்

165. ஒருதிங்கள், நால்வகைப் பவ்வமே, நோன்பு

புரிபவன் போசன் ஆம்.

 மாதத்தில் நான்கு திதிகளில் உண்ணாவிரதத்தை ஏற்பவன் போசதன் ஏன்னும் ' புரோசதோபவாசன்' எனப்படுவான்.

அச்சித்தன்

166. பழம், இலை காயும், பசிய துறந்தான்

அழிவுஅகன்ற அச்சித்தன் ஆம்

 இலை, காய், கனியாத பழங்கள் வற்றை உண்ணாது ஒதுக்கியவன் குற்றமற்ற அச்சித்தன் என்னும் ' சத்சித்த விரதனாகும்.'

இரவு உண்ணான்

167. இருளின் கண் நால்வகை ஊணும் துறந்தான்

இராத்திரிஅ புக்தன் எனல்.

 இரவில் நால்வகை உணவுகளில் எதையும் உண்பதில்லை என நீக்கியவன் ' இரத்திரி அபுக்தன்' எனப்படும்.

பிரமசாரி

168. உடம்பினை உள்ளவாறு ஓர்ந்துஉணர்ந்து, காமம்

அடங்கியான் பம்மன் எனல்.

உடலின் தன்மைகளை நன்கு உணர்ந்து காம உணர்ச்சியை அடக்கியான் பம்மன் எனும் ' பிரமசாரி' எனப்படுவான்.

அநாரம்பன்

169. கொலைவரும் ஆரம்பம் செய்தலின் மீண்டான்

அலகில் அநாரம்பன் எனல்.

மிகுதியான உயிர்க் கொலைக்குக் காரணமன தொழில்கள் எதையும் செய்யாதொழிந்து விட்டவன்அநாரம்பன் எனப்படுவான்.

அபரிக் கிரகன்

170. இருதொடர்ப் பாட்டின் கண் ஊக்கம் அறுத்தான்

உரியன் அபரிக் ரகன்.

 அகப்பற்றுக்களில் மனதைச் செலுத்தாது ஆர்வத்தை அடியோடு நீக்கியவன்அபரிக் கிரகன் என்னும் நிலைக்குரியவன்.

அனனு மதன்

171. யாதும் உடம்பாடு வாழ்க்கைக்கண் இல்லவன்

மாசுஇல் அனனு மதன்.

மற்றவர் செய்யும் தொழில்களுக்கும் உடன்பாடு இல்லாதவன் அதாவது எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாதவன் மாசற்றஅனனு மதன் எனப்படுவான்.

உத்திட்டபிண்டன்

172. மனைதுறந்து, மாதவர் தாளடைந்து, நோற்று,

வினை அறுப்பான் உத்திட்டன் ஆம்.

இல்லைத்துறத்து மாமுனிவர்பால் சென்று விரதங்களை, மேற்கொண்டு வினைகளை கெடுக்க முயலும் பக்குவம் அடைந்தவன் உத்திட்டபிண்ட விரதனாவான்.

பதினொரு நிலைகலின் இயல்பு

173. முன்னைக் குணத்தொடு தம்தம் குணம்உடைமை

பண்ணிய தானம் எனல்

பதினொரு நிலைகளும் அந்த அந்த நிலைகளுக்குக் கூறப்பட்ட குணங்களோடு தன் தன் முன் நிலைக்குரிய குணங்களையும் உள்ளக்கியதாம் என அறிதல் வேண்டும்.

நூலை உணரும் முறை

174. பாவம் பகையொடு, சுற்றம் இவைசுருக்கி

மோவமோடு இன்றி உணர்.

பாவச் செயல், பகையுணர்வு, சுற்றத்தினர்பால் பற்று இவற்றை முறையாக நீக்கி அறியாமை நீங்கி நல்ஞானத்துடன் நடுமைபிறழாது ஆகமங்களை அறிவாயாக

அருங்கலச் செப்பின் சிறப்பு

175. அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார்

ஒருங்கு அடையும் மான்பு திரு.

 அருங்கலச் செப்பு என்னும் இந்நூலினை ஆய்ந்துணர்ந்தவர்கள் மாண்பமைந்த மனித இன்பத்திலிருந்து முக்தி நிலை வரை எய்துவர்.

176. வந்தித்துஆய்ந்து, ஓதினும், சொல்லினும், கேட்பினும்

வெந்து வினையும் விடும்

இந்நூலினைப் போற்றி உணர்ந்தாலும் மற்றவர்க் குரைத்தாலும் மற்றவர் கூறக் கேட்டாலும் அவரிடம் இறுகியுள்ள வினைகள் அழிந்தொழியும் என்பதாம்.

அருங்கல செப்பின் பயன்கள்

177. தப்பினில் மீளா, கடுந்தவம் நீர்உற்ற

உப்பினில் மாய்ந்து கெடும்        

இந்நூலில் கூறிய நெறிமுறைகளைத் தவறாது மேற்கொள்பவரின் தீவினைகள் நீரில் கரையும் உப்பு போல் மாய்ந்து தொழியும்.

178. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்

நாமம் கெடக்கெடும் நோய்.

ஆசை, வெகுளி, மயக்கம் இவை மூன்றும் அடியோடு ஒழியுமானால் பிறவிப்பிணியும் அவற்றுடன் ஒழியும் என்பதாம்.

179. முத்தி நெறிகாட்டும் முன்னறியா தார்கெல்லாம்

சித்தி அருங்கலச் செப்பு.

உயர்ந்தவை அனைத்தையும் அளிக்கவல்ல இந்நூல் வீட்டு நெறியாதார்க்கு அந் நெறியினை உணர்ந்தும் ஆற்றல் பெற்றதாகும்.

180. தீரா வினைதீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும்

பாராய் அருங்கலச் செப்பு.

தீர்த்தற்கரிய தீவினைகளை நீக்கி வீட்டினை அளிக்கும் ஆற்றல் பெற்ற இந்நூலினை ஆய்ந்துணர்ந்து அதன் படி நடப்பாயாக.

181. நச்சரவு அணிநிழல் பச்சைமா மலைதனை

நிச்சலும் நினைப்பவற்கு அச்சம்இல்லையே.           

நஞ்சினைப் பெற்ற பாம்பின் பட நிழலில் வீற்றிருக்கும் பச்சைமலை போன்ற பார்சுவ தீர்த்தங்கரரை நாள்தோறும் தொழுவார்க்குப் பிறவித்துன்பங்கள் இல்லை என்பதாம்.

அருங்கலச் செப்பு - மூலமும் உரையும் முற்றும்.

தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினைப் பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.[

பழமொழி400    

தற்சிறப்புப் பாயிரம் 

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப் 

பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா

முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்

இன்றுறை வெண்பா இவை.

கடவுள் வணக்கம்

அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்

விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து

உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்

பெரியதன் ஆவி பெரிது.'

நூல்  1. கல்வி

1. ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்

போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்

'சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே யில்லை

மரம்போக்கிக் கூலிகொண் டார்'.

2. சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்

கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி

உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல்

'கற்றொறுந்தான் கல்லாத வாறு'.

3.விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்

துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு

மருள்படுவ தாயின் மலைநாட ! என்னை

'பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்'.

4.ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு

வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்

'ஆற்றுணா வேண்டுவ தில்'.

5.உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்றும்

கிணற்றுகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை

முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்

'கற்றலின் கேட்டலே நன்று'.

6.உரைமுடிவு காணான் இளமையோன் என்ற

நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்

சொல்லால் முறைசெய்தான் சோழன் 'குலவிச்சை

கல்லாமல் பாகம் படும்'.

7.புலமிக் கவரைப் புலமை தெரிதல்

புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க

பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே

'பாம்பறியும் பாம்பின கால்'.

8.நல்லார் நலத்தை உணரின் அவரினும்

நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல

மயிலாடு மாமலை வெற்ப! மற்றென்றும்

'அயிலாலே போழ்ப அயில்'.

9.சுற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

'நிறைகுடம் நீர்தளும்பல் இல்'.

10.விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை இல்லார்

கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்

பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்

'மதிப்புறத்துப் பட்ட மறு'.

2. கல்லாதார்

11.சுற்றானும் சுற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்

தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்

அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை

'நாவற் கீழ்ப் பெற்ற கனி'.

12.கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்

சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்!

'வினாமுந் துறாத உரையில்லை; இல்லை

கனாமுந் துறாத வினை'.

13.கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்

நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்

சொல்லால் வணக்கி வெகுண்(டு)அரு கிற்பார்க்கும்

'சொல்லாக்கால் சொல்லுவ தில்'.

14.கல்வியான் ஆய சுழிநுட்பம் கல்லார்முன்

சொல்லிய நல்லவும் தீயவாம் - எல்லாம்

இவர்வரை நாட! 'தமரையில் லார்க்கு

நகரமும் காடுபோன் றாங்கு'.

15.கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்

பொல்லாத தில்லை ஒருவற்கு - நல்லாய் !

'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை

ஒழுக்கத்தின் மிக்க உயர்வு'.

16.கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்

சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்

தானும் நடவான் 'முடவன் பிடிப்பூணி

யானையோ டாடல் உறவு

3. அவையறிதல்

17.கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்

வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் - வேட்கையால்

வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் ! 'தோற்பன

கொண்டு புகாஅர் அவை'.

18.ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு

இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா

பெருவரை நாட! சிறிதேனும் 'இன்னாது

இருவர் உடனாடல் நாய்'.

19.துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்

பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி

மொழிந்தால் மொழியறியான் கூறல் 'முழந்தாள்

கிழிந்தானை மூக்குப் பொதிவு'.

20.கல்லாதும் கேளாதும் கற்றாரவை நடுவண்

சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்(று) - எல்லருவி

பாய்வரை நாட! 'பரிசழிந் தாரோடு

தேவரும் ஆற்றல் இலர்'.

21.அகலம் உடைய அறிவடையார் நாப்பண்

புகலறியார் புக்கவர் தாமே - இகலினால்

வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ

'பாண்சேரி பற்கிளக்கு மாறு.

22.மானமும் நாணும் அறியார் மதிமயங்கி

ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து

ஞானம் வினாஅய் உரைத்தல் 'நகையாகும்

யானைப்பல் காண்பான் புகல்'.

23.அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்

நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் கல்வி

அளவிறந்து மிக்கார் அறிவெள்ளிக் கூறல்

'மிளகுளு வுண்பான் புகல்'

24.நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்

புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்

புடைத்தறுகண் அஞ்சுவான் 'இல்லுள்வில் லேற்றி

இடைக்கலத்து எய்து விடல்'.

25.நடலை இலராகி நன்றுணரார் ஆய

முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்

உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்

'கடலுளால் மாவடித் தற்று'.

-4. அறிவுடைமை

26.அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்

பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின்

மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன

'அணியெல்லாம் ஆடையின் பின்'.

27.ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்

மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்

பாயிருள் நீக்கும் 'மதியம்போல் பன்மீனும்

காய்கலா வாகும் நிலா'.

28.நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே

சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்

வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட!

'கற்றறிவு போகா கடை'.

29.ஆணம் உடைய அறிவினார் தந்நலம்

மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்

மானமர் கண்ணாய்! மறங்கெழு மாமன்னர்

'யானையால் யானையாத் தற்று'.

30.தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்

பரியார் இடைப்புகார் பண்பறிவார் மன்ற

விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!

'அரிவாரைக் காட்டார் நரி'.

31.பொற்பவும் பொல்லா தனவும் புனைந்திருந்தார்

சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்

அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! - 'அறியும்

பெரிதாள் பவனே பெரிது'.

32.பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக்

கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்தெழுந்து

வேயின் திரண்டதோள் வேற்கண்ணாய் 'விண்ணியங்கும்

ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்'.

33.அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்

திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால்

பெருவரை நாட! பிரிவின் றதனால்

'திருவினும் திட்பம் பெறும

-5. ஒழுக்கம்

34.விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார்

ஒழுக்குடையர் ஆகி ஒழுகல் -பழத்தெங்கு

செய்த்தலை வீழும் புனலூர ! அஃதன்றோ

'நெய்த்தலைப்பால் உக்கு விடல்'

35.கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்

எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் தெள்ளிதின்

ஆர்க்கும் அருவி மலைநாட ! 'நாய்கொண்டால்

பார்ப்பாரும் தின்பர் உடும்பு'.

36.தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்

செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது

நின்னடை யானே நடஅத்தா ! 'நின்னடை

நின்னின்(று) அறிகிற்பார் இல்'.

37.நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்

பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே

கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்(கு) ஆயினும்

'ஓர்த்தது இசைக்கும் பறை'.

38.தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம்

எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்

வியனுலகில் 'வெள்ளாடு தன்வளி தீராது

அயல்வளி தீர்த்து விடல்'.

39.கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை

முற்றுநீர் ஆழி வரையகத்(து) ஈண்டிய

'கல்தேயும் தேயாது சொல்'.

40.பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு

மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்தின்

தணியாது விட்டக்கால் தண்கடல் சேர்ப்ப!

'பிணியீ டழித்து விடும்'.

41.உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா

நெருஞ்சியும் செய்வதொன் றில்லை - செருந்தி

இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப !

'பெரும்பழியும் பேணாதார்க்(கு) இல்'.

42.ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும்

கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்

தேவர்க்கு மக்கட்(கு) எனல்வேண்டா 'தீங்குரைக்கும்

நாவிற்கு நல்குரவு இல்'.

-6. இன்னா செய்யாமை

43.பூவுட்கும் கண்ணாய்! பொறுப்பர் எனக்கருதி

யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா

தேவர்க்கும் கைகூடத் திண்ணன்பி னார்க்கேயும்

'நோவச்செய் நோயின்மை இல்'.

44.வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு

நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்

புனம்பொன் அவிர்சுணங்கி பூங்கொம்பர் அன்னாய்!

'தனக்கின்னா இன்ன பிறர்க்கு'.

45.ஆற்றார் இவரென்(று) அடைந்த தமரையும்

தோற்றத்தாம் எள்ளி நலியற்க - போற்றான்

'கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்

உடையானைக் கவ்வி விடும்.

46.நெடியது காண்கிலாய் நீயொளியை நெஞ்சே!

கொடியது கூறினாய் மன்ற - அடியுளே

'முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் கண்டு விடும்'.

47.தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்

மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்

'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்

கூற்றமாய் வீழ்ந்து விடும்'

48.மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை

ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்

நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமேல்

'கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்'.

49.நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின்

கூர்த்தவரைத் தாம்நலிதல் கோளன்றால் - சான்றவர்க்குப்

பார்த்தோடிச் சென்று கதம்பட்டு 'நாய்கவ்வின்

பேர்த்துநாய் கவ்வினார் இல்'.

50.காழார மார்ப! கசடறக் கைகாவாக்

கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்

உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து) ஊக்கல் 'குறுநரிக்கு

நல்லாநா ராயம் கொளல்'.

---7. வெகுளாமை

51.இறப்பச் சிறியவர் இன்னா செயினும்

பிறப்பினால் மாண்டார் வெகுளார் - திறத்துள்ளி

'நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்

இல்லம் சுடுகலா வாறு'.

52.ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை

 மாறி ஒழுகல் தலையென்ப - ஏறி

வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப !

'தெளியானைத் தேறல் அரிது'.

53.உற்றதற் கெல்லாம் உரஞ்செய்ய வேண்டுமோ?

கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்

நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல 'நெடும்பகை

தற்செய்யத் தானே கெடும்'.

54.எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர்

வைதாராக் கொண்டு விடுவர்மன் - அஃதால்

புனற்பொய்கை ஊர! 'விளக்கெலி கொண்டு

தனக்குநோய் செய்து விடல்'.

55.தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்

பரியாதார் போல இருக்க - பரிவில்லா

வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே

'அம்பலம் தாழ்க்கூட்டு வார்'.

56.கையார உண்டமையால் காய்வார் பொருட்டாகப்

பொய்யாகத் தம்மை பொருளல்லார் கூறுபவேல்

மையார உண்டகண் மாணிழாய் ! என்பரிவ

'செய்யாத செய்தா வெனில்?'

57.ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்

காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? தீந்தேன்

முசுக்குத்தி நக்கு மலைநாட! தம்மைப்

'பசுக்குத்தின் குத்துவார் இல்'.

58.நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார்

நாவின் ஒருவரை வைதால் வயவுரை

பூவிற் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுவன்றோ

'தீயில்லை ஊட்டும் திறம்'.

59.சுறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்

பொறுத்தாற்றிச் சேறல் புகழால் - ஒறுத்தாற்றின்

வானோங்கு மால்வரை வெற்ப! பயனின்றே

'தானோன் றிடவரும் சால

--8. பெரியாரைப் பிழையாமை

60.அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று

சிறியர் எனப்பாடும் செய்யும் - எறிதிரை

சென்றுலாம் சேர்ப்ப ! 'குழுவத்தார் மேயிருந்த

என்றூடு அறுப்பினும் மன்று'.

61.ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று

தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்

போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்

சாமாகண் காணாத வாறு.'

62.எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்

கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்வின்

நிறைந்தார் வளையினாய்! அஃதால் 'எருக்கு

மறைந்துயானை பாய்ச்சி விடல்'.

63.முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்

பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ - இன்னிசை

யாழின் வண்டார்க்கும் புனலூர ! 'ஈனுமோ

வாழை இருகால் குலை'.

64.நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு

நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்

அடும்பார் அணிகானற் சேர்ப்ப! 'கெடுமே

கொடும்பாடு உடையான் குடி'.

-----9. புகழ்தலின் கூறுபாடு

65.செய்த கருமம் சிறிதானும் கைகூடா

மெய்யா உணரவும் தாம்படார் - எய்த

நலத்தகத் தம்மைப் புகழ்தல் 'புலத்தகத்துப்

புள்ளரைக் கால் விற்பேம் எனல்'

66.தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்

அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்

அமையாகும் வெற்ப! 'அணியாரே தம்மைத்

தமவேனும் கொள்ளாக் கலம்'.

67.தாயானும் தந்தையா லானும் மிகவின்றி

வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்

நோயின்(று) எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும்

நாயைப் புலியாம் எனல்'.

68.பல்கிளையுள் பார்த்துறான் ஆகி ஒருவனை

நல்குரவால் வேறாக நன்குணரான் - சொல்லின்

உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்

'நிரையுள்ளே இன்னா வரைவு'.

  --10. சான்றோர் இயல்பு

69.நீறூர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்

வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்

'தாறாப் படினும் தலைமகன் தன்னொளி

நூறா யிரவர்க்கு நேர்'.

70.ஒற்கத்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்

நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்

தன்மேல் நலியும் 'பசிபெரி தாயினும்

புன்மேயா தாகும் புலி'.

71.மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்

கூடம் மரத்திற்குத் துப்பாகும் – அஃதேபோல்

பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்

'ஈடில் லதற்கில்லை பாடு'.

72.இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்

உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்கு

அணிமலை நாட ! 'அளறாடிக் கண்ணும்

மணிமணி யாகி விடும்'.

73.கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார்

மற்றொன றறிவாரின் மாணமிக நல்லால்

பொற்ப உரைப்பான் புகவேண்டா 'கொற்சேரித்

துன்னூசி விற்பவர் இல்'.

74.முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்

நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப !

'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.

75.பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்

சொல்லார் ஒருவரையும் உள்ளூன்றப் பல்லா

நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும்

'உரைத்தால் உரைபெறுதல் உண்டு'.

76.எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்

தனக்குத் கரியாவான் தானாய்த் - தவற்றை

நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் 'காணார்

எனச்செய்தார் மாணா வினை'.

77.தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்

காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை -ஏய்ப்பார்முன்

சொல்லோ டொருப்படார் சோர்வின்றி மாறுபவே

'வில்லோடு காக்கையே போன்று'.

78.மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர்

தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை

மடலொடு புட்கலாம் மால்கடற் சேர்ப்ப !

'கடலொடு காட்டொட்டல் இல்'.

79.நிரைதொடி தாங்கிய நீள்தோள்மாற்(கு) ஏயும்

உரையொழியா வாகும் உயர்ந்தோர்கண் குற்றம்

மரையா கன்றூட்டும் மலைநாட! 'மாயா

நரையான் புறத்திட்ட சூடு'.

80.கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்

ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்

ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்

'குன்றின்மேல் இட்ட விளக்கு'.

------11. சான்றோர் செய்கை

81.ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு

ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்

போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்

'ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்'.

82.அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்

இடங்கண்(டு) அறிவாம்என்(று) எண்ணி இராஅர்

மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! 'சான்றோர்

கடங்கொண்டும் செய்வார் கடன்'.

83.மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்

பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க்(கு) என்கொலோ?

மையுண்(டு) அமர்ந்தகண் மாணிழாய்! 'சான்றவர்

கையுண்டும் கூறுவர் மெய்'.

84.ஆண்டீண்டு எனவொன்றோ வேண்டா அடைந்தாரை

மாண்டிலா ரென்றே மறைப்பக் கிடந்ததோ?

பூண்தாங்கு இளமுலை பொற்றொடி! 'பூண்ட

பறையறையார் போயினார் இல்'.

85.பரியப் படுபவர் பண்பிலார் ஏனும்

திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்

பாரெறியும் முந்நீர்த் துறைவ ! 'கடனன்றோ

ஊரறிய நட்டார்க்கு உணா'.

86.தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்

மற்றுங்கண் ஓடுவர் மேன்மக்கள் - தெற்ற

நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் 'சான்றோர்

அவைப்படின் சாவாது பாம்பு'.

87.இறப்ப எமக்கீ(து) இழிவரலென்(று) எண்ணார்

பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்

சாலவும் மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே

'தால அடைக்கலமே போன்று'.

88.பெரிய குடிப்பிறத் தாரும் தமக்குச்

சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறியிலை

வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ

'பூவோடு நாரியைக்கு மாறு'.

89.சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்

பெரியவர் நல்குரவு நன்றே -தெரியின்

மதுமயங்கு பூங்கோதை மாணிழாய் ! 'மோரின்

முதுநெய் தீதாகலோ இல்'.

-----------12.கீழ்மக்கள் இயல்பு

90.மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்

உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க

இனநலம் நன்குடைய ராயினும் 'என்றும்

மனநலம் ஆகாவாம் கீழ்'

91.தக்காரோ(டு) ஒன்றித் தமராய் ஒழுகினார்

மிக்காரால் என்று சிறியாரைத் தாம்சேறார்

கொக்கார் வளவய லூரா! 'தினலாமோ

அக்காரம் சேர்ந்த மணல்'.

92.தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன

வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?

மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ

நந்துழுத எல்லாம் கணக்கு?'.

93.பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும்

நன்கறியார் தாமும் நனியுளர் - பாத்தி

விதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு

'உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு'.

94.ஓர்த்த கருத்தும் உலகும் உணராத

மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான்

கொண்டதே கொண்டு விடானாகும் 'ஆகாதே

உண்டது நீலம் பிறிது'.

95.தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்

இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்

யாவரே யாயினும் நன்கொழுகார் 'கைக்குமே

தேவரே தின்னினும் வேம்பு'.

96.காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை

நாடுறைய நல்கினும் நன்கொழுகார் - நாடொறும்

கையுள தாகி விடினும் 'குறும்பூழ்க்குச்

செய்யுள(து) ஆகும் மனம்'.

97.கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்

பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை

புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்(று) 'அஞ்சாதே

தின்பது அழுவதன் கண்'.

98.மிக்க பழிபெரிதும் செய்தக்கால் மீட்டதற்குத்

தக்கது அறியார் தலைசிறத்தல் - எக்கர்

அடும்(பு)அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே

துடும்பல் எறிந்து விடல்'.

99.மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்

பேணா துரைக்கும் உரைகேட்டு வந்ததுபோல்

ஊணார்ந்(து) உதவுவதொன்று இல்லெனினும் 'கள்ளினைக்

காணாக் களிக்கும் களி'.

100.உழந்ததூஉம் பேணாது ஒறுத்தமை கண்டும்

விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்

தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!

'முழங்குறைப்ப சாண்நீளு மாறு'.

101.அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால்

செல்வ(து) அறிகலர் ஆகிச்சி தைத்தெழுப

கல்லாக் கயவர் இயல்போல் 'நரியிற்(கு) ஊண்

நல்யாண்டும் தீயாண்டும் இல்'.

102.கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது

காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப்

பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ?

'ஊரறியா மூரியோ இல்'.

103.நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்

பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்

மரம்பயில் சோலை மலைநாட! என்றும்

'குரங்கினுள் நன்முகத்த இல்'.

104.ஊழாயி னாரைக் களைந்திட்(டு) உதவாத

கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலும்

தீஞ்சொல் மழலையாய் ! தேனார் 'பலாக்குறைத்துக்

காஞ்சிரை நட்டு விடல்'.

105.பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்

சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு

பூமேல் இசைமுரலும் ஊர ! அதுவன்றோ

'நாய்மேல் தவிசிடு மாறு'.

106.பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து

ஆசறு செய்யாராய் ஆற்றப் பெருகினும்

மாசற மாண்ட மனமுடையர் ஆகாத

'கூதறைகள் ஆகார் குடி.'

---------------13. கீழ்மக்கள் செய்கை

107.நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்

சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்

தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்

'திங்களை நாய்குரைத் தற்று'.

108.மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்

பெறுமாறு செய்ம்மின் என்பாரே- நறுநெய்யுள்

கட்டி அடையைக் களைவித்துக் 'கண்சொரீஇ

இட்டிகை தீற்று பவர்'. 108

109.கண்ணில கயவர் கருத்துணர்ந்து கைமிக

நண்ணி யவர்க்கு நலனுடைய செய்பவேல்

எண்ணி இடர்வரும் என்னார் 'புலிமுகத்து

உண்ணி பறித்து விடல்'.

110.திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை உடையார்

வருந்தினார் என்றே வயப்படுவ துண்டோ ?

அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும்

'பொருந்தாமண் ஆகா சுவர்'.

111.குலத்துச் சிறியார் கலாந்தணிப்பான் புக்கு

விலக்குவார் மேலும் எழுதல் - நிலத்து

நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் 'வெண்மாத்

தலைக்கீழாக் காதி விடல்'.

112.சொல்எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க்

கல்எறிந்தாற் போலத் கலாந்தலைக் கொள்வாரை

இல்இருந்(து) ஆற்ற முனிவித்தல் 'உள்ளிருந்து

அச்சாணி தாம்கழிக்கு மாறு'.

113.நாணார் பரியார் நயனில செய்தொழுகும்

பேணா அறிவிலா மக்களைப் பேணி

ஒழுக்கி அவரோடு உடனுறை செய்தல்

'புழுப்பெய்து புண்பொதியு மாறு'.

114.பொல்லாத சொல்லி மறைத்தொழுகும் பேதைதன்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் !

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

'நுணலும்தன் வாயால் கெடும்'.

115.தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்குரைத்துப்

போக்குற்ற போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண்

நோக்கற் றவரைப் பழித்தலென்? என்னானும்

'மூக்கற்ற தற்கில் பழி'.

116.கோவாத சொல்லும் குணனிலா மாக்களை

நாவா லடக்கல் அரிதாகும் - நாவாய்

களிக்கள்போல் தூங்கும் கடல்சேர்ப்ப ! 'வாங்கி

வளிதோட் கிடுவாரோ இல்'.

117.தெரியாதார் சொல்லும் திறனின்மை தீதாப்

பரியார் பயனின்மை செய்து - பெரியார்சொல்

கொள்ளாது தாம்தம்மைக் காவா தவர் 'பிறரைக்

கள்ளராச் செய்குறு வார்'.

118.செய்த கொடுமை உடையான் அதன்பயம்

எய்த உரையான் இடரினால் - எய்தி

மரிசாதி யாயிருந்த 'மன்றஞ்சு வார்க்குப்

பரிகாரம் யாதொன்றும் இல்'.

119.முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய

பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்

குன்றத்து வீழும் கொடியருவி நன்னாட!

'மன்றத்து மையல்சேர்ந் தற்று'. 

120. தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும்

பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்

கரப்புடை உள்ளம் கனற்று பவரே

'செருப்பிடைப் பட்ட பரல்'.

121. உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப்

பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல்

சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை அதுவே

'குறுமக்கள் காவு நடல்'.

122. உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய

நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்

வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே

'சுரையாழ அம்மி மிதப்பு'.

123. தேர்ந்துகண் ஓடாது தீவினையும் அஞ்சலராய்ச்

சேர்ந்தாரை யெல்லாம் சிறிதுரைத்துத் - தீர்ந்த

விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும்

'நரகர்கட்கு இல்லையோ நஞ்சு?

-------------14. நட்பின் இயல்பு

124.ஒட்டிய காதல் 'உமையாள் ஒரு பாலக்

கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே'

விட்டாங்கு அகலா முழுமெய்யும் கொள்பவே

நட்டாரை ஒட்டி யுழி.

125. புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த

உரையும் பொருள்முடிவும் ஒன்றால் - உரைபிறிது

கொண்டெடுத்துக் கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப!

'ஒன்றேற்று வெண்படைக்கோள் ஒன்று'.

126. விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்

கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா - இலங்கருவி

தாஅய் இழியும் மணலைநாட! 'இன்னாதே

பேஎயோ டானும் பிரிவு'.

127. இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்

முனியார் செயினும் மொழியால் முடியா

துனியால் திரையுலாம் நூங்குநீர்ச் சேர்ப்ப!

'பனியால் குளநிறைதல் இல்'.

128. தாம்நட்(டு) ஒழுகுதற்குத் தக்கார் எனல்வேண்டா

யார்நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும்

கானாட்டு நாறும் கதுப்பினாய் ! 'தீற்றாதோ

நாய்நட்டால் நல்ல முயல்?'

129. தீர்ந்தேம் எனக்கருதித் தேற்றா(து) ஒழுகித்தாம்

ஊர்ந்த பரிவும் இலராகிச் - சேர்ந்தார்

பழமை கந்தாகப் பரியார் புதுமை

'முழநட்பிற் சாணுட்கு நன்று'.

130. கொழித்துக் கொளப்பட்ட நண்பின் அவரைப்

பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் - என்கொல்?

விழித்தலரும் நெய்தல் துறைவா! 'உரையார்

இழித்தக்க காணிற் கனா'.

131.நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட்ட டார்களைக்

கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்

பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்! 'யாருளரோ

தங்கன்று சாக்கறப் பார்'.

132.தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையையும்

எம்தீமை என்றே உணர்பதாம் - அந்தண்

பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!

'ஒருவர் பொறைஇருவர் நட்பு'.

133.தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பனப் பட்டார்க்(கு)

உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற

அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்

'மறையார் மருத்துவர்க்கு நோய்'.

134.முட்டின்(று) ஒருவர் உடைய பொழுதின்கண்

அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே

கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக்

'கெட்டார்க்கு நட்டாரோ இல்'.

------------------15. நட்பில் விலக்கு

135.கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்

எண்ணும் துணையில் பிறராகி நிற்பராய்

எண்ணிஉயிர் கொள்வான் வேண்டித் திரியினும்

'உண்ணும் துணைக்காக்கும் கூற்று'.

136.எயப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்

உற்றுழி ஒன்றுக்கு உதவலர் பைந்தொடீஇ!

அச்சிடை இட்டுத் திரியின் அதுவன்றோ

'மச்சேற்றி ஏணி களைவு.'

137. பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்

தாக்கி அமருள் தலைப் பெய்யார் - போக்கி

வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாரே

'கழிவிழாத் தோளேற்று வார்'.

138. இடையீ(டு) உடையார் இவர்அவரோ(டு) என்று

தலையாயர் ஆராய்ந்தும் காணார் - கடையாயர்

முன்னின்று கூறும் குறளை தெரிதலால்

'பின்னின்னா பேதையார் நட்பு.'

139.தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால்

நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்

மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரா

'கானகத்து உக்க நிலா'.

140. கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்

பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்

விண்டொரீஇ மாற்றி விடுதல் அதுவன்றோ

'விண்டற்கு விண்டல் மருந்து'.

141.பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று

திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்

ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே

'இருதலைக் கொள்ளியென் பார்'.

------16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல்

142. பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை

ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு - யார்கண்ணும்

கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்

'கண்டது காரணம்ஆ மாறு.'

143. யாம்தீய செய்த மலைமறைந்த(து) என்றெண்ணித்

தாம்தீயார் தம்தீமை தேற்றாராய் - ஆம்பல்

மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!

'கணையினுந் கூரியவாம் கண்'.

144.வெள்ளம் வருங்கால் ஈரம்பட்(டு) அஃதேபோல்

கள்ளம் உடையாருக் கண்டே அறியலாம்

ஒள்அமர் கண்ணாய்! ஒளிப்பினும் 'உள்ளம்

படர்ந்ததே கூறும் முகம்'.

145.நோக்கி அறிகல்லாத் தம்உறுப்புக் கண்ணாடி

நோக்கி அறிய அதுவேபோல் - நோக்கி

முகனறிவார் முன்னம் அறிய அதுவே

'மகனறிவு தந்தை அறிவு'.

146.ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்

தேரும் திறமரிதால் தேமொழி ! - யாரும்

குலக்குல வண்ணத்த ராகுப ஆங்கே

'புலப்பல வண்ணத்த புள்'.

147.காப்பான் மடமகள் காப்பான்கைப் பட்டிருந்தும்

மேய்ப்பாட்ட தென்றுண்ணா ளாயினாள் - தீப்புகைபோல்

மஞ்சாடு வெற்ப ! 'மறைப்பினும் ஆகாதே

தஞ்சாதி மிக்கு விடும்'.

148.முயலலோ வேண்டா முனிவரை யானும்

இயல்பினார் என்பது இனத்தால் அறிக

கயலியலும் கண்ணாய் ! கரியரோ வேண்டா

'அயலறியா அட்(டு)ஊணோ இல்'.

----17. முயற்சி

149.எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்

தமக்குத் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா

பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோ மற்றில்லை

'தமக்கு மருத்துவர் தாம்'.

150.கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை

அற்ற முடிப்போன் அறிவுடையான் - உற்றியம்பும்

நீத்தநீர்ச் சேர்ப்ப! 'இளையோனே ஆயினும்

மூத்தோனே ஆடு மகன்'.

151.வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து

வாளாண்மை யாலும் வலியராய்த் தாளாண்மை

தாழ்க்கு மடிகோள் இலராய் 'வருந்தாதார்

வாழ்க்கை திருந்துதல் இன்று'.

152.ஒன்றால் சிறிதால் உதவுவதொன்(று) இல்லையால்

என்றாங்(கு) இருப்பின் இழுக்கம் பெரிதாகும்

அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது

'சென்றது பேரா தவர்'.

153.இனியாரும் இல்லாதார் எம்மிற் பிறர்யார்

தனியேம்யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா

முனிவில ராகி முயல்க 'முனிவில்லார்

முன்னிய(து) எய்தாமை இல்'.

154.தற்றூக்கித் தன்துணையும் தூக்கிப் பயன்தூக்கி

மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி

'யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்

யாதானும் ஆகி விடும்'.

155.வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்

தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு

முடியும் திறத்தால் முயல்க தாம் 'கூரம்பு

அடியிழுப்பின் இல்லை அரண்'.

156எங்கண் ஒன்றில்லை எமரில்லை என்றொருவர்

தங்கண் அழிவதாம் செய்யற்க - எங்காணும்

நன்கு திரண்டு 'பெரியவாம் ஆற்றவும்

முன்கை நெடியார்க்குத் தோள்'.

157.நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி

நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து

நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்

'உலக்கைமேல் காக்கை' என்பார்.

158.தலைக்கொண்ட தங்கருமம் தாமடி கொண்டு

கடைப்பிடி யில்லாதார்பால் வைத்துக் - கடைப்பிடி

மிக்கோடி விட்டுத் திரியின் அது 'பெரிது

உக்கோடிக் காட்டி விடும்'

159.தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார்

பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல்

சென்னீர் அருவி மலைநாட ! 'பாய்பவோ

வெந்நீரும் அடாதார் தீ.

160.முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று

தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்

'இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்

எழுதினான் ஓலை பழுது'.

161.முடிந்தற்(கு) இல்லை முயற்சி முடியாது

ஒடிந்ததற்(கு) இல்லை பெருக்கம் - வடிந்தற

வல்லதற்(கு) இல்லை வருத்தம் 'உலகினுள்

இல்லதற்(கு) இல்லை பெயர்'.

-----------18. கருமம் முடித்தல்

-162.செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்

பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்

அந்நீர் அவரவர்க்குத் தக்காங்(கு) ஒழுகுபவே

'வெந்நீரின் தண்ணீர் தெளித்து'.

163.தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்

தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்(டு) - ஏமாப்ப

முன்ஓட்டுக் கொண்டு முரண்அஞ்சிப் போவாரே

'உண்ஒட்(டு) அகல்உடைப் பார்'.

164.புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்

உரையின் வழுவா துவப்பவே கொள்க

வரையக நாட! 'விரைவிற் கருமம்

சிதையும் இடராய் விடும்'.

165.நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன்(று)

உளைய உரையார் உறுதியே கொள்க

வளையொலி ஐம்பாலாய் ! வாங்கி இருந்து

'தொளையெண்ணார் அப்பந்தின் பார்'.

166.அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது

நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது

கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்

'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'.

167.மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம்

முடியாத வாறே முயலும் - கொடியன்னாய்!

பாரித் தவனை நலிந்து தொழில்கோடல்

'மூரி உழுது விடல்'.

168.ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும்

பாணித்தே செய்ய வியங்கொள்ளின் - காணி

பயவாமல் செய்வாரார் 'தஞ்சாகா டேனும்

உயவாமல் சேறலோ இல்'.

169.விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்

முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்

தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்

'தட்டாமல் செல்லாது உளி'.

170.காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர்

ஆக்குவர் ஆற்ற எமக்கென்றே அமர்ந்திருத்தல்

மாப்புரை நோக்கின் மயிலன்னாய் ! 'பூசையைக்

காப்பிடுதல் புன்மீன் தலை'.

171.தெற்ற அறிவுடையார்க்(கு) அல்லால் திறனிலா

முற்றலை நாடிக் கருமம் செயவையார்

கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்

'மற்றதென் பாற்றேம்பல் நன்று'.

172.உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்

கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்

கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்

'இழவன்று எருதுண்ட உப்பு'.

173.கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்

பட்டுண்டாங்(கு) ஓடும் பரியாரை வையற்க

தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை 'இல்லையே

அட்டாரை ஒட்டாக் கலம்'.

174.நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்

காட்டிக் களைதும் எனவேண்டா - ஓட்டி

இடம்பட்ட கண்ணாய் ! 'இறக்கும்மை யாட்டை

உடம்படுத்து வெளவுண்டார் இல்'.

175.அகந்தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி

இகந்துழி விட்டிருப்பின் அஃதால் - இகந்து

நினைந்து தெரியானாய் 'நீள்கயத்துள் ஆமை

நனைந்துவா என்று விடல்'.

176.உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்

புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்

நிரையிருந்து மாண்ட 'அரங்கினுள் வட்டு

கரையிருந் தார்க்கெளிய போர்'.

----------19. மறை பிறர் அறியாமை

177சுற்றத்தார் நட்டார் எனச்சென்று ஒருவரை

அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்

ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்

'சீர்ந்தது செய்யாதார் இல்'.

178.வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப

உள்ளமாண் பில்லா ஒருவரைத் தெள்ளி

மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்

'பறைக்கண் கடிப்பிடு மாறு'.

179.அன்பறிந்த பின்அல்லால் யார்யார்க்கும் தம்மறையே

முன்பிறர்க்(கு) ஓடி மொழியற்க - தின்குறுவான்

கொல்வாங்குக் கொன்றபின் அல்லது 'உயக்கொண்டு

புல்வாய் வழிப்படுவார் இல்'.

180.நயவர நட்டொழுகு வாரும்தாம் கேட்ட(து)

உயவா(து) ஒழிவார் ஒருவரும் இல்லை

புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்

'கயவர்க்(கு) உரையார் மறை'.

181.பெருமலை நாட! பிறர்அறிய லாகா

அருமறையை ஆன்றோரே காப்பர் - அருமறையை

நெஞ்சிற் சிறியார்க்கு உரைத்தல் 'பனையின்மேல்

பஞ்சிவைத்(து) எஃகிவிட் டற்று'.

182.விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்

முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா

அளிந்தார்கண் ஆயினும் 'ஆராயா னாகித்

தெளிந்தான் விளிந்து விடும்'.

------------20. தெரிந்து தெளிதல்

183.ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்

மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்

தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) 'இல்லையே

தாஅம் தரவாரா நோய்'.

184.நற்பால சுற்றாரும் நாடாது சொல்லுவர்

இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?

கற்பால் கலங்கருவி நாட! 'மற் றியரானும்

சொற்சோரா தாரோ இல்'.

185.பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு

வேந்தன் வினாயினான் மாந்தரைச் - சான்றவன்

கொண்டதனை நாணி மறைத்தலால் தன் 'கண்ணிற்

கண்டதூஉம் எண்ணிச் சொலல்'.

186.ஒருவன் உணராது உடன்றெழுந்த போருள்

இருவ ரிடைநட்பான் புக்கால் - பெரிய

வெறுப்பினால் போர்த்துச் செறுப்பின் 'தலையுள்

குறுக்கண்ணி யாகி விடும்'.

187. எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின்

தினைத்துணையே யானும் அணிக்கோடல் நன்றே

இனக்கலை தேன்கிழிக்கும் மேகல்சூழ் வெற்ப!

'பனைப்பதித்(து) உண்ணார் பழம்'.

188.மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார்

கனங்கொண்(டு) உரைத்தவை காக்கவே வேண்டும்

சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க

'இனங்கழு வேற்றினார் இல்'.

189.கடுப்பத் தலைக்கீறிக் காலும் இழந்து

நடைத்தாரா என்பதூஉம் பட்டு - முடத்தோடு

பேர்பிறி தாகப் பெறுதலால் 'போகாரே

நீர்குறி தாகப் புகல்'.

190.சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்

பெரிதாய கூழும் பெறுவர் - அரிதாம்

'இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்

கிடப்புழியும் பெற்று விடும்'.

191புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்

வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?

புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை

'இன்சொல் இடர்ப்படுப்ப தில்'.

192.மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும்

பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும்

எந்நீர ராயினும் ஆகு அவரவர்

'தந்நீர ராதல் தலை'.

193.யாவரே யாயினும் இழந்த பொருளுடையார்

தேவரே யாயினும் தீங்கோர்ப்பர் - பாவை

படத்தோன்று நல்லாய்! 'நெடுவேல் கெடுத்தான்

குடத்துளும் நாடி விடும்'.

194.துயிலும் பொழுதத்(து) உடைஊண்மேற் கொண்டு

வெயில்விரி போழ்தின் வெளிப்பட்டா ராகி

அயில்போலுங் கண்ணாய்! அடைந்தார்போல் காட்டி

'மயில்போலும் கள்வர் உடைத்து'.

195.செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது

நில்லற்க நீத்தார் நெறியொரீப் - பல்காலும்

நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே

'ஓடுக ஊரோடு மாறு'.

--------------21. பொருள்

196.தெருளா தொழுகும் திறனிலா தாரைப்

பொருளால் அறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பின்

பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? 'வேற்குத்தின்

காணியின் குத்தே வலிது'.

197.ஒல்லாத இன்றி உடையார் கருமங்கள்

நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க்கு

இடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!

'கடலுள்ளும் காண்பவே நன்கு'.

198.அருமை யுடைய பொருளுடையார் தங்கண்

கருமம் உடையாரை நாடார் - எருமைமேல்

நாரை துயில்வதியும் ஊர! 'குளந்தொட்டுத்

தேரை வழிச்சென்றார் இல்'.

199.அருளுடை யாருமற் றல்லா தவரும்

பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை

பொருபடைக் கண்ணாய் ! அதுவே 'திருவுடையார்

பண்டம் இருவர் கொளல்'.

200.உடையதனைக் காப்பான் உடையான் அதுவே

உடையானைக் காப்பதூஉம் ஆகும் - அடையின்

'புதற்குப் புலியும் வலியே புலிக்குப்

புதலும் வலியாய் விடும்'.

201.வருவாய் சிறிதெனினும் வைகலும் ஈண்டின்

பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவாறு

ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும்

'துளியீண்டில் வெள்ளம் தரும்'.

202.உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்

எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! - தள்ளாது

அழுங்கல் முதுபதி 'அங்காடி மேயும்

பழங்கன்று ஏறாதலும் உண்டு'.

203.களமர் பலரானும் கள்ளம் படினும்

வளமிக்கார் செல்வம் வருந்தா - விளைநெல்

அரிநீர் அணைதிறக்கும் ஊர! 'அறுமோ

நரிநக்கிற்(று) என்று கடல்'.

204.நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து

வாடிய காலத்தும் வட்குபவோ! - வாடி

வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும்

'புலித்தலையை நாய்மோத்தல் இல்'

---------------22. பொருளைப் பெறுதல்

205.தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்

முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக

அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி

'நந்துநீர் கொண்டதே போன்று'.

206. மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்

சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்

கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப !

'இறந்தது பேர்தறிவார் இல்'.

207.அமையா இடத்தோர் அரும்பொருள் வைத்தால்

இமையாது காப்பினும் ஆகா - இமையோரும்

அக்காலத்(து) ஓம்பி அமிழ்துகோட் பட்டமையால்

'நற்காப்பின் தீச்சிறையே நன்று'.

208.ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை

நோக்குமின் என்றிகழ்ந்து நொள்வியார் கைவிடுதல்

போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப!

'காக்கையைக் காப்பிட்ட சோறு'.

209.தொடிமுன்கை நல்லாய்அத் தொக்க பொருளைக்

குடிமகன் அல்லான்கை வைத்தல் - கடிநெய்தல்

வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப!

'மூரியைத் தீற்றிய புல்'.

210.முன்னை யுடையது காவாது இகந்திருந்து

பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்

மைத்தடங்கண் மாதராய்! அஃதாதல் 'வெண்ணெய்மேல்

வைத்து மயில்கொள்ளு மாறு'.

211.கைவிட்ட ஒண்பொருள் கைவரவு இல்லென்பார்

மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா

மடம்பட்ட மானோக்கின் மாமயில் அன்னாய்!

'கடம்பெற்றான் பெற்றான் குடம்'.

212.கடங்கொண்ட ஒண்பொருளைக் கைவிட் டிருப்பார்

இடங்கொண்டு தம்மினே - என்றால் தொடங்கிப்

பகைமேற்கொண் டார்போலக் 'கொண்டார் வெகுடல்

நகைமேலும் கைப்பாய் விடும்'.

-------------23. நன்றியில் செல்வம்

213.அல்லது செல்வார் அரும்பொருள் ஆக்கத்தை

நல்லது செல்வார் நயப்பவோ? - ஒல்லொலிநீர்

பாய்வதே போலும் துறைவ! கேள் 'தீயன

ஆவதே போன்று கெடும்'.

214.தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார்

நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் - இன்னொலிநீர்

கல்மேல் இலங்கு மலைநாட ! 'மாக்காய்த்துத்

தன்மேல் குணில்கொள்ளு மாறு'.

215.பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார்

சுற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா

வரம்பிடைப் பூமேயும் வண்புணல் ஊர!

'மரங்குறைப்ப மண்ணா மயிர்'.

216.வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ

'நாய்பெற்ற தெங்கம் பழம்'

217.முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்

விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்

இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்

'அழகொடு கண்ணின் இழவு'.

218.நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய

மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை

அஞ்சிலென் அஞ்சா விடிலென் 'குருட்டுக்கண்

துஞ்சிலென் துஞ்சாக்கால் என்?'

219.படரும் பிறப்பிற்கொன்(று) ஈயார் பொருளைத்

தொடருந்தம் பற்றினால் வைத்திறப் பாரே

அடரும் பொழுதின்கண் இட்டுக் 'குடரொழிய

மீவேலி போக்கு பவர்'.

220.விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்

வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்

இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! 'ஆற்றக்

கரும்பனை அன்ன துடைத்து'.

221.வழங்கார் வலியலார் வாய்ச்சொல்லும் பொல்லார்

உழந்தொருவர்க்(கு) உற்றால் உதவலும் இல்லார்

இழந்ததில் செல்வம் பெறுதலும் இன்னார்

'பழஞ்செய்போர் பின்று விடல்'.

222.ஒற்கப்பட் டாற்றார் உணர உரைத்தபின்

நற்செய்கை செய்வார்போல் காட்டி நசையழுங்க

வற்கென்ற செய்கை அதுவால் அவ்வாயுறைப்

புற்கழுத்தில் யாத்து விடல்'.

223.அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்

உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்று

அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்

'இடையன் எறிந்த மரம்'.

224.மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று

இரந்தார் பெறுவதொன் றில்லை - குரங்கூசல்

வள்ளியி னாடு மலைநாட ! அஃதன்றோ

'பள்ளியுள் ஐயம் புகல்'

225.இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம்

வசையன்று வையத்(து) இயற்கை - அஃதன்றிப்

பசைகொண் டவன்நிற்கப் பாத்துண்ணான் ஆயின்

'நசைகொன்றான் செல்லுலகம் இல்'.

226.தமராலும் தம்மாலும் உற்றால்ஒன்(று) ஆற்றி

நிகராகிச் சென்றாகும் அல்லர் - இவர்திரை

நீத்தநீர்த் தண்சேர்ப்ப ! செய்தது 'உவவாதார்க்(கு)

ஈத்ததை எல்லாம் இழவு'.

------------24. ஊழ்

227.எவ்வம் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை

தெய்வம் முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு

பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! 'குறும்பியங்கும்

கோப்புக் குழிச்செய்வ(து) இல்'.

228.சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்

பட்ட விருத்தம் பலவானால் - பட்ட

பொறியின் வகைய கருமம் அதனால்

'அறிவினை ஊழே அடும்'.

229.அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்

திங்களும் தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி

அறைப்பாய் அருவி அணிமலை நாட!

'உறற்பால யார்க்கும் உறும்'.

230.கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்

விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய

வேண்டினும் வேண்டா விடினும் 'உறற்பால

தீண்டா விடுதல் அரிது'.

231.ஆஅய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை

ஏஎய் இரவெல்லாம் காத்தாலும் - வாஅய்ப்

படற்பாலார் கண்ணே படுமே 'பொறியும்

தொடற்பாலார் கண்ணே தொடும்'.

232.முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்

பிற்பெரிய செல்வம் பெறலாமோ? - வைப்போடு

இகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்?

'முதல்இலார்க்(கு) ஊதியம் இல்'.

233.பன்னாளும் நின்ற இடத்தும் கணிவேங்கை

நன்னாளே நாடி மலர்தலால் - மன்னர்

உவப்ப வழிபட் டொழுகினும் செல்வம்

'தொகற்பால போழ்தே தொகும்'.

234.குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்

புரைத்தெழுந்து போகினும் போவர் - அரக்கில்லுள்

பொய்யற்ற ஐவரும் போயினார் 'இல்லையே

உய்வதற்(கு) உய்யா இடம்'.

235.இதுமன்னும் தீதென்று இசைந்ததூஉம் ஆவார்க்கு

அதுமன்னும் நல்லதே யாகும் - மதுமன்னும்

வீநாறு கானல் விரிதிரை தண்சேர்ப்ப !

'தீநாள் திருவுடையார்க்(கு) இல்'

236.ஆற்றுந் தகைய அரசடைந்தார்க் காயினும்

வீற்று வழியல்லால் வேண்டினும் கைகூடா

தேற்றார் சிறியர் எனல்வேண்டா 'நோற்றார்க்குச்

சோற்றுள்ளும் வீழும் கறி'.

237.ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்

போகும் பொறியார் புரிவும் பயனின்றே

ஏகல் மலைநாட ! என்செய்தாங்கு என்பெறினும்

'ஆகாதார்க்(கு) ஆகுவது இல்'.

238.பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை

இன்றொறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்

மேவலரை கோவதென்? மின்னேர் மருங்குலாய் !

'ஏவலாள் ஊருஞ் சுடும்'.

239.சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்

செயிரறு செங்கோல் செலீஇயனான் 'இல்லை

உயிருடையார் எய்தா வினை.'

240.நனியஞ்சத் தக்க அவைவந்தால் தங்கண்

துனியஞ்சார் செய்வ(து) உணர்வார் - பனியஞ்சி

வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!

'ஊழம்பு வீழா நிலத்து'.

---------------25. அரசியல்பு

241.எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்

தங்கண்ணர் ஆயினும் தகவில கண்டக்கால்

வன்கண்ண னாகி ஒறுக்க 'ஒறுக்கல்லா

மென்கண்ணன் ஆளான் அரசு.

242.சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்

காலை கழிந்ததன் பின்றையும் - மேலைக்

கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்

'முறைமைக்கு மூப்பிளமை இல்'.

243.முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்

இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து

நேரொழுகா னாயின் அதுவாம் 'ஒருபக்கம்

நீரொழுகிப் பாலொழுகு மாறு'.

244.பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்

அருத்தம் அடிநிழ லாரை - வருத்தாது

கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ

'வண்டூதா துண்டு விடல்'.

245.பாற்பட்டு வாழ்ப எனினும் குடிகள்மேல்

மேற்பட்ட கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்

கோல்தலையே யாயினும் கொண்டீக காணுங்கால்

'பாலதலை பாலூறல் இல்'.

246.அடைய அடைந்தாரை அல்லவை செய்து

கொடைவேந்தன் கோல்கொடியன் ஆகிக் குடிகள்மேல்

கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ

'சூட்டறுத்து வாயில் இடல்'.

247.வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்

செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் - பொங்கு

படுதிரைச் சேர்ப்ப மற் 'றில்லையே யானை

தொடுவுண்ணின் மூடுங் கலம்'.

248.ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்

களியானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்

துளியுண் பறவைபோல் செவ்வன்நோற் பாரும்

'எளியாரை எள்ளாதார் இல்'.

249.மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்

உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்

பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?

'ஆயிரம் காக்கைக்கோர் கல்'.

250.அங்கோல் அவிர்தொடி! ஆழியான ஆயினும்

செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்

வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிதெனினும்

'தண்கோல் எடுக்குமாம் மெய்'.

251.மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார் மீக்கூற்றம்

என்ன வகையால் செயப் பெறுப? - புன்னைப்

பரப்புநீர் தாவும் படுகடல் தண்சேர்ப்ப!

'மரத்தின்கீழ் ஆகா மரம்'.

252.வழிபட் டவரை வலியராச் செய்தார்

அழிப்பினும் ஆக்கினும் ஆகும் - விழுத்தக்க

பையமர் மாலைப் பணைத்தோளாய்! பாத்தறிவென்

மெல்லக் 'கவுட்கொண்ட நீர்'.

253.தலைமை கருதும் தகையாரை வேந்தன்

நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்

காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ 'ஓரறையுள்

பாம்போ(டு) உடனுறையும் ஆறு'.

254.கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து

மாற்றம் உடையாரை ஆராயா(து) - ஆற்றவும்

முல்லை புரையும் முறுவலாய் ! 'செய்வதென்

வல்லை அரசாட் கொளின்?'

255.உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை

அடக்கமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின்

ஒளளியன் அல்லான்மேல் வைத்தல் 'குரங்கின்கைக்

கொள்ளி கொடுத்து விடல்'.

256.எல்லையொன்(று) இன்றியே இன்னாசெய் தாரையும்

ஒல்லை வெகுளார் உலகாள்வதும் என்பவர்

சொல்லின் வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே

'கொல்லையுள் கூழ்மரமே போன்று'.

257.போலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து

இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே

போந்திறை யாயதூஉம் பெற்றான் 'பெரியாரைச்

சார்ந்து கெழீஇயிலார் இல்'.

------------26. அமைச்சர்

258.கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்

கொல்சின வேந்தன் அவைகாட்டும் - மல்கித்

தலைப்பாய் இழிதரு தண்புனல் 'நீத்தம்

மலைப்பெயல் காட்டும் துணை'.

259.செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை

பயிரறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும்

செவ்வாய் முறுவலநற் சின்மொழியாய்! 'செய்தானை

ஒவ்வாத பாவையோ இல்'.

260.சுற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்

உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்

மரையா துணைபயிரும் மாமலை நாட!

'சுரையாழ் நரம்பறுத் தற்று'.

261.நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்

நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்

வல்லிதின் நாடி வலிப்பதே 'புல்லத்தைப்

புல்லம் புறம்புல்லு மாறு'.

262.மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை

அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி - நினைத்திருந்து

ஒன்றும் பரியலராய் 'ஓம்புவார் இல்லெனில்

சென்று படுமாம் உயிர்'.

263.செயல்வேண்டா நல்லன செய்விக்கும் தீய

செயல்வேண்டி நிற்பின் விலக்கும் இகல்வேந்தன்

தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்

'முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்'.

264.செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால்

அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்

பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்

'ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது'.

265.தீயன வல்ல செயினும் திறல்வேந்தன்

காய்வன சிந்தியார் சுற்றறிந்தார் - பாயும்

'புலிமுன்னர் புல்வாய்க்குப் போக்கில் அதுவே

வளிமுன்னர் வைப்பாரம் இல்'.

----------------27. மன்னரைச் சேர்ந்தொழுகல்

266.கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்

எடுத்துமேற் கொண்டவர் ஏய வினையை

மடித்தொழிதல் என்னுண்டாம்? மாணிழாய்! 'கள்ளைக்

குடித்துக் குழைவாரோ இல்'.

267.வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்

பெற்றிலேம் என்பது பேதைமையே - மற்றதனை

எவ்வம் இலராகிச் செய்க அதுவன்றோ

'செய்கென்றான் உண்கென்னு மாறு'.

268.எமரிது செய்க எமக்கென்று வேந்தன்

தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு

வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்

'ஆல்என்னிற் பூல்என்னு மாறு'.

269.விடலமை செய்து வெருண்டகன்று நில்லாது

உடலரு மன்னர் உவப்ப ஒழுகின்

மடலணி பெண்ணை மலிதிரை சேர்ப்ப!

'கடல்படா வெல்லாம் படும்'.

270.உவப்ப உடன்படுத்தற் கேய கருமம்

அவற்றவற் றாந்துணைய வாகிப் பயத்தால்

வினைமுதிரின் செய்தான்மேல் ஏறும் பனைமுதிரின்

தாய்தாள்மேல் வீழ்ந்து விடும்'.

271.செருக்கெழு மன்னர் திறலுடையார் சேர்ந்தார்

ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ ?

உருத்த சுணங்கின் ஒளியிழாய் ! 'கூரிது

எருத்து வலியநன் கொம்பு'.

272.வேந்தன் மதித்துவப்பப் பட்டாரைக் கொண்டேனை

மாந்தரும் ஆங்கே மதித்துணர்வர் - ஆய்ந்த

நலமென் கதுப்பினாய் ! நாடின 'நெய்பெய்த

கலனேநெய் பெய்து விடும்'.

273.ஆண்டகை மன்னரைத் சார்ந்தார்தாம் அல்லுறினும்

ஆண்டொன்று வேண்டுதும் என்பது உரையற்க

பூண்தாங்கு மார்ப! பொருள்தக்கார் 'வேண்டாமை

வேண்டிய தெல்லாம் தரும்'.

274.காவலனை ஆக வழிபட்டார் மற்றவன்

ஏவல் வினைசெய் திருந்தார்க்(கு) உதவடுத்தல்

ஆவணைய நின்றதன் கன்று 'முலையிருப்பத்

தாயணல் தான்சுவைத் தற்று'.

275.சிறப்புடை மன்னவரைச் செவ்வியின் நோக்கித்

திறத்தின் உரைப்பாரைக்கொன் (று) ஆகாத தில்லை

விறற்புகழ் மன்னர்க்(கு) உயிரன்ன ரேனும்

'புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன்'.

276.இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையும் என்று

கடிதவர்தாம் காதலிப்பத் தாம்காதல் கொண்டு

மூடிய எனைத்தும் உணரா முயறல்

'கடிய கனைத்து விடல்'.

277.சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்தும் கெட்டாலும்

நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த

கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்

'இளைதென்று பாம்பிகழ்வார் இல்'

278.செருக்குடைய மன்னர் இடைப்புக்(கு) அவருள்

ஒருத்தற்(கு) உதவாத சொல்லின் தனக்குத்

திருத்தலும் ஆகாது தீதரம் அதுவே

'எருத்திடை வைக்கோல் தினல்'.

279.பன்னாள் தொழில்செய்து உடைய கவர்ந்துண்டார்

இன்னாமை செய்யாமை வேண்டி இறைவர்க்குப்

பொன்யாத்துக் கொண்டு புகுதல் 'குவளையைத்

தன்னாரால் யாத்து விடல்'.

280.மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்

கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்

பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன் றார் 'குறைப்பர்

தம்மேலே வீழப் பனை.'

281.வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும்

நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா

என்செய்து அகப்பட்டக் கண்ணும் 'எழுப்புபவோ

துஞ்சு புலியைத் துயில்'.

282.தாமேயும் தம்மைப் புறந்தர வாற்றாதார்

வாமான்றோ மன்னரைக் காய்வது எவன்கொலோ?

ஆமா உகளும் அணிவரை வெற்ப! கேள்

'ஏமரார் கோங்கு ஏறினார்'.

283.உறாஅ வகையது செய்தாரை வேந்தன்

பொறாஅன் போலப் பொறுத்தால் - பொறாஅமை

மேன்மேலும் செய்து விடுதல் அதுவன்றோ

'கூன்மேல் எழுந்த குரு'.

284.பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்

தெருளும் திறந்தெரிதல் அல்லால் - வெருளஎழுந்து

ஆடு பவரோடே ஆடார் உணர்வுடையார்

'ஆடுபணைப் பொய்க்காலே போன்று'.

--------------28. பகைத்திறம் தெரிதல்

285.வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து

தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ

மஞ்சுசூழ் சோலை மலைநாட ! யார்க்கானும்

'அஞ்சுவார்க் கில்லை அரண்'.

286.எதிர்த்த பகையை இளைதாய போழ்தே

கதித்துக் களையின் முதிராதே தீர்த்து

நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்

'தனிமரம் காடாதல் இல்'.

287.முன்னலிந்து ஆற்ற முரண்கொண்டு எழுந்தோரைப்

பின்னலிதும் என்றிருத்தல் பேதைமையே - பின்சென்று

காம்பன்ன தோளி! கடிதிற் 'கடித்தோடும்

பாம்பின்பல் கொள்வாரோ இல்'.

288.நிரம்ப நிரையத்தைக் கண்டதும் நிரையம்

வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார்

கொடியார மார்ப! 'குடிகெட வந்தால்

அடிகெட மன்றி விடல்'.

289.தமர்அல் லவரைத் தலையளித்தக் கண்ணும்

அமராக் குறிப்பவர்க்(கு) ஆகாதே தோன்றும்

சுவர்நிலம் செய்தமையைக் கூட்டியக் கண்ணும்

உவர்நிலம் உட்கொதிக்கு மாறு'.

290.முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை

அகம்புகுதும் என்றிரக்கும் ஆசை இருங்கடத்துத்

தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார்

'ஒக்கலை வேண்டி அழல்'.

291.ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க

போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்

நோற்ற பெருமை உடையாரும் 'கூற்றம்

புறங்கொம்மை கொட்டினார் இல்'.

292.பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச்

சிறியார் முரண்கொண்டு ஒழுகல் - வெறியொலி

கோநாய் இனம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்

'தீநாய் எழுப்புமாம் எண்கு'.

293.இகலின் வலியாரை எள்ளி எளியார்

இகலின் எதிர்நிற்றல் ஏதம் - அகலப்போய்

என்செய்தே யாயினும் உய்ந்தீக 'சாவாதான்

முன்கை வளையும் தொடும்'.

294.வென்றடு நிற்பாறை வெப்பித் தவர்காய்வ(து)

ஒன்றொடு நின்று சிறியார் பலசெய்தல்

குன்றொடு தேன்கலாம் வெற்ப! அதுபெரிதும்

'நன்றொடு வந்ததொன் றன்று'.

295.உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று

சிலைத்தெழுந்து செம்மாப் பவரே - மலைத்தால்

இழைத்த திகவா தவரைக் கனற்றிப்

'பலிப்புறத் துண்பார் உணா'.

296.தழங்குரல் வானத்துத் தண்பெயல் பெற்றால்

கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோர் ஆற்றால்

விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா

'பழம்பகை நட்பதால் இல்'.

297.வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார் செய்வதென்?

கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு

புள்ளொலிப் பொய்கைப் புனலூர ! அஃதன்றோ

'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'.

298.இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்

தம்மைப் பரியார் தமரா அடைந்தாரின்

செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?

'மைம்மைப்பின் நன்று குருடு.'

299.பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்

இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்

விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே

'அரிந்தரிகால் நீர்படுக்கு மாறு'.

300.வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயோர்

புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே

கண்பாட்ட பூங்காவிக் கானலம் தண்சேர்ப்ப!

'வெண்பாட்டம் வெள்ளம் தரும்'.

301.வாள்திற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று

வீட்டிய சென்றார் விளங்கொளி - காட்டப்

பொறுவரு தன்மைகண்(டு) அஃதொழிந்தார் அஃதால்

'உருவு திருவூட்டு மாறு'.

302.வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி

மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை

புலிகலாம் கொள்யானைப் பூங்குன்ற நாட!

'வலியலாந் தாக்கு வலிது'.

303.ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன்

தன்னை எனைத்தும் வியவற்க - துன்னினார்

நன்மை யிலராய் விடினும் நனிபலராம்

'பன்மையிற் பாடுடைய தில்'.

304.தன்னலி கிற்பான் தலைவரின் தானவற்குப்

பின்னலி வானைப் பெறல்வேண்டும் - என்னதூஉம்

வாய்முன்ன தாக வலிப்பினும் 'போகாதே

நாய்ப்பின்ன தாகத் தகர்'.

305.யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்

வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று - கூடப்

படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே

'இடைநாயிற்(று) என்பிடு மாறு'.

306.இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே

அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்

கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே

'சிறுகுரங்கின் கையால் துழா'.

307.மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)

ஆற்றும் பகையால் அவர்களைய - வேண்டுமே

வேற்றுமை யார்க்குமுண் டாகலான் 'ஆற்றுவான்

நூற்றுவரைக் கொன்று விடும்'.

308.தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக்

குள்வாழ் பகையைப் பெறுதல் உறுதியே

கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ

'முள்ளினால் முட்களையு மாறு'.

309.நலிந்தொருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்

மெலிந்தொருவர் வீழாமைகண்டு - மலிந்தடைதல்

பூப்பிழைத்து வண்டு புடையாடும் கண்ணினாய் !

'ஏப்பிழைத்துக் காக்கொள்ளு மாறு'.

310.மறையா(து) இனிதுரைத்தல் மாண்பொருள் ஈதல்

அறையான் அகப்படுத்துக் கோடல் - முறையால்

நடுவணாச் சென்றவரை நன்கெறிதல் அல்லால்

'ஒடியெறியத் தீரா பகை'.

----------------29. படைவீரர்

311.தூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள்

தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர் அஃதன்றிக்

காப்பின் அகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்

'யாப்பினுள் அட்டிய நீர்'.

312.உற்றால் இறைவற்(கு) உடம்பு கொடுக்கிற்பான்

மற்றவற்(கு) ஒன்னாரோ(டு) ஒன்றுமோ - தெற்ற

முரண்கொண்டு மாறாய உண்ணுமோ 'உண்ணா

இரண்டேறு ஒருதுறையுள் நீர்'.

313.ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத்து

ஆற்றாதார் வேந்தனை நோவது சேற்றுள்

வழாஅமைக் காத்தோம்பி 'வாங்கும் எருதாங்கு

எழாஅமைச் சாக்கா டெழல்'.

314.தாரேற்ற நீண்மார்பின் தம்இறைவன் நோக்கியக்கால்

போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ?

யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக காணுங்கால்

'ஊர்மேற்ற தாம்அமணர்க்(கு) ஓடு'.

315.செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்

தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம்

வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும்

'சோரம் பொதியாத வாறு'.

316.உரைத்தாரை மீதுரா மீக்கூற்றம் பல்லி

நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப்

பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப !

'நரிக்கூஉக் கடற்கெய்தா வாறு'.

317.அமர்நின்ற போழ்தின்கண் ஆற்றுவா ரேனும்

நிகரின்றி மேல்விடுதல் ஏதம் - நிகரின்றி

வில்லொடுநே ரொத்த புருவத்தாய் ! அஃதன்றோ

'கல்லொடு கையெறியு மாறு'.

318.வரைபுரை வேழத்த வன்பகையென் றஞ்சா

உரைநடை மன்னருள் புக்காங்(கு) அவையுள்

நிரையுரைத்துப் போகாதொன் றாற்றத் துணிக

'திரையவித்து ஆடார் கடல்'.

319.காத்தாற்று நிற்பாரைக் கண்டால் எதிருரையார்

பார்த்தாற்றா தாரைப் பரியாது மீதூர்தல்

யாத்ததே சில்லார் படையாண்மை 'நாவிதன்வாள்

சேப்பிலைக்குக் கூர்த்து விடல்'

320.இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்

அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி

இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்

'இருளின் இருந்தும் வெளி'.

321.உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச்

செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத்

தருக்கினால் தம் இறைவன் கூழுண் பவரே

'கருக்கினால் கூறைகொள் வார்'.

322.அமர்விலங்கி ஆற்ற அறியவும் பட்டார்

எமர்மேலை இன்னரால் யார்க்குரைத்தும் என்று

தமர்மறையால் கூழுண்டு சேறல் அதுவே

'மகன்மறையாத் தாய்வாழு மாறு'.

323.உறுகண் பலவும் உணராமை கந்தாத்

தறுகண்மை ஆகாதாம் பேதை- தறுகண்

பொறிப்பட்ட வாறல்லால் பூணாதென் றெண்ணி

'அறிவச்சம் ஆற்றப் பெரிது'.

324.தன்னின் வலியானைத் தானுடையன் அல்லாதான்

என்ன குறையன் இளையரால்? மன்னும்

புலியிற் பெருந்திறல வாயினும் 'பூசை

எலியில் வழிப்பெறா பால்'.

325.கொடையும் ஒழுக்கமும் கோளுள் ளுணர்வும்

உடையர் எனப்பட்டு ஒழுகிப் பகைவர்

உடையமேற் செல்கிற்கும் ஊற்றம் இலாதார்

'படையின் படைத்தகைமை நன்று'.

326.இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்

தருகென்றாற் றன்னையரும் நேரார் - செருவறைந்து

பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்

'வாழைக்காய் உப்புறைத்தல் இல்'.

------------30. இல்வாழ்க்கை

327.நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு

ஊணின்றி ஆகாது உயிர்வாழ்க்கை - பேணுங்கால்

கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்!

'வித்தின்றிச் சம்பிரதம் இல்'.

328.உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு

பிரிவின்றிப் போற்றப் படுவார் - திரிவின்றித்

தாம்பெற் றதனால் உவவார் 'பெரிதகழின்

பாம்புகாண் பாரும் உடைத்து'.

329.அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்

புறத்தால் பொலிவுறல் வேண்டும் - எனைத்தும்

படுக்கை இலராயக் கண்ணும் 'உடுத்தாரை

உண்டி வினவுவார் இல்'.

330.சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பில்தம்

இல்லாளே வந்த விரும்தோம்பிச் - செல்வத்து

இடரின்றி ஏமாந் திருந்தாரே 'நாளும்

கடலுள் துலாம்பண்ணி னார்'.

331.எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்

செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி

மான்சேர்ந்த நோக்கினாய் ! - ஆங்க 'அணங்காகும்

தான்செய்த பாவை தனக்கு'.

332.ஒக்கும் வகையான் உடன்பொருள் சூதின்கண்

பக்கத் தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும்

மிக்க சிறப்பின ராயினும் 'தாயார்க்கு

மக்களுள் பக்கமோ வேறு'.

333.தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்

மடுத்(து)அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப

நெறியல்ல சொல்லல்நீ பாண! - 'அறிதுயில்

யார்க்கும் எழுப்பல் அரிது'.

334.விழும்இழை நல்லார் வெருள்பிணைபோல் நோக்கம்

கெழுமிய நாணை மறைக்கும் - தொழுதையுள்

மாலையும் மாலை மறுக்குறுத்தாள் அஃதால்

'சால்பினைச் சால்பறுக்கு மாறு'.

335.தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும்

தாமே தமியர் புகல்வேண்டா - தீமையான்

ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன்

'நீர்மிகின் இல்லை சிறை'.

336.நிறையான் மிகுநல்லா நேரிழை யாரைச்

சிறையான் அகப்படுத்தல் ஆகா - அறையோ

வருந்த வலிதினின் யாப்பினும் 'நாய்வால்

திருந்துதல் என்றுமோ இல்'.

337.நல்கூர்ந் தவர்க்கு நனிபெரியர் ஆயினார்

செல்விருந் தாகிச் செலவேண்டா - ஓல்வது

இறந்தவர் செய்யும் வருத்தம் 'குருவி

குறங்கறுப்பச் சோரும் குடர்.'

338.உடுக்கை மருந்துறையுள் உண்டியோ(டு) இன்ன

கொடுத்துக் குறைதீர்த்தல் ஆற்றி - விடுத்தின்சொல்

ஈயாமை என்ப 'எருமை எறிந்தொருவர்

காயக்கு லோபிக்கும் ஆறு'.

339.தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல

செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்

சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே

'நுகத்துப் பகலாணி போன்று'.

340.உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தக்கால்

கொள்ளும் பொழுதே கொடுக்கதாம் - கொள்ளார்

நிலைப்பொருள் என்றதனை நீட்டித்தல் வேண்டா

'புலைப்பொருள் தங்கா வெளி'.

341.நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்

நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோ யும்

குன்றகல் நன்னாட! கூறுங்கால் 'இல்லையே

ஒன்றுக்(கு) உதவாத ஒன்று'.

342.விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப்

படர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாப்

பெற்ற விடக்கு நுகர்தல் 'கடல்நீந்திக்

கற்றடியுள் ஆழ்ந்து விடல்'.

343.செறலிற் கொலைபுரிந்து சேண்உவப்பார் ஆகி

அறிவின் அருள்புரிந்து செல்லார் - பிறிதின்

உயிர்செகுத்(து) ஊன்துய்த்(து) ஒழுகுதல் ஓம்பார்

'தயிர்சிதைத்து மற்றொன்(று) அடல்'.

344.நன்கொன்(று) அறிபவர் நாழி கொடுப்பவர்க்(கு)

என்றும் உறுதியே சூழ்க எறிதிரை

சென்றுலாம் சேர்ப்ப ! அதுபோல 'நீர்போயும்

ஒன்றிண்டாம் வாணிகம் இல்'.

345.தமனென்று இருநாழி ஈந்தவன் அல்லால்

நமனென்று காயினும் தான்காயான மன்னே!

அவனிவன் என்றுரைத்து எள்ளிமற் 'றியாரே

நமநெய்யை நக்கு பவர்'

346.நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்

கேடு பிறரோடு சூழ்தல் - கிளர்மணி

நீடுகல் வெற்ப ! நினைப்பின்றித் 'தாமிருந்த

கோடு குறைத்து விடல்'.

347.பண்டின ரென்று தமரையும் தம்மையும்

கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்

விண்டவரோ(டு) ஒன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ்

'உண்டஇல் தீயிடு மாறு'

--------31. உறவினர்

348.தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க்(கு) உற்ற(து)

எமக்குற்ற தென்றுணரா விட்டாக்கால் என்னாம்

இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட !

'உமிக்குற்று கைவருந்து மாறு'.

349.சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்

தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்

செல்லாமைக் காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்

'எல்லாம்பொய் அட்டூணே வாய்'.

350.அல்லல் ஒருவர் அடைந்தக்கால் மற்றவர்க்கு

நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல

வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே

'மனைமர மாய மருந்து'.

351.மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வதென்?

மையார் இருங்கூந்தல் பைந்தொடி ! எக்காலும்

செய்யார் எனினும் தமர்செய்வர் 'பெய்யுமாம்

பெய்யா தெனினும் மழை'.

352.முன்னின்னார் ஆயினும் மூடும் இடர்வந்தால்

பின்னின்னார் ஆகிப் பிரியார் ஒருகுடியார்

பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர !

'துன்னினார் அல்லார் பிறர்'.

353.உளைய உரைத்து விடினும் உறுதி

கிளைகள்வாய்க் கேட்பதே நன்றாம் - விளைவயலுள்

பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர !

'தாய்மிதித்து ஆகா முடம்'.

354.தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால்

என்ன படினும் அவர்செய்வ செய்வதே

இன்னொலி வெற்ப! இடரென்னை 'துன்னூசி

போம்வழி போகும் இழை'.

355.கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்

ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்

பொருகடல் தண்சேர்ப்ப ! பூந்தா மரைமேல்

'திருவோடும் இன்னாது துச்சு'.

356.பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா

ஈரைம் பதின்மரும் போரெதிர்ந்(து) ஐவரோடு

ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்

'காதலோ(டு) ஆடார் கவறு'.

-------------32. அறம் செய்தல்

357.சிறத்த நுகர்ந்தொழுகும் செல்வம் உடையார்

அறஞ்செய்து அருளுடையர் ஆதல் - பிறங்கல்

அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே

'சுமையொடு மேல்வைப்ப மாறு'.

358.வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்

துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்

தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ

'எய்ப்பினில் வைப்பென் பது'.

359.மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால்

செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியல்

சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய்! - 'பைங்கரும்பு

மென்றிருந்து பாகு செயல்'.

360.ஈனுலகத் தாயின் இசைபெறூஉம் அஃதிறந்

தேனுலகத் தாயின் இனிததூஉம் - தானொருவன்

நாள்வாயும் நல்லறம் செய்வார்க்கு இரண்டுலகும்

'வேள்வாய்க் கவட்டை நெறி'.

361.மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை

ஆய்வின்றிச் செய்யாதார் பின்னே வழிநினைந்து

நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை

'நாய்காணின் கற்காணா வாறு'.

362.தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்

தொக்க வகையும் முதலும் அதுவானால்

மிக்க வகையால் அறஞ்செய்க எனவெகுடல்

'அக்காரம் பால்செருக்கும் ஆறு'.

363.உலப்பில் உலகத்து உறுதியை நோக்கிக்

குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்

மலைத்தழு(து) 'உண்ணாக் குழவியைத் தாயார்

அலைத்துப்பால் பெய்து விடல்'.

364.அறஞ்செய் பவருக்கும் அறிவுழி நோக்கித்

திறந்தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்றாம்

புறஞ்செய்யச் செல்வம் பெருகும் 'அறஞ்செய்ய

அல்லவை நீங்கி விடும்'.

365.தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்

ஆற்றும் துணையும் அறஞ்செய்க ! - மாற்றின்றி

'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து

துஞ்ச வருமே துயக்கு'.

366.பட்ட வகையால் பலரும் வருந்தாமல்

கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்

முட்டுடைத் தாகி 'இடைதவிர்ந்து வீழ்தலின்

நட்டறான் ஆதலே நன்று'.

367.பலநாளும் ஆற்றார் எனினும் அறத்தைச்

சிலநாள் சிறந்தவற்றாற் செய்க - கலைதாங்கி

நைவது போலும் நுசுப்பினாய் ! 'நல்லறம்

செய்வது செய்யாது கேள்'.

368.நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண்

நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும்

போற்றிப் புறந்தந்(து) அகப்பட்ட ஒண்பொருட்கும்

'காப்பாரில் பார்ப்பார் மிகும்.'

369.இன்றி யமையா இருமுது மக்களைப்

பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ

ஒன்றும் வகையான் அறம்செய்க 'ஊர்ந்துருளின்

குன்று வழியடுப்ப தில்'.

370.அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை

முற்ற அறிந்தார் முதலறிந்தார் - தெற்ற

முதல்விட் டஃதொழிந்தோர் ஓம்பா ஒழுக்கம்

'முயல்விட்டுக் காக்கை தினல்'.

371.இம்மைத் தவமும் அறமும் எனஇரண்டும்

தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல்

இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும்

'தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு.'

---------------33. ஈகை

-372.சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்

பெரிய பொருள்கருது வாரே - விரிபூ

விராஅம் புனலூர ! வேண்(டு)'அயிரை விட்டு

வராஅல் வாங்கு பவர்'.

373.கரப்புடையார் வைத்த கடையும் உதவா

துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்

நிரப்பிடும்பை மிக்கார்க்கு உதவஒன் றீதல்

'சுரத்திடைப் பெய்த பெயல்'.

374.பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது

வல்லான் தெரிந்து வழங்குங்கால் - வல்லே

வளநெடிது கொண்ட(து) அறாஅது அறுமோ

'குளநெடிது கொண்டது நீர்?'.

375.நினைத்த(து) இதுவென்றந் நீர்மையே நோக்கி

மனத்தது அறிந்தீவார் மாண்டார் - புனத்த

குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!

'கடிஞையில் கல்லிடுவார் இல்'.

376.கூஉய் கொடுப்பதொன் றில்லெனினும் சார்ந்தார்க்குத்

தூஉய்ப் பயின்றாரோ துன்பம் துடைக்கிற்பார்

வாய்ப்புத்தான் 'வாடியக் கண்ணும் பெருங்குதிரை

யாப்புள்வே றாகி விடும்'.

377.அடுத்தொன்(று) இரந்தார்க்கொன்று ஈந்தாரைக் கொண்டார்

படுத்தேழை யாமென்று போகினும் போக

அடுத்தேறல் ஐம்பாலாய் ! யாவர்க்கே யாயினும்

'கொடுத்தேழை யாயினர் இல்'.

378.இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்

கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற்

துறைக்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!

'இறைத்தோறும் ஊறும் கிணறு'.

379.இரவலர் தம்வரிசை என்பார் மடவார்

கரவலராய்க் கைவண்ணம் பூண்ட - புரவலர்

சீர்வரைய ஆகுமாம் செய்கை சிறந்தனைத்தும்

'நீர்வரைய வாநீர் மலர்'.

380.தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர

அடுத்தர என்றாற்று வாழியரோ என்றான்

தொடுத்தின்னார் என்னலோ வேண்டா 'கொடுப்பவர்

தாமறிவார் தஞ்சீர் அளவு'.

381மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு - நீருலையுள்

பொன்தந்து கொண்டு புகாவாக நல்கினாள்

'ஒன்றுறா முன்றிலோ இல்'.

382.ஏற்றார்கட் கெல்லாம் இசைநிற்பத் தாமுடைய

மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை - மாற்றாரை

மண்ணசுற்றிக் கொள்நிற்கும் ஆற்றலார்க்(கு) என்னரிதாம்

'பெண்பெற்றான் அஞ்சான் இழவு'.

383.பயன்நோக்கா(து) ஆற்றவும் பாத்தறிவொன் றின்றி

இசைநோக்கி ஈகின்றார் ஈகை - வயமாப்போல்

ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப!

'கூலிக்குச் செய்துண்ணு மாறு'.

384.மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்

பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன்

கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்

'இரந்தூட்குப் பன்மையோ தீது'.

385.தோற்றம் பெரிய நசையினார் அந்நசை

ஆற்றா தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள்

கயற்புரை உண்கண் கனங்குழாய் ! அஃதால்

'உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு'.

386.காப்பிகந்(து) ஓடிக் கழிபெருஞ் செல்வத்தைக்

கோப்பெரியான் கொள்ளக் கொடுத்திராதென் செய்வர்?

நீத்தப் பெரியார்க்கே யாயினும் 'மிக்கவை

மேவிற் பரிகாரம் இல்'.

------------------34. வீட்டு நெறி

387.எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும்

மன்னர் உடைய உடைமையும் - மன்னரால்

இன்னர் எனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்

'தம்மை உடைமை தலை.'

388.அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்

தொடங்கிய மூன்றினால் மாண்டீண்டு - உடம்பொழியச்

செல்லும்வாய்க்(கு) ஏமம் சிறுகாலைச் செய்யாரே

'கொல்லிமேல் கொட்டு வைத்தார்'.

389.நட்டாரை யாக்கிப் பகைதணித்து வையெயிற்றுப்

பட்டார் துடியிடை யார்ப்படர்ந்(து) - ஒட்டித்

தொடங்கினார் இல்லத்த தன்பின் 'துறவா

உடம்பினான் என்ன பயன்?'

390.இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்

நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) - எல்லாம்

ஒருதலையாச் சென்று துணியா தவரே

'இருதலையும் காக்கழித் தார்'.

391.வளமையும் தேசும் வலியும் வனப்பும்

இளமையும் இற்பிறப்பும் எல்லாம் - உளவாய்

மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் 'கூற்றம்

குதித்துய்ந்து அறிவாரோ இல்'.

392.கொண்டொழுகும் மூன்றற்(கு) உதவாப் பசித்தோற்றம்

பண்டொழுகி வந்த வளமைத்(து)அங்(கு) - உண்டது

கும்பியினும் திச்சென்(று) அறிதலால் 'தன்னாசை

அம்பாயுள் புக்கு விடும்'.

393.செல்வத் துணையும்தம் வாழ்நாள் துணையும்தாம்

தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து

பள்ளிப்பால் வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே

'முள்ளித்தேன் உண்ணு மவர்'.

394.வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து செல்குவை

என்னெஞ்சே ! இன்றிழிவை யாயினாய் - சென்னெஞ்சே!

இல்சுட்டி நீயும் இனிதுரைத்துச் சாவாதே

'பல்கட்டப் பெண்டீர் மகார்'.

395.சிறந்ததம் மக்களும் செய்பொருளும் நீக்கித்

துறந்தார் தொடர்ப்பாடு எவன்கொல்? -கறங்கருவி

ஏனல்வாய் வீழும் மலைநாட ? அஃதன்றோ

'யானைபோய் வால்போகா வாறு'.

396.எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட

வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும்

கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே

'குழிப்புழி ஆற்றா குழிக்கு'.

397.திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக

எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்

சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்

'நீரற நீர்ச்சார் வறும்'.

398.ஓதநீர் வேலி உலகத்தார் அந்நெறி

காதலர் என்பது அறிந்தலால் - யாதொன்றும்

கானக நாட ! பயிலார் 'பயின்றது

வானகம் ஆகி விடும்.

399.பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார்

நிரம்பிய காட்சி நினைந்தறிந்து கொள்க

வரம்பில் பெருமை தருமே 'பரம்பூரி

என்றும் பதக்கே வரும்' 

(குறிப்பு : தற்சிறப்புப் பாயிரமும் கடவுள் வணக்கமும் சேர்த்து மொத்தம் 401 பாடல்கள்).

பழமொழி நானூறு முற்றிற்று





lt;!- start disable copy paste --> </!->

No comments:

Post a Comment